கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலி பேசாததால் விபரீத முடிவு எடுத்த காதலன்! அப்பகுதி மக்கள் அதிர்ச்சி!

0
159
In Coimbatore district, the boyfriend made a tragic decision because he did not speak Kalkathali! The people of the area are shocked!
In Coimbatore district, the boyfriend made a tragic decision because he did not speak Kalkathali! The people of the area are shocked!

கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலி பேசாததால் விபரீத முடிவு எடுத்த காதலன்! அப்பகுதி மக்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் காவேரி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம்மாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். மேலும் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும். அந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக வேல்முருகனை அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

மேலும் அதன் பிறகு தனியாக வசித்து வந்த வேல் முருகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுககும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தின் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மேலும் இவர்கள் சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியது. அந்த கருத்துவேறுபாட்டினால் அந்தப் பெண்ணையும் வேல்முருகன் பெரிய நேர்ந்தது.

பிறகு வேல்முருகன் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார். மேலும் அவர் அதிக மன வேதனையுடன் காணப்பட்டார்.  அந்த மன வேதனை தாங்காமல் அவரது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். மேலும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வெளியேவே நின்று கொண்டு அந்த பெண்ணை வேல்முருகன் அழைத்தார் ஆனால் அந்த பெண் வீட்டை  விட்டு வெளியே வராத காரணத்தால் அந்த பெண்ணின் தம்பி வெளியே வந்துள்ளான்.

மேலும் அந்த பெண்ணின் தம்பி எனது அக்கா உன்னிடம் பேச மாட்டாள் நீ இங்கிருந்து உடனடியாக சென்று விடு எனவும் கூறினான். வேல்முருகன் காதலி அவருடன்  பேச மறுத்ததால் வேதனையில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட அவரதின்  உடலில் தீ வைத்துக் கொண்டார்.

மேலும் அக்கம் பக்கத்தினர் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக வேல்முருகனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை  தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் . மேலும் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார்க்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

author avatar
Parthipan K