Saturday, September 21, 2024
Home Blog Page 4948

முதன் முதலில் பெண்களே வெற்றியை தீர்மானிக்கும் தேர்தல்! இன்று வாக்கு எண்ணிக்கை வெற்றி யாருக்கு வேலூரில்?

0

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 நடைபெற்றது. மொத்தம் 28 உறுப்பினர்கள் தேர்தலின் போட்டியிட்டனர். இத்தேர்தல் தமிழகத்தின் பெரும் இரு அரசியல் கட்சிகள் அதிமுக மற்றும் திமுகவிற்கு கடும் போட்டி ஏற்பட்டது. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து பிரச்சாரம் முடிந்து தொகுதியில் ஆகஸ்ட் 5 இல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 71.51 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9 இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 7,01,351, வாக்காளர்களும், பெண்கள் 7,31,099, வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் என உள்ளன.

இத்தேர்தலில் மொத்தம் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர். இது 71.51 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதில் அதிகபட்சமாக பெண்கள் 5,21,452 வாக்காளர்களும், ஆண்கள் 5,02,861 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேரும் வாக்களித்துள்ளனர்.

பெண் வாக்காளர்கள் 18,591 ஆண் வாக்காளர்களை விட பெண் ஓட்டுகள் கூடுதலாக வாக்களித்தனர். இதனால் பெண் வாக்காளர்களின் ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் என முழுமையாக நம்பப்படுகிறது.

வேலூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 2,45,055 வாக்காளர்களில் 1,63,337 பேரும் (66.65 சதவீதம்), வாக்களித்தனர்.

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் 2,39,045 வாக்காளர்களில் 1,78,723 பேரும் (74.77 சதவீதம்), வாக்களித்தனர்.

கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் 2,14,826 வாக்காளர்களில் 1,62,413 பேரும் (75.60 சதவீதம்),வாக்களித்தனர்.

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் 2,71,855 வாக்காளர்களில் 1,87,743 பேரும் (69.06 சதவீதம்), வாக்களித்தனர்.

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் 2,36,911 வாக்காளர்களில் 1,73,545 பேரும் (73.25 சதவீதம்), வாக்களித்தனர்.

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2,24,863 வாக்காளர்களில் 1,58,591 பேரும் (70.53 சதவீதம்) வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வாக்குகள் இன்று வெள்ளிக்கிழமை எண்ணப்படும் இன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதை எல்லாம் பார்க்கும் போது பெண் வாக்காளர்களே உறுப்பினர்களின் வெற்றியை தீர்மானிக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை.

0

கொழுக் மொழுக்னு இருந்து என்ன பிரயோஜனம்.. ஒரு படமும் ஓடலையே.. இந்தப் படமாவது ஓடுமா –ஏக்கத்தில் பிரபல நடிகை.

‘சிந்துபாத்’ படத்தைத் தொடர்ந்து ‘சங்கத்தமிழன்’, ‘கடைசி விவசாயி’, ‘லாபம்’, ‘மாமனிதன்’, ’சைரா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் ‘துக்ளக் தர்பார்’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

‘துக்ளக் தர்பார்’ படத்தின் வசனங்களை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதவுள்ளார். ’96’ இயக்குநர் ப்ரேம்குமார் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இப்படம் முழுக்க அரசியல் சாந்த படமாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்த்திபன், அதிதி ராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மஞ்சிமா மோகனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைப் படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

கௌதம் மேனனின் ஹீரோயின் என்ற பெருமையுடன் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். ஆனால், அந்தப் படம் பெரிதாக எடுபடவில்லை. அதன்பிறகு அவர் நடித்த ‘இப்படை வெல்லும்’, ‘சத்ரியன்’, ‘தேவராட்டம்’ போன்ற படங்களும் படு தோல்வியைத் தழுவின.

இந்நிலையில் தான் நடித்த எந்தப் படங்களுமே பெரிய வெற்றி அடையாததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார் மஞ்சிமா மோகன். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் தான் முதன்முறையாக ஜோடி சேரும் இந்தப் படமாவது தனது களங்கத்தை துடைக்குமா என நம்பிக்கையோடு எதிர்கொண்டிருக்கிறார் மஞ்சிமா மோகன்.
அதெல்லாம் நல்லா வரும் கண்ணு..!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இந்த மெகா ஹிட் படம் வந்து அதுக்குள்ளே பத்து வருஷம் ஆச்சா..?

இந்த மெகா ஹிட் படம் வந்து அதுக்குள்ளே பத்து வருஷம் ஆச்சா..?
என்னதான் நடிகர்கள் மாங்கு மாங்குவென்று தங்களது உழைப்பைக் கொட்டி நடித்தாலும் அவர்களது கேரியரை உச்சத்துக்கு கொண்டு செல்ல சில படங்கள் வந்து அமைய வேண்டும். அப்படியான ஒரு படம்தான் ‘மகதீரா’.

ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால், தேவ் கில், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மகதீரா’. ஜூலை 30, 2009-ல் இந்தப் படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் படம் வரவேற்பைப் பெற்றது. பெங்காலியில் இந்தப் படம் ‘யோதா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தி ரீமேக் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இன்றுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், ‘மகதீரா’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி படக்குழுவினர் பலரும் தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்த காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதற்குள் ‘மகதீரா’ வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தில் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் செறிவூட்டுவதாக இருந்தது.

எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கமாக இருந்து வருவதற்கு நன்றி ராஜமௌலி சார். உங்களிடமிருந்து கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் தொழில் நெறிமுறைகளை மனதாரக் கடைபிடிக்கிறேன்.

ராம்சரண், நமது குழந்தைப் பருவத்தில் ஒரு பகுதியை நாம் பகிர்ந்து கொண்டது போல இருக்கிறது. அற்புதமான தருணங்களை நினைவுகூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால். அதுக்குள்ளே பத்து வருஷம் ஓடிடுச்சா..?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கட்சி தலைவர் அதிரடி! என்னுடன் செல்ஃபி எடுத்தால் 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்! தொண்டர்கள் ஷாக்?

0

மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் என்னுடன் செல்ஃபி எடுக்க கூடாது. சால்வை போடக்கூடாது. அப்படி மீறி செய்தால் 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்துடுக்க பட்டார். அவர் நாடாளுமன்ற அவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். அவையில் மோடி அரசின் பல கொள்கைகளை எதிர்த்து பேசியுள்ளார். முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து போன்ற மசோதாக்களை எதிர்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவையில் பேசிய அவர், நான் ஒரு தேச குற்றவாளி, இதை கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். ஆம், 2009 இல் திமுக தலைவர் கருணாநிதி தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் என் மீது வழக்கு தொடுத்தார். இதனால் இந்த வருடம் சென்னை சிறப்பு நீதி மன்றம் எனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்போதும் நான் 124ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி என கூறினர்.

பாலகங்காதர திலகரும், அரவிந்த் கோசும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். காந்தி இந்த 124ஏ பிரிவை கடுமையாக விமர்சித்தார் என அவர் அவையில் கூறினார்.

மேலும் அவர் கட்சி சார்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இனி என்னுடன் யாரும் செல்ஃபி எடுக்க வேண்டாம் அப்படி எடுக்கும் பட்சத்தில் செல்ஃபி எடுப்பவர்கள் 100 கட்டணம் கொடுத்துவிட்டு செல்ஃபி எடுக்கவேண்டும் எனவும். மேலும் எனக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டாம். அப்படி சால்வை அணிவித்து மரியாதை செலுத்த நினைப்பவர்கள் கட்சிக்கு புத்தகங்களை கொடுங்கள் என கூறியுள்ளார்.

மேலும் கட்சியில் இருக்கும் அனைத்து தொண்டர்களும் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடவேண்டும். பழைய உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் ஆயுள் உறுப்பினர் ஆக புதுப்பித்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இனி வைகோவிடம் யாருமே செல்ஃபி எடுக்க தயங்குவர். கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் வைகோ இறங்கிவிட்டார் என அனைவரும் கூறுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தெறிக்கவிடும் நேர்கொண்டபார்வையின் டிவிட்டர் கருத்துக்கள்! தல தலதான்! விமர்சனங்கள் உள்ளே!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் இன்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் திரையிட்டு திரையிட்டு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் படம் சிறப்பாக அஜித் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் என கருத்து தெரிவித்தனர்.

முன்னதாகவே நேற்று இந்த படம் சிங்கப்பூர் மலேசியா போன்ற தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டது அங்கிருந்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தை பார்த்து பிறகு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒரு சில விமர்சனம் உங்களுக்காக!

மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன்? பதவியை எடுக்கும் அளவிற்கு என்ன பேசிவிட்டார்?

0

மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன்? பதவியை எடுக்கும் அளவிற்கு என்ன பேசிவிட்டார்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவையிலிருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இவர் எதற்காக நீக்கப்பட்டார் என்ற குழப்பம் நீடித்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தன்னுடைய அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரை நீக்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னாள் ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய அமைச்சரவையை அடிக்கடி மாற்றி வருவார். தற்போது பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி அவ்வாறு செய்யாமல் ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதிலேயே முனைப்புடன் செயல்பட்டார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையை ஏற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தவிட்டுள்ளார். எத்தனையோ பிரச்சனைகளில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் பழனிச்சாமி, மணிகண்டன் மீது கோபப்பட்டு பதவியை பறிக்க முக்கியமான காரணம் இருக்கிறது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது.

அதிமுகவின் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு கேபிள் டிவி தலைவராகவும் பதவி வகிக்கிறார். சமீபத்தில் மக்கள் மத்தியில் பேசிய இவர் கேபிள் டிவி கட்டணத்தை 130 ரூபாயாக குறைத்துள்ளோம். இதை இன்னும் கூட குறைக்கலாம் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் தான் அரசு கேபிள் டிவி வருகிறது. இதையடுத்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்மையில் பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன் கேபிள் கட்டணதை குறைப்பது பற்றி தன்னிடம் முதல்வர் எதுவும் விவாதிக்கவில்லை என்றார். அப்போது கேபிள் டிவி கார்ப்பரேசன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான உங்கள் கட்டுப்பாட்டில் தான் வருகிறது. அப்படி இருக்கையில் உங்களுக்கு தெரியாமல் எப்படி கேபிள் டிவி கட்டணம் குறைப்பு சாத்தியமாகும் என்று செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் இது குறித்து எனக்கே தெரியவில்லை. இது பற்றி முதல்வர் எதுவும் சொல்லவில்லை என்றார். மேலும் அரசு கேபிளில் மற்ற கேபிள் வைத்துள்ளோரை இணைக்க கூறும் உடுமலை ராதாகிருஷ்ணன் அட்சயா கேபிள் விஷன் என்கிற பெயரில் தனியாக கேபிள் நடத்தி வருவதாகவும், அதில் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மேல் வைத்துள்ளதாகவும் அதை அரசு கேபிளுடன் இணைப்பாரா என்றும் அமைச்சர் மணிகண்டன் கேள்வி எழுப்பினார்.

ஒரே கட்சியில் இருந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய இவரது இந்த பேச்சுதான் முதல்வர் பழனிசாமிக்கு  கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்தே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் முதல்முறையாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மணிகண்டன் மட்டுமே. வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மணிகண்டன் வகித்து வந்த தகவல் தொழில்நுட்ப துறையை கூடுதாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்




ஸ்டார் ஹீரோ இந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா? அப்போ சூப்பர் டூப்பர் ஹிட் தான்!

ஏம்ப்பா ரீமேக் பண்றதுக்கு உங்களுக்கு இந்தியாவுல எதுவும் தேறலையா..? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல..?

சினிமாத்துறையில எல்லாமே ஒரு சீசன் மாதிரிதானே நடக்கும். பேய்ப்படம்னா பேய்ப்படமா வரும். காமெடிப் படம்னா காமெடிப் படம்னா தொடர்ந்து காமெடிப் படமா வரும். அந்த வரிசையில இப்போ சீஸன், வெப் சீரிஸ்தான். சமீபத்துல ‘தி இன்விசிபிள் கெஸ்ட்’ வெப் சீரிஸை ஹிந்தியில ‘பத்லா’ என்ற பேரில் ரீமேக் செய்தனர். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் வெப் சீரிஸ்களை ரீமேக் செய்யும் சீஸன் தொடங்கியிருக்கிறது. அந்த வரிசையில், ஸ்பானிஷ் மொழியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘மனி ஹைஸ்ட்’ என்கிற பிரபல வெப் சீரிஸை பாலிவுட் திரைப்படமாக்குகிறார் நடிகர் ஷாரூக் கான்.

தி ஃப்ரொஃபஸர்’ என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடக்கும் கதை ‘மனி ஹைஸ்ட்’. இதுவரை வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தை நடத்த வேண்டும் என்று திட்டமிடுகிறார் ‘தி ஃப்ரொஃபஸர்’. அவருக்கு உதவி செய்ய 8 நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார். ஸ்பெய்ன் நாட்டில் பணம் அச்சடிக்கும் இடத்தையே இவர்கள் குறி வைக்கிறார்கள். இவர்கள் திட்டம் என்ன ஆனது என்பதே கதை.

இந்தத் தொடரின் முதல் மூன்று சீஸன் மாபெரும் வரவேற்பைப் பெற்று தற்போது நான்காவது சீஸன் தயாரிப்பில் உள்ளது.
‘ஜீரோ’ படத்தின் தோல்விக்குப் பிறகு ஷாரூக் கான் சரியான கதையைத் தேடி வந்தார்.

அப்போதுதான் ‘மனி ஹைஸ்ட்’ பற்றி தெரியவந்துள்ளது. இந்தத் தொடரின் உரிமையை ஷாரூக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தயாரிப்பதோடு, ‘தி ஃப்ரொஃபஸர்’ கதாபாத்திரத்தில் ஷாரூக் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப் சீரிஸை எப்படி திரைப்படமாக மாற்றவுள்ளார்கள் என்று இப்போதிலிருந்து சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்
ஹூம்..இந்த சீஸன் எத்தனை நாளைக்கோ..?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஒரே ஒரு கோரிக்கையால் திமுக எம்.பிக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிமுகவின் ரவீந்திரநாத்

0

ஒரே ஒரு கோரிக்கையால் திமுக எம்.பிக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதிமுகவின் ரவீந்திரநாத்

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்ததற்கு அ.தி.மு.க தரப்பு ஆதரவு தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய ரவீந்திரநாத் குமார் கூறியதாவது.

1984-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநிலங்களவையில் பேசியபோது, “ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கபட வேண்டும். ஏன் அது இன்னமும் தாமதம் ஆகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று நம் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜெயலலிதாவின் அந்த கோரிக்கையை தற்போது நிறைவேற்றியுள்ளனர். அதற்காக எங்களின் முழுமையான நன்றியை அ.தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்த மசோதா மூலமாக ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும். சுதந்திர கதவை திறந்து விட்டீர்கள். அவர்கள் இந்திய மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

சில அரசியல் ஆதாயத்திற்காக 1974-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கச்சத்தீவை தமிழகத்தில் இருந்து பிரித்து இலங்கைக்கு கொடுத்துவிட்டது. அவர்கள் அரசியல் லாபத்திற்காக அங்கே ஜம்மு-காஷ்மீரின் உரிமையை இந்தியாவில் இருந்து பிரித்தது போல, இங்கு தமிழ்நாட்டிலிருந்து பிரித்து விட்டார்கள்.

தமிழ்நாட்டின் உரிமையான கட்சத்தீவை மீண்டும் தமிழ்நாட்டிற்கு பெற்றுத்தர வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன். நமது பிரதமரின் புதிய இந்தியாவில், இந்த ஜம்மு-காஷ்மீரின் மசோதா ஒரு மைல் கல்லாக அமையும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சித்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பிக்களுக்கு ரவீந்தரநாத்தின் இந்த பேச்சு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் தமிழக நலனுக்கு எதிராக செயல்பட்டதை தகுந்த நேரத்தில் சுட்டி காட்டி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அதிமுகவின் ரவீந்தரநாத் குமார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஜெயம் ரவியை சீண்டிய ராகவா லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

0

ஜெயம் ரவியை சீண்டிய ராகவா லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?
ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 3-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதன் இறுதிக்காட்சியில் நகைச்சுவைக்காக, ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தனர். இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ‘கோமாளி’ ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு கமல், அதன் தயாரிப்பாளருக்குத் தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியைப் பதிவு செய்தார்.

இதனால் இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் ப்ரதீப் தெரிவித்தனர். ஜெயம் ரவியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ஆதரவாளரான நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு. இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு. நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது, அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது. விடு தலைவா.. அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என்று தெரிவித்துள்ளார்.

‘கோமாளி’ ட்ரெய்லரில் ரஜினியைக் கிண்டல் செய்ததற்கு, மறைமுகமாகச் சாடியே இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது. தற்போது ‘காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வரும் லாரன்ஸ். அதை முடித்துவிட்டு, தமிழில் சூப்பர் ஹீரோ கதையொன்றை இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார்.
புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம்.. ஆனா…???

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்