பேன் தொல்லைக்கு நேச்சுரல் ரெமிடி இதோ!!

0
284
#image_title

பேன் தொல்லைக்கு நேச்சுரல் ரெமிடி இதோ!!

ஆண், பெண் என்று அனைவரும் பேன் தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பேன் ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.

இந்த ஈறு, பேன் தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்ப்படி செய்து பார்க்கவும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*வேப்பிலை

*செம்பருத்தி பூ

*துளசி இலை

செய்முறை…

முதலில் 10 செம்பருத்தி பூ, 1 கைப்பிடி அளவு வேப்பிலை, 1/4 கைப்படி அளவு துளசி எடுத்து வெயிலில் நன்கு உலர்திக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் காயவைத்த அனைத்து பொருட்களையும் தனி தனியாக அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் அதில் தயார் செய்து வைத்துள்ள வேப்பிலை பொடி, செம்பருத்தி பூ பொடி, துளசி பொடி ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும். தினமும் தலைக்கு இந்த எண்ணையை பயன்படுத்தி வந்தால் பேன், ஈறு தொல்லை அடியோடு நீங்கும்.