விற்பனைக்கு வருகிறதா ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்? தீபாவின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

0
233

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேளாண் நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றினார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை எதிர்க்கும் விதமாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவருடைய சகோதரர் தீபக், உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது குறித்து சட்டம் இயற்றுவதற்கு அரசுக்கு அதிகாரமில்லை. ஆகவே வேதா நிலையத்தை அரசுடைமயாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விளக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வேளாண் நிலையம் மற்றும் மெரினாவில் இருக்கின்ற பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு? என கேள்வி எழுப்பியது அதோடு, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என்று தெரிவித்து 3 வாரங்களில் வாரிசுகளிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி போயஸ் கார்டன் இல்லம் தீபா மற்றும் தீபக் உள்ளிட்ட வருடம் ஒப்படைக்கப்பட்டது இதற்கு பிறகு போயஸ் தோட்ட இல்லத்துக்கு தீபா வருகை தந்தார். அதன் பின்னர் அவர் அங்கு செல்லவில்லை. டிநகரிலிருக்கின்ற இல்லத்தில் தன்னுடைய கணவர் மாதவனுடன் அவர் வசித்து வருகிறார்.

இவ்வாறான சூழ்நிலையில், சென்னை போயஸ் கார்டனிலிருக்கின்ற வேதா இல்லத்தில் மிக விரைவில் குடியேறுபவதாக தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக, சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஜெயலலிதாவுக்கு உதவி செய்த காரணத்திற்காக அவருடைய சொத்துக்கு யாரும் உரிமை கொண்டாட இயலாது. இது சசிகலாவுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மிகப்பெரிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு போயஸ் கார்டனிலிருக்கின்ற வேதாரண்யம் எங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. விரைவில் அங்கே குடியேறப் போகிறேன். விற்பனைக்கு வரும் என்ற வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம், என்று தெரிவித்துள்ளார்.

Previous articleநீயின்றி நானில்லை! காதலன் தற்கொலை செய்து கொண்டதால் காதலி எடுத்த விபரீத முடிவு!
Next articleஅதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here