சருமம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது..!!

0
221
#image_title

சருமம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது..!!

சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள யாருக்கு தான் ஆசை இருக்காது. இதற்காக கடைகளில் விற்கும் விலை அதிகமாக கெமிக்கல் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவதால் முக அழகு விரைவில் குறைந்து விடும்.

ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டு பேஸ் பேக் தயார் செய்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கற்றாழை

*சந்தனத் தூள்

*தேன்

*மஞ்சள் தூள்

செய்முறை…

முதலில் 1 கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்கி விடவும். அடுத்து 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி சந்தனத் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அடுத்து முகத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்துக் கொள்ளவும். பிறகு தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவவும்.

பின்னர் செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கருமை. கருவளையம் உள்ளிட்ட அனைத்தும் நீங்கி முகம் அழகாகவும், பொலிவாகவும் காணத் தொடங்கும்.