முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!!

0
47
#image_title

முக அழகை கெடுக்கும் கரும்புள்ளி மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு ஆச்சர்யப் படுவீங்க!!

ஆண்களோ பெண்களோ தங்களது முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள்.ஆனால் அனைவருக்கும் முக அழகு கிடைக்குமா? என்றால் சந்தேகம் தான்.காரணம் முகத்தில் கரும்புள்ளி,பருக்கள்,வடுக்கள்,தழும்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது.குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தென்பட ஆரமித்து விட்டால் அவ்வளவு தான் முகம் தான் அழகை இழந்து பொலிவற்று காணப்பட்டு விடும்.இதை சரி’செய்ய இயற்கை வழிகளை பாலோ செய்வது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி பழம் – 10 துண்டுகள்

*வெள்ளரிக்காய் – 10 துண்டுகள்

*உருளைக்கிழங்கு – 1

*மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி

*பால் – 4 தேக்கரண்டி

*கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 1 கீத்து பப்பாளி பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து விழுதாக்கி ஒரு பவுலுக்கு வடிகட்டவும்.

அடுத்து 1 கீத்து வெள்ளரிக்காயை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து விழுதாக்கி பப்பாளி பழ சாற்றுடன் வடிகட்டவும்.

அதேபோல் 1 உருளைக்கிழங்கினை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து விழுதாக்கி பப்பாளி சாறு + வெள்ளரி சாறு உள்ள பவுலில் வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் அதில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.அடுத்ததாக 4 தேக்கரண்டி பால் மற்றும் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை முகத்தின் மேல் போட்டு நன்கு அப்ளை செய்து கொள்ளவும்.15 அல்லது 20 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.இவ்வாறு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் சில நாட்களில் மறைந்து முகம் பொலிவாக இருக்கும்.