Saturday, September 21, 2024
Home Blog Page 4951

“பிகில்” செய்த சாதனை! ரிலீசுக்கு முன்னே இத்தனை கோடி வசூலா?

0

திரையுலகின் தளபதி என அனைவராலும் அழைக்கப்படுவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் A.R.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் ஆகும். இது நல்ல வசூலையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் ஆகும். அதைத்தொடர்ந்து தெறி, மெர்சல் என இரண்டு படங்களை விஜய் நடிப்பில் இயக்கியவர் இயக்குனர் அட்லீ ஆகும். மீண்டும் இருவரும் 3-வது முறையாக, ‘பிகில்’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் A.R.ரகுமான் இசையில் வெளி வந்து நல்ல வரவேற்பு பெற்று டிவிட்டர் டிரேன்டிங்கிள் முதல் இடம் பிடித்தது. இந்த படத்தின் விநியோகம் தற்போது நடக்கிறது.

அட்லீ, விஜய் கூட்டணி என்பதால் இந்த படம் வினியோகஸ்தர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு படம் வியாபாரம் ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களின் வியாபார சாதனைகளை, ‘பிகில்’ முறியடித்து இருக்கிறது.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய திரைக்கதை கொண்டது. படம், தீபாவளி நாளில் திரைக்கு வர இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மத்தியில், இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘பிகில்’ படத்தை கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

எல்லையில் பதற்றம் யார் காரணம்? இந்தியாவா? பாகிஸ்தானா? விரிவாக அறிவோம்!

0

இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போதும் கடும் போட்டி சண்டை நிலவி வருகிறது. அப்படி இருக்க இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாத மற்றும் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூலை 30 மற்றும் 31 தேதிகளுக்கு இடையிலான இரவில் இந்தியா நீலம் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலில் ஒரு நான்கு வயது சிறுவன் உள்பட இரண்டு குடிமக்கள் இறந்துள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் காவல் படைகளின் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கட்டுள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக்கு உள்ளே உள்ள அப்பாவி குடிமக்கள் மீது இந்தியா எறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா குரேஷி அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

போர் வெறியால் இந்தியா அமைதியை மட்டும் சீர்குலைக்கவில்லை, கட்டுப்பாட்டு மனித உரிமை மீறல்களையும் செய்கிறது என்று அவர் இன்னொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். தற்போது நிலவும் சூழலை உன்னிப்பாக கவனிக்குமாறு சர்வதேச நாடுகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக முயல்வதாகவும், அதற்கு ஏதுவாக இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதாகவும் கூறியுள்ள இந்திய ராணுவம், இத்தகைய சூழல்களில் பதில் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளது. என சனிக்கிழமை இரவு ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

நேற்றைய போட்டியில் சாதனை! முதல் வீரர் என்ற பெருமை இவருக்கே!

0

உலககோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்து வெளியேறிய பிறகு இந்தியா பங்கு பெறும் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸ் உடனாகும். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார்.

இதையடுத்து பேட்டிங் செய்த,
வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே சேர்த்தது.96 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் ஏமாற்றமளித்தார். இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 16 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் விராட் கோலி, பிட்ச் சிறப்பானதாக இல்லை. ஆனால்,போட்டிக்கு முந்தைய நாள்களில் மழைப்பொழிவு இருந்ததால், பிட்சை இதைவிட சிறப்பானதாகப் பராமரிக்க முடியாது என்று கூறினார்.

சைனி 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  சிறப்பாகப் பந்துவீசிய சைனி, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

கடைசி ஓவரை வீசிய அறிமுக வீரர் சைனி, அதை மெய்டனாக வீசினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

முஸ்லீம் என்பதால் புறக்கணித்த இந்துத்துவவாதி ! மீண்டும் சர்ச்சை!

0

சில தினங்களுக்கு முன்பு தான் சோமெட்டோ நிறுவனத்தில் உணவு வாங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல தொலைக் காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் முஸ்லிம் என்பதால் செய்தி சேனலின் விவாதத்தில் கலந்துகொண்ட இந்து அமைப்பின் தலைவர் அவரை பார்க்க மறுத்து தன் கண்களை மறைத்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதற்கு முன்னர் மத்திய பிரதேசத்தில் ஒருவர் பீட்சா உணவு கேட்டு சொமாட்டோ நிறுவன இணையத்தில் ஆர்டர் செய்து இருந்தார். இதை ஏற்ற சோமாட்டோ உணவை கொண்டு வரும் ஊழியர் பெயரையும் குறிப்பிட்டு பதிலளித்திருந்தது. 


அதில் தன் உணவை கொண்டு வருபவர் ஒரு முஸ்லிம் என அறிந்த சுக்லா, இந்து அல்லாதவர் கொண்டுவரும் உணவு எனக்கு தேவையில்லை எனவும், பணம் வாபஸ் இல்லை என்றாலும் தனது ஆர்டரை ரத்து செய்வதாகவும் கூறி விட்டார். 

இதற்கு சொமெட்டோ நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அனுப்பியது, பின்வருமாறு, ’உணவிற்கு மதம் இருப்பதில்லை. அந்த உணவே ஒரு மதம் தான்.’ என பதிலளித்திருந்தது. ஆனால் இதற்கு முன்னர் முஸ்லீம் ஒருவருக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டது ஏன் எனக்கு கொடுக்கப்படவில்லை எனவும் அந்த வாடிக்கையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போன்று ’ஹம் இந்து’ எனும் அமைப்பின் தலைவர் அஜய் கவுதமிற்கு கலந்து கொண்ட நிகழ்ச்சியின் நெறியாளர் பெயர் காலீத் என அறிந்த அஜய் கவுதம், அவரைப் பார்க்க மறுத்து தன் கண்களை கைகளால் மறைத்தபடி பேசியுள்ளார். இதற்கு அவர் தாம் முஸ்லிம் நெறியாளரை கண்களால் பார்த்து பேச முடியாது எனவும் மறுத்து உள்ளார். இதனால், அவரை மீண்டும் தம் நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை என அந்த சேனலின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய சாதனை! 1952 இற்கு பிறகு மீண்டும் இப்பொழுதுதான்!

0

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 17 ஆவது மக்களவையில் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ளார். இவர் தலைமையில் பல மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மோடி தலைமையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் மட்டும் இதுவரை 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு 17வது மக்களவை சிறப்பாக தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. பல நல்ல திட்டங்களை மோடி அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

30 மசோதாக்கள் என்பது, 1952 ஆம் ஆண்டுக்குப் பின் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனையாக இது கருதப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா, தீவிரவாத செயல்கள் தடுப்பு மசோதா போன்ற பல முக்கிய மசோதாக்கள் மோடி தலைமையில் கடந்த சில நாட்களில் நிறைவேறியுள்ளன.

இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, செய்தியாளர் சந்திப்பில் கூறியது. மோடி தலைமையில் நாடாளுமன்றம் சுமுகமாக இயங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மக்களின் குறைகளை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதாக கூறிய அவர், கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாட்டு நலனை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 

1952 ஆம் ஆண்டிற்கு பிறகு நிகழ்த்தப்பட்ட இந்த 30 மசோதாக்களை அரசு தரப்பில் பெருமையுடன் கூறிவருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

A1 படத்தின் வசூல் இவ்வளவா? இந்த ஆண்டு இரண்டாவது வெற்றி! குஷியில் சந்தானம்!

0

A1 படத்தின் வசூல் இவ்வளவா? இந்த ஆண்டு இரண்டாவது வெற்றி! குஷியில் சந்தானம்!

சந்தானம் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் A1 என்ற திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதாக பிரபலங்களின் ட்விட்டர் ரிவ்யூ மக்களின் கருத்து அடிப்படையில் படம் வெற்றி படமாக அமைந்தது உள்ளது. முக்கியமாக லொள்ளுசபா சந்தானம் மீண்டும் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

படம் வழக்கம் போல் சந்தானத்தின் டைமிங் காமெடி சிறப்பாக வந்துள்ளது மற்றும் சர்ச்சைக்குரிய பிராமணர்களை பற்றி பேசிய வசனங்கள் என ஒரு தரப்பு கூறியுள்ளது முற்றிலும் தவறு என படக் குழு மறுத்துள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்கள்.

படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக மக்கள் கூறிவருகின்றனர். தில்லுக்கு துட்டு 2 படம் வெற்றிக்கு பிறகு இந்த ஆண்டு இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் தற்போது வரை ரூ 12 கோடி வசூலை கடந்துள்ளது, இதன் மூலம் சந்தானம் தொடர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். இந்த வருட ஆரம்பத்திலேயே தில்லுக்கு துட்டு-2 செம்ம ஹிட் அடித்துள்ளது, இந்த வருடத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த ஒரே ஹீரோ சந்தானம் தான்.

அடுத்து S.P Chowdry தயாரிப்பில் தில்லுக்கு துட்டு 3 ஆம் பாகம் 3D தொழில் நுட்பத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. படம் வெற்றி அடைய வாழ்த்துவோம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

4000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை மிகக்குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்க வைத்து சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணை மீது, போதிய எண்ணிக்கையில் ஒப்பந்தப்புள்ளிகள் வராத நிலையில், அதற்கான அவகாசம் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சேலம் உருக்காலையை வாங்க உலக சந்தையில் போதிய ஆர்வம் காட்டப்படாத நிலையில், மீண்டும், மீண்டும் அதை விற்கத் துடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சேலத்தில் இயங்கி வரும் செயில் எனப்படும் இந்திய இரும்பு எஃகு நிறுவனத்திற்கு சொந்தமான சேலம் இரும்பாலை, துர்காப்பூர் இரும்பாலை, பத்ராவதி இரும்பு மற்றும் எஃகு ஆலை ஆகிய மூன்று ஆலைகளும் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அவற்றை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஜூலை மாதம் 4-ஆம் தேதி உலக அளவில் கோரப்பட்டன. ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. ஆனால், சொல்லிக்கொள்ளும்படியான எண்ணிக்கையில் சேலம் இரும்பாலை உள்ளிட்ட 3 இரும்பாலைகளை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்படவில்லை. சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு அதன் தொழிலாளர்கள் முதல் தமிழ்நாட்டு மக்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போதிய எண்ணிக்கையில் ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்படாததை காரணம் காட்டி, அம்முயற்சியை கைவிடுவது தான் சரியானதாக இருக்கும்.

ஆனால், ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்படுவதற்கான காலக்கெடுவை மேலும் 20 நாள்களுக்கு அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி வரை நீட்டித்து செயில் எனப்படும் இந்திய இரும்பு எஃகு நிறுவனம் ஆணையிட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும். இந்த துரோகத்தை அனுமதிக்க முடியாது.

சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்குவதற்காக மத்திய அரசின் சார்பில் முன்வைக்கப்படும் வாதம் அந்த ஆலை கடுமையான நட்டத்தில் இயங்குகிறது என்பது தான். மக்களவையில் இதுகுறித்து பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரு ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த அப்போதைய மத்திய எஃகுத் துறை அமைச்சர்,‘‘நவீன மயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த ஆலையில் செயில் நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு செய்த பிறகும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் இரும்பு ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனால் தான் ஆலையை தனியார்மயமாக்க அரசு தீர்மானித்திருக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார்.

உண்மையில் சேலம் இரும்பாலை நட்டத்தில் இயங்கவில்லை. மாறாக, சேலம் இரும்பாலை மற்றும் அதற்கு சொந்தமான 4000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களை மிகக்குறைந்த விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகவே, அந்த ஆலை நட்டத்தில் இயங்க வைக்கப்படுகிறது. சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்யப்படும் இரும்புக்கு உலகச் சந்தையில் அதிக தேவை உள்ளது. அண்மையில் சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தில் கூட சேலம் இரும்பாலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. சேலம் இரும்பாலையில் உற்பத்தியை அதிகரித்து, சிறப்பான முறையில் சந்தைப்படுத்தினால் நிச்சயம் லாபத்தில் இயக்க முடியும்.

அந்த நோக்கத்துடன் தான் சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த ஆலையாக நவீனப்படுத்த வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அதன் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதை செய்யாதது தான் சேலம் ஆலை நஷ்டத்தில் இயங்க காரணமாகும்.

எனவே, சேலம் இரும்பாலையின் அனைத்து சிக்கல்களுக்கும் அதை தனியாரிடம் ஒப்படைப்பது தான் தீர்வு என்று நினைக்காமல், ஆலையின் உற்பத்தித் திறன் மற்றும் சந்தைப்படுத்துதல் திறனை அதிகரித்து, அதன் மூலம் ஆலையை இலாபத்தில் இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கான முதல் பணியாக சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நீட்டிப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ரத்து செய்து, ஆலை பொதுத்துறை நிறுவனமாகவே இயங்கும் என அறிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தமிழ்நாட்டை மழை நாடாக்கும் மியோவாக்கி முறை! அப்படி என்ன முறை?

தமிழ்நாட்டை மழை நாடாக்கும் மியோவாக்கி முறை! அப்படி என்ன முறை?

பருவ மழை பெய்தது என்பது போய் பருவ மழை பொய்த்தது என்றாகி விட்டது இன்றைய நம் நிலை. இதற்கு முழுமுதற் காரணம் நம்முடைய அஜாக்கிரதை தான். ‘மழைநீர் நம் உயிர் நீர்’ ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற வாசகங்களை தினம்தினம் பார்த்தாலும் ‘மரம் வெட்டுவோம் மழை ஒழிப்போம்’ என்ற உறுதியோடு வாழ்ந்து வருகின்றோம். எவ்வளவுதான் காடுகள் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் கடைசியில் ரியல் எஸ்டேட் எனும் புயல் காடுகளை சமாதியாக்குவதில் தீவிர முனைப்போடு இருந்து கொண்டு வருகிறது என்பதே நிதர்சனம்.

மழைநீரின் சிறப்பை உணர்ந்த திருவள்ளுவர் ‘வான்சிறப்பு’ என்ற அதிகாரத்தில் அதன் சிறப்பைப் பற்றி கூறுகிறார். ஆயிரக்கணக்கான ஏரிகளை ஏற்படுத்தின தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜன் “ஏரிகளை பாதுகாக்கும் பாதத்துகள்களை என் தலையில் ஏந்துவேன்” என்று கூறி நீரின் முக்கியத்துவத்தை தன் வார்த்தையில் வெளிப்படுத்தினார்.

இன்று மரமும் இல்லை, நீரும் இல்லை, நீர் மேலாண்மையும் இல்லை என்றாகிக் கொண்டு வருகிறது. ஆனாலும் நமக்கு அடுத்து வரும் சந்ததிக்கு குறைந்த பட்சம் குடிக்கவாவது நீரை வைத்துச் செல்வோம் என்று எண்ணத்தில் இன்றைய தலைமுறையினர் ஓரளவு மரம் வளர்ப்பில் முனைப்பும் காட்ட தொடங்கி விட்டனர் என்றே கூறலாம்.

இதற்கு மேல் நாம் மரம் வைத்து அதை வளர்த்து மழை பெறுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும் என்று எண்ணத்தை மாற்றி ஒரு மரத்திற்கு இரண்டே வருடத்தில் பத்து வருட மரத்தின் வளர்ச்சியைக் கொடுப்பதுதான் இந்த மியோவாக்கி முறை.

2 வருடத்தில் 10 வருட வளர்ச்சியா..? இதெல்லாம் சாத்தியமா..? என்பவர்களின் கேள்விகளுக்கு சாத்தியம் என்று பதில் கூறுகிறார் ஜப்பானைச் சார்ந்த ‘அகிராமியோவாக்கி’.

இம்முறைப்பற்றி அவர் கூறியதாவது, ஒரு குறிப்பிட்ட காலி இடத்தைத் தெரிந்து கொண்டு அதில் மூன்று முதல் மூன்றரை அடி வரை குழியைத் தோண்டி வீட்டுக்காய்கறிக்கழிவுகள், மரத்தூள், சாணம் போன்ற நமக்கு கிடைக்கும் அனைத்து வகையான மக்கும் குப்பைகளையும் போட்டு பின்னர் மிகக்குறைந்த இடைவெளியில் மரக்கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு நடுவதன் மூலம் குப்பையிலுள்ள நுண்ணுயிரிகளின் கழிவுகள் செடிகளின் வேர்களுக்கு ஊக்கமளித்து வளர்ச்சியைத் தூண்டுகிறது.

மேலும் செடிகள் அதிக இடைவெளி இன்றி மிக நெருக்கமாக இருப்பதால் ஒளிச் சேர்க்கைக்கு சூரிய ஒளியைப்பெற முண்டியடித்து முன் வந்து போட்டி போட்டு வளர்ந்துவரும். இம்முறை மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக மரங்கள் வளர்க்க முடியும்; ஒரு குட்டி காட்டை நீங்கள் உருவாக்க முடியும் என்றாலும் மிகையாகாது.

இதன்மூலம் காடுகள் உருவாகும்; மழை பெறுகும்; நம் சந்ததிகள் நீராதாரம் மேம்படும்; குப்பைகள் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறையும். என்ன நீங்களும் ஒரு குட்டி காட்டை உருவாக்க தயாராகி விட்டீர்கள் தானே..??

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திமுகவை மரண கலாய்த்த முதல்வர்! விளம்பரத்துக்கு 4 படம் அடுத்து தலைவர்! டீ கடை பஜ்ஜி கடை பிரியாணி கடை இதான் தொழில்!

0

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்து வருகிறது.

அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் வேல்முருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்டாலின் மற்றும் EPS OPS என அனைவரும் தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேலும் பேசிய அவர் நாட்டிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல் எங்களை ஊழல் கட்சி என்று சொல்கிறார் ஸ்டாலின்.

வாரிசு அரசியல் செய்யும் அவருக்கு என்ன தெரியும். கட்சிக்குத் தலைவராக வருவதைத்தான் நாங்கள் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம்.
கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்.அவருக்குப் பிறகு உதயநிதி. இவர்களை விட்டால் நாட்டில் வேறு ஆளே இல்லையா?

உதயநிதியை நான்கு படத்தில் விளம்பரத்துக்காக நடிக்கவைத்து கட்சிக்குள் நுழைத்திருக்கிறார். ஸ்டாலினை நம்பி எங்களிடமிருந்து வெளியே சென்ற 18 எம்.எல்.ஏ-க்களும் நடுத் தெருவில் நிற்கிறார்கள். 

தி.மு.க-வினர் எல்லோரும் குண்டு குண்டாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பிரியாணி, பரோட்டா எல்லாம் காசு கொடுக்காமல் ஓசியில் சாப்பிடுகிறார்கள். பணம் கேட்டால், ஹோட்டல் உரிமையாளரை குத்து குத்துனு குத்துகிறார்கள். இவர்கள் எங்களை விமர்சனம் செய்வதா?

உலக அளவில் அதிக ஊழல் செய்த கட்சி எது என்று பார்த்தால் திமுக தான் என அனைவரும் கூறுவர். என விமர்சனம் செய்தார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

காபி டே உரிமையாளர் சித்தார்த்தா கொலையா? போலீஸ் கமிஷனர் திடுக்கிடும் தகவல்?

0

காபி டே உரிமையாளர் சித்தார்த்தா சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பிறகு மீண்டும் சில தினங்களுக்கு பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அவருக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதனிடையில் காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேக கேள்விகளை போலீஸ் அதிகாரி எழுப்பியுள்ளார்.

காபி டே நிறுவனர் சித்தார்த்தா வங்கியில் வாங்கிய ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி கடன் சுமை மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த திங்கள்கிழமை மாலை நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறுகின்றனர். ஆனால் இவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் காணாமல் போன 3 நாட்களுக்கு பிறகு இவரது உடல் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல் பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெற்றன.

இந்த நிலையில், சித்தார்த் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக கமிஷனர் கூறியுள்ளார். சந்தீப் பாட்டீல் பெங்களூரு மாநகர போலீஸ் இணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மங்களூருவில் சந்திப் பாட்டீல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில் காபி டே அதிபரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா மங்களூர் அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு மர்ம முடிச்சுகள் சந்தேகங்கள் நிறைந்துள்ளன என்றார்.

காவல்துறை விசாரணையிலும் சேகரிப்பட்ட தகவல்களின் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால் இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவில்லை.

குறிப்பாக சித்தார்த்தா கடைசியாக அணிந்திருந்த சர்ட் அவர் உடல் கண்டெடுக்கப்பட்ட பொழுது அவருடைய உடலில் ஷர்ட் இல்லை. அவரது உடலில் ஷர்ட் இல்லாததால் அவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலையா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இது பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்