தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Parthipan K

Husband burnt his wife by pouring kerosene in Tuticorin district! There is a lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல கடம்பை சேர்ந்தவர் சந்தனம். அவரது மகன் முத்துக்குமார் (34). இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பா (35) என்பவருடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தனம் பாப்பாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று  வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது அந்த தகராறில் கணவர் முத்துக்குமார், மாமனார் சந்தனம், மாமியார் சந்திரபுஷ்பம்  ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பாப்பா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.அக்கம் பக்கத்தினர் பாப்பாவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீசாரிடம் அவரை கணவர், மாமனார் ,மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் மேலும் அவர்கள் தான் என்னை கொலை  செய்ய திட்டமிட்டு தகராறு ஏற்படுத்தி இந்த தகராறு மூலம் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர் இந்த சம்பவம் அனைத்தும் அவர்களின் திட்டமே என்று வாக்குமூலம் அளித்தார்.

இந்த வாக்குமூலத்தின் மூலம் முத்துக்குமார் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்தனர். இந்நிலையில் பாப்பா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  இது குறித்து அவரிகளின் மீது  போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.