உங்கள் வீட்டில் இந்த பொருட்களெல்லாம் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்கள்..!!

0
54
#image_title

உங்கள் வீட்டில் இந்த பொருட்களெல்லாம் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்கள்..!!

நம் வீட்டை அழகு படுத்துவதில் பொருட்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் சிலப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பதால் நம் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகமாகும். அது மாதிரியான பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.

வீட்டில் கட்டாயம் இருக்கக் கூடாத பொருட்கள்:-

**உடைந்த கண்ணாடி – வீட்டில் கண்ணாடி பொருட்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால் விபத்துகள், செலவுகள் அதிகரிக்கும்.

**ஓடாத கடிகாரங்கள் – நிறைய கடன் பிரச்சனை, குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும்.

**காய்ந்த செடி – தொழில் நஷ்டம், நிம்மதி இன்மை ஏற்படும்.

**துரு பிடித்த இரும்பு பொருட்கள் – எதிர் மறை ஆற்றலை உருவாக்கும். பல பிரச்சனைகள் தேடி வரும்.

**கிழிந்த துணிகள் – வீட்டில் கிழிந்த துணிகள், கிழிந்த மிதியடிகள் இருக்கக்.கூடாது இவை வீட்டில் பணக் கஷ்டத்தை தந்து கொண்டே இருக்கும்.

**இறந்தவர்களின் துணிகள், பொருட்கள், பீரோவில் வைக்கக் கூடாது. வேறு இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றால் தேவை இல்லாத எண்ணங்கள் வரும். அதேபோல் செல்லாத நோட்டுகளையும் பீரோவில் வைத்திருக்க கூடாது.

**பூஜை அறையில் ஒட்டடை, காய்ந்த பூக்கள், மாலைகள் இருக்கக் கூடாது. இதனால் பணக் கஷ்டம் ஏற்படும்.

**வீட்டு திரையில் தலை முடி இருக்கக் கூடாது. இதனால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும்.