மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்!

0
128
#image_title

மூல நோயை அடியோடு அறுத்து எறியும் பவர்புல் நாட்டு வைத்தியம்!

மூல நோய் உருவாக பல வித காரணங்கள் இருக்கின்றது. மலம் கழித்தலில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும் இந்த மூல நோயை குணப்படுத்த தெரியாமல் பலரும் அல்லல் பட்டு வருகின்றனர்.

உணவு பழக்க வழக்கம் மாறிவிட்டதால் இது போன்ற பல வித நோய் பாதிப்புகள் உருவெடுத்து வருவது சாதாரண ஒன்றாகிவிட்டது.

இந்த மூல நோயை பைசா செலவின்றி குணமாக்கி கொள்ள நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்திய குறிப்பை தவறாமல் பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்…

*துத்தி கீரை பொடி – 2 ஸ்பூன்
*நத்தை பற்பம் – 1 ஸ்பூன்
*நெய் – தேவையான அளவு

செய்முறை…

துத்தி கீரையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் துத்தி கீரை பொடி மற்றும் நத்தை பற்பம் 1 ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும். நத்தை பற்பம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி பயன்படுத்தவும்.

பிறகு 1 ஸ்பூன் அளவு நெய் சேர்த்து கலந்து விடவும். இவ்வாறு செய்தால் பேஸ்ட் போல் கிடைக்கும்.

இந்த பேஸ்டை காலை ஒரு ஸ்பூன் மற்றும் மாலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் உள்ளிட்ட அனைத்து மூல நோயும் குணமாகும். துத்தி கீரைக்கு பைல்ஸ்(மூல நோய்) குணமாக்கும் தன்மை உள்ளது.