“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!

0
64
#image_title

“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!

மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு வலி ஏற்பட்டால் அவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். மலத்தை உரிய நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்து வருவதால் அவை நாளடைவில் மூல நோயாக மாறிவிடுகிறது.

இந்த மூல நோயை கட்டுக்குள் வைக்க வாழைப்பூ மற்றும் முள்ளங்கி பானம் குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைப்பூ
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள வாழைப்பூவை நறுக்கி அதில் சேர்க்கவும். வாழைப்பூ சேர்த்த தண்ணீரை 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஆறிவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் மூல நோய் முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)முள்ளங்கி(நறுக்கியது) – 2 தேக்கரண்டி
2)தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

சிறிது முள்ளங்கியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்வதினால் மூல நோய் புண்கள் விரைவில் ஆறும்.