பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு!

0
296
#image_title

பிரச்சனை நிழல் போல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் தான் தீர்வு!

மூன்று மாதங்களில் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் காணாமல் போகச் செய்யும் எளிய பரிகாரம் இவை.

இந்த பரிகாரத்தை தினமும் செய்ய வேண்டும். சரி இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது?

பொதுவாக வீட்டு வாசலில் காலை நேரத்தில் மாட்டு சாணத் தண்ணீரை தெளிப்பது வழக்கம். மாட்டு சாணம் இல்லாதவர்கள் தண்ணீர் மட்டும் தெளிப்பார்கள்.

மாட்டு சாணம் அல்லது தண்ணீர் எதுவாக இருந்தாலும் அதில் சிறிது மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வாசலில் தெளிக்கவும். இவ்வாறு செய்வதால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதேபோல் தண்ணீர் தெளித்த பின்னர் கோலமிடுவதும் ஒரு வழக்கம் தான். இவ்வாறு கோலமிட பயன்படுத்தும் கோலமாவு பச்சரிசி மாவாக இருந்தால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதினால் தோஷங்கள் நீங்கி நல்லது மட்டுமே நடக்கும்.

அதேபோல் குளம் அல்லது ஆற்றில் வாழும் மீன்களுக்கு கோதுமை மாவை உருண்டை பிடித்து உணவாக போட்டால் கஷ்டங்கள், பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ வழி பிறக்கும்.

இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு செய்து வர வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்கள், பாவங்கள், பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.