கண்புரை சரியாகி கூர்மையான பார்வை கிடைக்க இதை சாப்பிட்டால் போதும்!!

0
29

கண்புரை சரியாகி கூர்மையான பார்வை கிடைக்க இதை சாப்பிட்டால் போதும்!!

நிறைய பேருக்கு வயதிற்கு சம்பந்தமில்லாமல் கண்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கண்களில் எரிச்சல் ஏற்பட்டு பார்ப்பதற்கு கூட சிலர் சிரமப்படுகின்றன. கண்களில் பல பேர் சந்தித்து வரக்கூடிய ஒரு பிரச்சனை தான் கண்புரை ஏற்படுதல். இதனால் பார்வை மிகவும் மந்தமாக தெரியும்.

அடுத்ததாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதால் கண்ணில் இருக்கக்கூடிய ரெட்டினா பகுதி பாதிக்கப்படுவது, மேலும் இன்னும் சிலருக்கு குளுக்கோமா பிரச்சனை ஏற்படுவது. ஒரு சிலருக்கு கிட்ட பார்வை நன்றாக தெரியும் ஆனால் தூரப்பார்வை தெரியாது.

மற்ற சிலருக்கு தூரப்பார்வை நன்றாக இருக்கும் ஆனால் கிட்ட பார்வை தெரியாது. இதுபோன்ற கண் சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்யக்கூடிய சில ஆகாரங்கள் உள்ளது.

இதில் முதன்மையானது காய்கறிகள் மற்றும் கீரைகள். இதில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கக்கூடிய முருங்கைக் கீரையை எடுத்துக் கொள்ளவும். இந்த முருங்கைக்கீரை மார்க்கெட்டில் சுலபமாக கிடைப்பதால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தவறாமல் சாப்பிட்டு வரவும்.

சூரியனிடமிருந்து வரக்கூடிய புற ஊதா கதிர்களிடமிருந்து நம் கண்ணை பாதுகாக்கவும் ரெட்டினா செய்தமடையாமல் தடுக்கவும் நமக்கு ஒமேகா 3 பேட்டி ஆசிட் தேவைப்படுகிறது. இந்த ஒமேகா 3 பேட்டி ஆசிட் ஆனது அதிகம் காணப்படும் பொருள் ஆளி விதைகள் மற்றும் வால்நட்ஸ். இதை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிட்டு வர கண் சம்பந்தமான அத்தனை பிரச்சனைகளும் குணமடையும்.

இதோடு ஒமேகா சிக்ஸ் பேட்டி ஆசிடும் நம் கண்ணிற்கு மிகவும் தேவைப்படும் ஒரு சத்து ஆகும். இது மிகுந்து காணப்படுவது தான் வால்நட்ஸ். இந்த வால்நட்சியும் ஆளி விதைகளை போலவே இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிட்டு வர கண்களில் இருக்கக்கூடிய கார்னியா மற்றும் லென்ஸ்க்கு இடையில் இருக்கக்கூடிய ப்ளூயிடை அதிகப்படுத்தும்.

அடுத்ததாக வைட்டமின் சி. வைட்டமின் சி யில் anti ஆக்சிடென்ட் அதிகமாக காணப்படும் இது கண் நரம்புகள் தோய்வடையாமல் பாதுகாக்கும். இந்த வைட்டமின் சி அதிகம் காணப்படும் பழம் கொய்யாப்பழம் அல்லது பெரிய நெல்லிக்காய். இதை நாம் தினமும் சாப்பிடுவதால் கண் சம்பந்தமான தொற்றுகள் அனைத்தும் தீரும்.

அடுத்ததாக வைட்டமின் ஈ இது ஐபாலுக்கும் ரெட்டினாவுக்கும் இடையில் இருக்கக்கூடிய இடைவெளியை சரியாக வைத்துக் கொள்கிறது. மேலும் நம் கண்களில் புரை ஏற்படாமல் ஆரோக்கியமாக வைத்திருக்கு உதவும். இந்த வைட்டமின் ஈ பாதாம் பருப்பில் அதிகமாக காணப்படுகிறது. இந்த பாதாமை தினமும் நான்கிலிருந்து ஐந்து ஊறவைத்து சாப்பிடவும்.

அடுத்ததாக ஜிங்க். இது நமது கண் பார்வையை தெளிவாக வைத்திருக்க உதவுகிறது. இந்த ஜிங்க் அதிகமாக நமக்கு பூசணிக்காய் விதைகளில் கிடைக்கிறது. இதை வருத்தோ அல்லது பச்சையாகவோ தினமும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர கண் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக குணமடையும்.

இவ்வாறு இந்த ஆகாரங்களை நாம் தினமும் எடுத்துக்கொள்ள கண் புரை கண்மங்கள் கிட்ட பார்வை தூரப்பார்வை என அனைத்து விதமான கண் பிரச்சனைகளும் குணமடையும்.

author avatar
CineDesk