வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா!! இந்தியாவுக்கு 3வது பதக்கம்!!!

Photo of author

By Jayachithra

வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா!! இந்தியாவுக்கு 3வது பதக்கம்!!!

Jayachithra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று காலை நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா, துருக்கி வீராங்கனை புஷானேஸ் கர்மெனஸியை அறையிறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். இப்போட்டியில் 0-5 என்ற கணக்கில் தோற்றதால் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இதுவரை இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்கில் பளூ தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும், பேட்மிட்டன் போட்டியில் பிவி சிந்து வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர். தற்போது இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கத்தை வென்றுக் கொடுத்துள்ளார் லவ்லினா.