மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!!

0
34
Important announcement for students!! You can get your score certificate from today!!
Important announcement for students!! You can get your score certificate from today!!

மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!!

இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது.

மொத்தம்  8,03,385 மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுதினர். அதில்,  7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பெண்கள் தேர்ச்சி விகிதம் 98.38% என்றும், சிறுவர்கள் 91.45% என்றும் பதிவாகி உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 326 பள்ளிகள் 100% சதவீதம்  தேர்ச்சியை வழங்கி உள்ளது.

அந்த வகையில், பன்னிரெண்டாம் வகுப்பிற்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எனவே, மாணவர்கள் அனைவரும் தங்களது பள்ளிகளுக்கு சென்று மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மேலும், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களின் மூலமாகவும் தங்களது ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், தேர்வு முடிவுகளுக்கு பிறகு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்திருந்த மாணவர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட ஒரிஜினல் சான்றிதழ்களும் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே, மாணவர்கள் கால தாமதம் செய்யாமல் தங்களுடைய ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ்களை தங்கள் படித்த பள்ளிகளிலோ எஅல்லது தேர்வு எழுதிய மையங்களிலோ சென்று உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு அரசால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

author avatar
CineDesk