இந்த ஒரு டம்ளர் மூலிகை தண்ணீர் இருந்தால் உடல் எடை மளமளவென குறையும்!!

0
108
#image_title

இந்த ஒரு டம்ளர் மூலிகை தண்ணீர் இருந்தால் உடல் எடை மளமளவென குறையும்!!

 

நம் உடல் எடையை குறைத்துக் கொள்ளவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் எந்த மருந்தை தயார் செய்து எவ்வாறு இதை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

இதை செய்ய தேவையான பொருள்கள்…

 

* பட்டை

* சீரகம்

* மிளகு

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் எடுத்து வைத்துள்ள பட்டை, சீரகம், மிளகு மூன்றையும் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

 

நன்கு கொதிக்க வைத்த பிறகு இதை ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதில் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.

 

இவ்வாறு காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்கும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் குடலில் உள்ள நச்சுக் கிருமிகள் அனைத்தும் வெளியேறும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடல் எடை குறையும். புத்துணர்ச்சி கிடைக்கும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். மன அழுத்தம் குறையும்.

 

இந்த தண்ணீர் பசி உணர்வை குறைக்கும். ஏனென்றால் இந்த தண்ணீரை குடிக்கும் பொழுது வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை கொடுக்கும். இதனால் அதிகம் நாம் சாப்பிடமாட்டோம். எளிமையாக உடல் எடையை குறைக்கலாம்.