முகம் வெள்ளையாக மாற முல்தானி மெட்டியுடன் இதை சேர்த்தால் போதும்!! ஒரே மாதத்தில் பலன் கிடைத்துவிடும்!!

0
27
#image_title

முகம் வெள்ளையாக மாற முல்தானி மெட்டியுடன் இதை சேர்த்தால் போதும்!! ஒரே மாதத்தில் பலன் கிடைத்துவிடும்!!

முகம் வெள்ளியாக இருந்தால் அழகு என்று பெருமபாலானோர் கருத்தாக இருக்கிறது.பல பெண்களுக்கு முகம் பொலிவாகவும்,வெள்ளையாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் அதற்காக செயற்கை பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
இயற்கை முறையில் தீர்வு தேடினால் தான் அவை நிரந்தரமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*முல்தானி மெட்டி – 2 தேக்கரண்டி

*கடலை மாவு – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*தக்காளி சாறு – 3 தேக்கரண்டி

*பால் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ளவும்.அதில் 2 தேக்கரண்டி முல்தானி மெட்டி,1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு,3 தேக்கரண்டி தக்காளி சாறு மற்றும் சிறிதளவு காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

இந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாக கழுவி கொள்ளவும்.

பின்னர் ஒரு காட்டன் துணி கொண்டு முகத்தில் உள்ள ஈரத்தை துடைக்கவும்.பிறகு தயார் செய்து வைத்துள்ள கலவையை முகத்தில் போட்டு நன்கு அப்ளை செய்து கொள்ளவும்.

இந்த கலவை முகத்தில் 15 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.பின்னர் சுத்தமான தண்ணீர் கொன்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இவ்வாறு வாரத்திற்கு இருமுறை இதை முகத்திற்கு பயன்படுத்தி வந்தோம் என்றால் விரைவில் கருமை முகம் வெள்ளையாக மாறிவிடும்.அதேபோல் முகத்தில் உள்ள கரும்புள்ளி,பருக்கள் முழுமையாக நீங்கி விடும்.