Friday, September 20, 2024
Home Blog Page 4912

திருவள்ளுவரை பெரியாராக மாற்றிய மு.க. ஸ்டாலின்! அதிர்ச்சியில் உறைந்த திராவிட கூடாரங்கள்

0

திருவள்ளுவரை பெரியாராக மாற்றிய மு.க. ஸ்டாலின்! அதிர்ச்சியில் உறைந்த திராவிட கூடாரங்கள்

புதுக்கோட்டை விராச்சிலையில் நேற்று நடைபெற்ற திமுக பிரமுகர் காசிவிசுவநாதன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாமனாரான காசிவிஸ்வநாதனை மணமகன் என்று பேசியதால், சற்றுநேரம் திருமணத்தில் வந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்,. இது சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு உண்டாகி வருகிறது,. இந்த சம்பவம் மறைவதற்குள் மேலும் ஒரு உளறல் பேச்சை ஸ்டாலின் பேசி சமூகவலைத்தள வாசிகளுக்கு விருந்து அளித்துள்ளார்.

இன்று திருவள்ளுவர் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யபட்டிருப்பதால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.,

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின்,. சிலை அவமதிப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்,. அவர் திருவள்ளுவர் படத்திற்கு காவி வேசம், திருநீறு அணிவித்ததற்கு ஏற்கனவே டிவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தேன். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கதக்கது. இது தொடர்புடையவர்கள் மீது உடனடியாக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளுவர் படத்திற்கு காவி வேசம் போட்டு இருப்பதற்கும், சிலை அவமதிப்பிற்கும் தொடர்புள்ளது. திருவள்ளுவரை, பெரியார் என கூறி ஸ்டாலின் உளறியதை கேட்டு அங்கிருந்த திமுகவினரும் செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்,.

நமக்கு ஏன் வம்பு,. தலைவர் எது சொன்னாலும் சரியாக தான் இருக்கும் துண்டு சீட்டு எழுதி கொடுத்தவனை தான் நாம் வெளுத்து வாங்க வேண்டும் என்று திமுகவினர் நினைத்தார்களோ! என்னவோ தெரியவில்லை.

பொதுமக்களுக்கு இடையூராக பேனர் வைத்த திமுக முக்கிய பிரமுகர்! நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்

0

பொதுமக்களுக்கு இடையூராக பேனர் வைத்த திமுக முக்கிய பிரமுகர்! நடவடிக்கை எடுப்பாரா மு.க.ஸ்டாலின்

சென்னையில் கடந்த மாதம் 12ஆம் தேதி இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி ஏறியதால் உடல் நசுங்கி உயிரிழந்தார், இது கடும் விமர்சனத்திற்கு பேனர் விவகாரத்தில் உள்ளாக்கியது,
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பிரமுகர்களை வரவேற்று பேனர்களை வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், திமுகவின் செய்தி தொடர்பாளரும் முக்கிய பிரமுகருமான ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு மகனின் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி நடந்தது. பணகுடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஷான் தாமஸ் மஹால் திருமண மண்டபம் முன்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக, தானாக முன்வந்து திமுக பிரமுகர் அப்பாவு மீது பணகுடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கழக நிகழ்ச்சிகளில் பேனர்கள் யாரும் வைக்க வேண்டாம் ‌என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்வோம் என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தனது கட்சியின் முக்கிய பிரமுகர் அப்பாவு மீது என்ன விமர்சனம் வைக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

உயிருடன் மீட்கப்பட்ட ஹரியானா சிறுமி: அதன் பின்னர் நடந்த சோகம்!

0

உயிருடன் மீட்கப்பட்ட ஹரியானா சிறுமி: அதன் பின்னர் நடந்த சோகம்!

நேற்று மாலை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்பூரா என்ற பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அவரை மீட்க உடனடியாக மீட்புப்படைகள் களமிறங்கின.

ஆழ்துளை கிணற்றில் இருந்த சிறுமி 50 அடி ஆழத்தில் இருந்ததால் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டிய மீட்புப்படையினர் இன்று காலை உயிருடன் மீட்டனர்.

ஆனால் அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிசையின் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததால் ஹர்சிங்பூரா கிராமகே சோகமயமானது

ஷிவானி என்ற அந்த குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இருப்பினும் சிகிச்சையை சிறுமியின் உடல் ஏற்கவில்லை என்பதால் உயிரிழந்துவிட்டதாகவும் டாக்டர் ரவீந்தர் சந்து என்பவர் தெரிவித்துள்ளார்.

ஷிவானி வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் தோண்டிய இந்த ஆழ்துளை கிணறு கடந்த சில மாதங்களாக மூடாமல் இருந்ததாகவும், நேற்று மாலை அந்த பகுதியில் விளையாடிய ஷிவானி தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் மீண்டும் ஒரு சிறுமி: அதிர்ச்சி தகவல்

0

சுஜித்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் மீண்டும் ஒரு சிறுமி: அதிர்ச்சி தகவல்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த வாரம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்புக்குழுவினர் ஐந்து நாட்களாக சுஜித்தை மீட்க போராடி இறுதியில் பிணமாகவே மீட்டனர். இந்த துயர சம்பவத்திற்கு பின் இனியொரு குழந்தை இதேபோல் உயிரிழந்துவிடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது

இதனையடுத்து விழிப்புணர்ச்சி ஏற்பட்ட பொதுமக்கள் தாங்களாகவே மூடப்படாமல் இருந்த பல ஆழ்துளை கிணறுகளை மூடினர். தனியார் அமைப்புகளும் இதற்கு நிதியுதவி செய்ய முன்வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

எனவே சுஜித் மரணத்தால் மக்களும் அரசும் விழிப்புணர்வு அடைந்தது என்பதால் பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்பூரா என்ற கிராமத்தில் ஐந்து வயது சிறுமி ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி இன்னும் சுஜித்தின் மரணத்தால் நாட்டு மக்கள் பாடம் கற்கவில்லை என்பதையே உணர்த்துகிறது

இந்த குழந்தையை உயிருடன் மீட்க ஹரியானா மாநில அரசும், அந்த பகுதி பொதுமக்களும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மீட்புப்படையினர், காவல்துறையினர் மீட்புப்பணியை தொடங்கிவிட்டதாகவும், எப்படியும் இந்த சிறுமியை உயிருடன் மீட்டுவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

வள்ளுவர் நாத்திகரா? அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி கருத்து!

0

வள்ளுவர் நாத்திகரா? அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி கருத்து!

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை கூட யாரும் இந்த அளவு ஆய்வு செய்திருக்க மாட்டார்கள். அதைவிடுத்து வள்ளுவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்? எந்த மதத்தை சேர்ந்தவர்? அவர் நாத்திகரா? ஆத்திகரா? வள்ளுவரை தமிழராக மட்டுமே பார்க்கின்றோம் என திராவிட அபிமானிகள் ஆழ்ந்த ஆய்வில் உள்ளனர். இந்த ஆய்வை அவர் எழுதிய திருக்குறளில் காண்பித்திருந்தால் இந்நேரம் நாடு சுபிட்சன் அடைந்திருக்கும்

இந்த நிலையில் வள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது: வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தவர் பிரிட்டிஷ் அரசு Mint தலைவரான எல்லிஸ் பிரபு 1800களில்! தங்க நாணயத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இந்த தியான உருவம் சமணத்துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை!

அமைச்சரின் இந்த டுவீட்டுக்கு பதில் அளித்துள்ள ஒரு டுவிட்டர் பயனாளி, ‘எல்லீஸ் அவர்கள் வெளியிட்ட நாணயத்தில் வள்ளுவரின் உருவம் முத்துக்குடையின் கீழ் அமர்ந்த சமண துறவியாகவே காட்டப்பட்டு உள்ளதாகவும், அவர் சமணர் என்பதை பல ஆய்வாளர்களும் ஏற்று கொண்டும் உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்னொரு டுவிட்டர் பயனாளி, ‘திருவள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி என்றும், பாற்கடலை கடைய மத்தாக மலையும் கயிறாக இருந்த பாம்பின் பெயர்தான் வாசுகி என்றும், எனவே வாசுகி இந்து என்றால் வள்ளுவரும் இந்துதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் குறித்த இந்த சர்ச்சைக்கு முடிவே இல்லையா? என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது

ஐகான் கோல்டன் விருது கமலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

0

ஐகான் கோல்டன் விருது கமலுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று முன்தினம் கோல்டன் ஐகான் விருது வழங்குவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

பிரபல அரசியல் தலைவர்களும் இந்தியாவில் உள்ள திரையுலக நட்சத்திரங்களும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். நேற்று இரவு ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் அழைத்து கமலஹாசன் வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு இந்த விருதை மத்திய அரசு இந்த விருதை கொடுத்தது சரிதானா? பாஜகவின் பின்புலமாக செயல்பட்டு வரும் அவருக்கு மத்திய அரசு விருது கொடுத்து இருப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றும் ரஜினியை பாஜக பக்கம் இழுப்பதற்காகவே இந்த விருது கொடுக்கப்பட்டதாகவும் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்து வருகின்றன

இந்த நிலையில் ஒருவேளை இந்த விருது ரஜினிக்கு பதில் கமலஹாசனுக்கு கொடுத்து இருந்தால் என்ன நடந்திருக்கும்? கமலஹாசனுக்கு கோல்டு ஐகான் விருது அறிவிக்கப்பட்டு இருந்தால் ரஜினிகாந்த் முதல் நபராக பாராட்டு தெரிவித்து தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்திருப்பார். கமலஹாசன் போல் 24 மணி நேரம் கழித்து தொலைபேசியில் மட்டும் வாழ்த்து தெரிவித்திருக்க மாட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்

அதே போல் எந்த ஒரு தொலைக் காட்சிகளிலும் கமல்ஹாசனுக்கு விருது கொடுத்தது ஏன் என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று இருக்காது. அப்படியே நடந்தாலும் அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆள் இருந்திருக்காது என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

0

வங்க தேசத்துக்கு எதிராக முதல் தோல்வி: ஓவர் கான்ஃபிடன்ஸ் காரணமா?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வென்றுள்ளதால் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிரச்சி அளித்துள்ளது

வங்கதேசம் என்ற சின்ன அணிக்கு எதிரான போட்டி என்பதால் விராத் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதேபோல் முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ரா, புவனேஷ்குமார், குல்தீப் யாதவ் ஆகியோர்களும் அணியில் இல்லை. இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை ஒன்பது டி20 போட்டிகளில் மோதியுள்ளன. தொடர்ந்து 8 போட்டிகளில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தி வந்த நிலையில் தற்போது முதல் தோல்வி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:

இந்தியா: 148/6 20 ஓவர்கள்

தவான்: 41
ரிஷப் பண்ட்: 27
ஸ்ரேயாஸ் ஐயர்: 22

வங்கதேசம்: 154/3 19.3 ஓவரகள்

முசாஃபிகுர் ரஹிம்: 60
சொளம்யா சர்கார்: 39
முகமது நயிம்: 26

ஆட்டநாயகன்: ரஹிம்

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி நவம்பர் 9ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

சரக்கு மிடுக்கு திருமாவளவனை கதறவிட்ட அதிமுக பெண் பிரமுகர்! வன்கொடுமை வழக்கில் கைது வேண்டும். விசிக

0

சரக்கு மிடுக்கு திருமாவளவனை கதறவிட்ட அதிமுக பெண் பிரமுகர்!
வன்கொடுமை வழக்கில் கைது வேண்டும். விசிக

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பெண் பிரமுகர் சுசிலா சாமியப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்துள்ளது.

அதிமுகவின் கரூர் பகுதியின் 12-ஆவது வார்டு பிரதிநிதியாக சுசிலா சாமியப்பன் இருந்து வருகிறார், சமூகவலைத்தளங்களில் முழுவீச்சில் தனது கட்சிக்காக செயல்பட்டு வருபவர்,. கட்சியின் முக்கிய செய்திகளை தனது முகநூல் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவார், தன்னுடைய சொந்தக் கருத்தையும் அவர் அவ்வப்போது பதிவிடுவார்,. இவர் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் தீவிர ஆதரவாளர் ஆவார்,. செந்தில்பாலாஜி வென்ற கரூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருபபமனு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்நிலையில்,.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கட்சி கூட்டத்தில் பேசும் போது மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களை பற்றி மிககீழ்த்தரமாக ‘சரக்கு இருக்கு எங்ககிட்ட தான் இருக்கு,. அதனால் தான் உங்கள் வீட்டுப் பெண்கள் எங்களை தேடி வருகிறார்கள்,. உங்க பசங்களுக்கு ஆண்மை இல்லை என்று கேவலமான முறையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,. திருமாவளவனை விமர்சித்து தைரியமாக துணிச்சலாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவார்,. இந்த சூழ்நிலையில் அவர் தொடர்ந்து திருமாவளவனை பற்றி அவதூறாக பதிவு செய்வதனால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் என்பவர் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்,.

புகாரில்,. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் MP மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அவதூறாகவும் ஒருமையிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கிலும் இதில் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும்,. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையான அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்,. எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது,.

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி

0

திருமண விழாவில் மாமனாரை மருமகன் என்று பேசிய மு.க.ஸ்டாலின்! திருமணத்திற்கு வந்தவர்கள் பேரதிர்ச்சி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ‌கட்சி பிரமுகர் இல்ல விழாவில், மணமகளின் கணவராக மாமனாரின் பெயரை மாற்றி கூறி உளறியதால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தில் திமுக பிரமுகர் இல்ல திருமணம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மணமகன் சுப்பிரமணியனுக்கும் – மணமகள் பிரதீபாவுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.

அப்போது, பெண்ணின் மாமனார் காசிவிஸ்வநாதன் பெயரை மணமகன் என்று குறிப்பிட்டு பேசினார், இதை கேட்டு திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். சுதாரித்து கொண்ட ஸ்டாலின், தன் உளறல் பேச்சை உணர்ந்த உடன் திருத்தி கொண்டு, சுப்பிரமணியன் என மணமகன் பெயரை கூறினார். திருமண ‌விழாவில் பேசி முடிப்பதற்குள் மூன்று இடங்களில் தடுமாறி திருமணத்திற்கு வந்தவர்களை சிரிக்க செய்து, திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தார்.

தொடர்ந்து உளறல் பாணியை கடைப்பிடிப்பதால் சமூக வலைத்தளங்களில் கேளி கிண்டல்களுக்கு நம்ம தலைவரே வழி வகுத்து கொடுத்துவிடுகிறார் என்று திமுக உடன்பிறப்புகளே புலம்பி வருகின்றனர் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதா? தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

0

இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதா? தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

மக்கள் நலனுக்கு எதிராக உள்ளதாக கருதி இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட “இங்கிலாந்து சொல்லும் நில நடுக்க பாடம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக!” என்ற தலைப்பிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நீரியல் விரிசல் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தில் செயல்படுத்துவதால் நில நடுக்கம் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அத்தகைய திட்டங்களுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்திருக்கிறது. நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

நீரியல் விரிசல் முறையில் பூமிக்குள் உள்ள பாறைகளை விலக்கி பாறை எரிவாயு, மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் பொருட்களை எடுப்பதற்கு இங்கிலாந்து நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வந்தது. அதனால் அந்த நாட்டிலிருந்த பெரும்பான்மையான ஹைட்ரோகார்பன் கிணறுகள் மூடப்பட்டன. லங்காஷயர் பகுதியில் இருந்த ஒரே ஒரு ஹைட்ரோகார்பன் கிணறு மட்டும் செயல்பாட்டில் இருந்து வந்தது. அந்த கிணற்றில் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாறை எரிவாயு எடுக்கப்படும் போது பூமிக்கு அடியில் ஏற்பட்ட உராய்வுகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.5 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இங்கிலாந்தின் பெட்ரோலிய நிறுவனமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம் ஆய்வு செய்தது. அதில், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் நீரியல் விரிசல் முறைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தொழில்நுட்பத்தால் ஆபத்து இல்லை என புதிதாக கண்டுபிடிக்கப்படும் வரை இத்தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்த தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மட்டும் தான் அனுமதி அளித்துள்ளோம்; மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இந்த இரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது. மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்த புதிய கொள்கையின்படி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக ஒரு உரிமம் மட்டும் பெற்றுக் கொண்டால் அதைக்கொண்டே அப்பகுதியில் கிடைக்கும் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட அனைத்து வகை கரிமங்களையும் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரோ கார்பன் என்ற வரையறைக்குள் வரும் மீத்தேன், ஈத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களை நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் எடுக்க முடியும். அவ்வாறு செய்தால் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் நில நடுக்கம் ஏற்படுவதையும், காலப் போக்கில் இந்த பகுதிகள் பாலைவனமாக மாறுவதையும் தடுக்கவே முடியாது. நீரிசல் விரிசல் முறையின் ஆபத்தை ஆய்வுப்பூர்வமாகவும், அறிவியல் விதிகளின்படியும் அறிந்ததால் தான் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அதற்கு தடை விதித்திருக்கின்றன. இது தொடர்பான உண்மைகள் அனைத்தையும் அறிந்த பிறகும் இதை இந்தியா தடை செய்யாதது ஏன் எனத் தெரியவில்லை.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகையும், மக்கள்தொகை அடர்த்தியும் மிகவும் குறைவு ஆகும். இந்தியாவுடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய நாடுகளில் கட்டிடங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டிருக்கும். அதனால், நிலநடுக்கம் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட்டால், அதன் சேதம் இந்தியாவை விட இங்கிலாந்தில் மிகவும் குறைவாகவே இருக்கும்.

மற்றொருபுறம், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது நிலநடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான வசதிகளும், தொழில்நுட்பமும் இந்தியாவை விட இங்கிலாந்தில் அதிகம். இத்தனை அம்சங்கள் சாதகமாக இருந்தும் கூட, நீரியல் விரிசல் முறைக்கு இங்கிலாந்து தடை விதிக்கிறது என்றால், அதற்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடிகளை விட, குடிமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று நினைப்பது தான் காரணம். ஆனால், இந்திய அரசோ மக்களின் உயிர்களையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளாமல் பொருளாதாரப் பயன்களுக்கு மட்டும் முன்னுரிமை தருவது ஏன்? எனத் தெரியவில்லை.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே மக்கள் நலனைக் காப்பது தான் என்பதால், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தின் தீமைகளை உணர்ந்து கொண்டு, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் அனுமதிக்கப் பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்