கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்புமா சென்னை? பீதியை கிளப்பும் ஹாங்காங் பயணி!

0
80

கடந்த மாதம் 27-ம் தேதி ஹாங்காங்ல் இருந்து Hwang shin hung என்ற பெண்மணி சென்னை வந்துள்ளார். இப்பெண்மணி சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள பிரபல அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.

இவர் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மருத்துவர்களுடன் அந்த அப்பார்ட்மெண்ட்க்கு விரைந்த பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் Hwang shin hung -ஐ பரிசோதனை செய்தனர். அதில் கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இவர் மீது இல்லை என உறுதி செய்தனர்.

இதனையடுத்து இவர் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டார். ஆனால் இவர் கடந்த சிலநாட்களாக பாதுகாப்பை மீறி வெளியே சென்று வருவதாக புகார் எழுந்தது.

சுகாதார துறையினர் அப்பெண்மணியை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Parthipan K