இதை 2 நிமிடம் தேய்த்தால் போதும் மஞ்சள் பற்கள் பளிச்சென்று வெள்ளையாக மாறும்!!

0
94
#image_title

இதை 2 நிமிடம் தேய்த்தால் போதும் மஞ்சள் பற்கள் பளிச்சென்று வெள்ளையாக மாறும்!!

நம்மில் பல பேருக்கு பற்களில் மஞ்சள் படிவதையும் சொத்தைப் பற்களால் அவதிப்படுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சிலருக்கு மஞ்சளாகவும் பச்சையாகவும் கறை படிந்து காணப்படும். இது வெற்றிலை பாக்கு, ஆல்கஹால், சிகரெட், பான் போன்றவற்றை சாப்பிடுவதால் ஏற்படும்.

சிலர் சொத்த பற்களால் தினந்தினம் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக எத்தனையோ சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் பயனளிக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர்.

இந்த பிரச்சினைகளுக்கான ஒரு இயற்கையான தீர்வை இங்கு பார்க்கலாம்.

இதற்கு முதலில் வாழைப்பழ தோலை எடுத்துக் கொள்ளவும். அந்த தோலில் வெள்ளையாக இருக்கும் பகுதியை தனியாக எடுத்து கொள்ளவும்.

இதனுடன் சிறிதளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு நம் பற்களை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் வாயில் வரக்கூடிய துர்நாற்றத்தையும் தடுக்கும்.

இதனுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த எலுமிச்சை சாறு பற்களை வெள்ளையாக்குவதோடு வாயில் ஏற்படக்கூடிய தொற்றுகளையும் சரிப்படுத்தும்.

இப்போது இந்த மூன்று பொருட்களுடன் தினமும் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாளையில் காலை ஒருமுறை இரவு தூங்குவதற்கு ஒரு முறை இதை வைத்து பல் துலக்குவதால் பற்கள் பளிச்சென்று மாறும்.

மேலும் இரு சம்மந்தமான பிரச்சனைகள் எதுவும் பற்களில் வராது இந்த ரெமிடி பல் மஞ்சள் படிவதை தடுப்பதற்கு மட்டுமல்லாமல் சொத்தை பற்களை சரி செய்யவும் பயன்படுகிறது.

வெறும் மூன்று நிமிடங்கள் பல் துலக்கினாலே போதுமானது.

இந்த ரெமிடியால் தினமும் பல் துலக்கும் போது வாய் துர்நாற்றம், சொத்தை பற்கள், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல், பல் வலி, ஈறுகளில் வீக்கம் மற்றும் மஞ்சள் படிவது என அனைத்து விதமான பிரச்சனைக்கும் இந்த ஒரு ரெமிடியை பயன்படுத்தினாலே போதும்.

நாம் எந்த உணவு சாப்பிட்ட பின்னும் வாயை தண்ணீர் ஊற்றி நன்கு கொப்பளித்து வர பற்களில் இடையில் சிக்கியுள்ள உணவுப் பொருட்கள் வந்துவிடும்.

கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை நாம் சேர்த்துக் கொள்வதால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.