இதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!!

0
63

இதை பாலில் கலந்து குடித்தால் போதும் முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் தீரும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்கும் போது ஓடும் போது படிக்கட்டுகள் ஏறும் போது என்று எல்லா இடங்களிலும் முழங்கால் வலி வருகிறது. இந்த முழங்கால் வலி கால்களில் பலம் இல்லாததன் காரணமாக ஏற்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக இந்த முழங்கால் வலி உண்டாகிறது.

நமது பாரத தேசத்தில் மூட்டு வலி அறுவை சிகிச்சையானது ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தினமும் நடக்கிறது. இந்த மூட்டு வலி அறுவை சிகிச்சை செய்தாலும் இது பூரண குணமடைய மூன்று மாத காலம் எடுக்கும். இந்த முழங்கால் வலிக்கு நல்ல நிவாரணத்தை கொடுக்க கூடிய ஒரு ஆயுர்வேதிக் மருந்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

முறை 1: இதற்கு நமக்கு தேவைப்படுவது உலர்ந்த பேரிச்சம் பழம் ஒவ்வொரு நாள் இரவும் தூங்குவதற்கு முன் மூன்று அல்லது நான்கு பேரிச்சம் பழத்தை அதில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு தண்ணீரில் ஊற வைத்துவிட்டு தூங்க வேண்டும் காலையில் எழுந்தவுடன் தண்ணீரில் ஊறிய அந்த உலர்ந்த பேரிச்சம் பழத்தை மென்று சாப்பிட வேண்டும் மேலும் அது ஊறிய தண்ணீரையும் பருக வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் எலும்புகளுக்கு முழு பலம் கிடைத்து முழங்கால் வலியை உடனடியாக சரி செய்யும். இவ்வாறு செய்த பிறகு வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலில் கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும் குறிப்பாக சர்க்கரையை மட்டும் சேர்க்கவே கூடாது.

முறை 2: நாலு அல்லது ஐந்து உலர்ந்த பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைக்கவும். இதை இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு காலை எழுந்தவுடன் இந்த பேரிச்சம் பழத்தை மென்று சாப்பிட வேண்டும். மேலும் இந்த பாலையும் பருக வேண்டும். இந்தப் பாலில் இனிப்பு தேவைப்பட்டால் கற்கண்டை சேர்த்துக் கொள்ளலாம். இதுபோல் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வர முழங்கால் வலி பூரண குணமடையும்.

author avatar
CineDesk