மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!!

0
39

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது.

இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி ஆகியவற்றிற்கு நம் உடலில் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பதும் காரணமாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.

கால்சியம் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, சில வைட்டமின்களின் (வைட்டமின் டி3) பற்றாக்குறை நமக்கு உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. அதனால் முறையான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு வலி ஏற்படும் போது பெரும்பாலானோர் மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று எண்ணி மருத்துவரை அணுகாமலேயே மாத்திரை சாப்பிட்டு விடுகிறார்கள்.

ஆனால் அது மிகவும் தவறானது. அதைவிட எந்தவித பக்க விளைவுகளும் இன்றி இதனை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

எருக்க இலை

உப்பு

மஞ்சள்

செய்முறை

முதலில் இரண்டு எருக்க இலையை எடுத்துக்கொண்டு அதனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்பு இவற்றுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் இவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு எருக்க இலையின் சாறு முழுவதுமாக தண்ணீரில் கலக்கும் வரை கொதிக்க விட வேண்டும்.

பின்னர் ஒரு காட்டன் துணியை எடுத்து மூட்டை போன்று கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு இந்த தண்ணீரில் வைத்து எடுத்து வழி உள்ள பகுதிகளில் நன்றாக ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது அந்த இடத்தில் ரத்த ஓட்டம் சீராகி வழி அனைத்தும் பறந்து விடும்.

author avatar
Parthipan K