Thursday, September 19, 2024
Home Blog Page 4962

TNPL 2019 கிரிக்கெட் போட்டி ஆரம்பம்! திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இடையேயான முதல் ஆட்டத்தில் வெல்ல போவது யார்? Dream 11பரிந்துரைகள்

0

TNPL 2019 கிரிக்கெட் போட்டி ஆரம்பம்! திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இடையேயான முதல் ஆட்டத்தில் வெல்ல போவது யார்? Dream 11பரிந்துரைகள்

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி.என்.பி.எல்.போட்டியில் முற்றிலும் எதிராக விளையாடி கொண்டிருந்த இரண்டு அணிகள் டிஎன்பிஎல் 2019 ஆம் ஆண்டிற்கான முதல் ஆட்டத்திற்கு மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றன. திண்டுக்கல் டிராகன்கள் லீக்கின் கடைசி ஆட்டத்தில் பயங்கரமாக இருந்தன மேலும் புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்தைப் பிடித்தன. இருப்பினும், இறுதிப் போட்டியில் மோசமாக விளையாடியது அவர்கள் பட்டத்தை வெல்ல முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மறுபுறம், சேப்பாக் சூப்பர் கில்லீஸின் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு ஆட்டத்தை மட்டுமே வென்றது அந்த அணிக்கு மறக்க ஒரு அனுபவம். இந்த இரு தரப்பினரும் போட்டித் துவக்கத்தில் விளையாடுவதால், அவர்கள் முன்கூட்டியே நுழைவதை விரும்புகிறார்கள். டிராகன்கள் கடந்த சீசனில் அவர்கள் விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர விரும்பினால், கில்லீஸ் அட்டவணையை தலைகீழாக மாற்றி வெற்றிகரமான வழிகளில் திரும்புவார்.

போட்டி விவரங்கள்:
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) 2019 இல் போட்டி 1 இல் திண்டுக்கல் டிராகன்களுக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கும் இடையில் திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.
இந்த போட்டியானது உள்ளூர் நேரப்படி இரவு 7:15 மணிக்கு தொடங்குகிறது (1:45 PM GMT).
இந்த போட்டியானது இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் இருக்கும். ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் கிடைக்கிறது.

மைதானம் எப்படியானது:
கடந்த ஆண்டு திண்டுக்கலில் பேட் செய்வது மிகவும் எளிதான ஆடுகளம் அல்ல. இதில் பெரும்பாலும் கடந்த முறை குறைந்த ஸ்கோர் எடுத்ததை பார்த்தோம், பந்துவீச்சாளர்கள் இங்கு பந்துவீச்சை ரசித்தனர். இந்த முறையும் இது போலவே இருக்கலாம். ஆனால் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் சிறிது நேரம் செலவழித்து நிலைமைகளை நன்கு புரிந்து கொண்டால், ஒரு பெரிய ஸ்கோர் எட்ட கூடியது தான்.
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:
166 (கடைசி ஐந்து இரவு டி.என்.எல்.பி போட்டிகள்)
போட்டி அணிகளின் பதிவு: வென்றது – 2, இழந்தது – 3 (கடைசி ஐந்து இரவு டி.என்.எல்.பி போட்டிகள்)

விளையாடும் வாய்ப்புள்ள வீரர்கள்:
திண்டிகல் டிராகன்கள்:
ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் (வார), என்.எஸ்.சதுர்வேத், வருண் தொட்டாத்ரி, மோகன் அபிநவ், ஆர் விவேக், ரவிச்சந்திரன் அஸ்வின் (இ), ராமலிங்கம் ரோஹித், எம் முகமது, எம் சிலம்பரசன், திரிலோக் நாக்.
பெஞ்ச்: ஆதித்யா அருண், ஜெகநாதன் க aus சிக், சுமந்த் ஜெயின், எம்.இ யஷ் அருண் மோஷி, எஸ் சுஜய்.
செபாக் சூப்பர் கில்லீஸ்:
எஸ் கார்த்திக் (வார), பாஸ்கரன் ராகுல், கோபிநாத் (இ), கங்கா ஸ்ரீதர் ராஜு, க aus சிக் காந்தி, உத்திரசாமி சசிதேவ், எம்.கே.சிவகுமார், முருகன் அஸ்வின், அருண்குமார், பி அருண், சம்ருத் பட்.
பெஞ்ச்: விஜய் சங்கர், ஏ ஆரிஃப், சன்னி குமார் சிங், எம் சித்தார்த், ஆர் அலெக்சாண்டர், எஸ் ஹரிஷ்குமார்.

இதர தகவல்கள்:
விஜய் சங்கர் இன்னும் என்.சி.ஏ-வில் இருக்கிறார், அவர் விளையாட மாட்டார். ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்து தொடக்க மோதலில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம்.

பவர் பிக்ஸ்:
டி.என்.பி.எல் 2018 இல் ஆர் விவேக்:
இன்னிங்ஸ்: 7
ரன்கள்: 262
சராசரி: 52.40
எஸ் / ஆர்: 209.60
50 கள்: 3, 4 கள்: 17, 6 கள்: 22

கேப்டன் மற்றும் துணை கேப்டன் தேர்வு:
கேப்டன் தேர்வுகள்:
என் ஜெகதீசன், கௌசிக் காந்தி, ஆர் விவேக்
துணை கேப்டன் தேர்வு: ரவிச்சந்திரன் அஸ்வின், கே கோபிநாத், கங்கா ஸ்ரீதர் ராஜு
பரிந்துரைகள்:
கீப்பர் – எஸ் கார்த்திக், என் ஜெகதீசன்
பேட்ஸ்மேன்கள் – யு சசிதேவ், கே காந்தி, ஆர் விவேக்
ஆல்-ரவுண்டர்கள் – எம் அஸ்வின், ஆர் அஸ்வின் (விசி)
பந்து வீச்சாளர்கள் – எஸ் பட், பி அருண், ஒரு மோகன், டி நாக்

கிராண்ட் லீக்ஸ் / மெகா லீக்குகளுக்கான பரிந்துரைகள்:
கீப்பர் – கே கோபிநாத், என் ஜெகதீசன்
பேட்ஸ்மேன்கள் – ஜி ஸ்ரீதர் ராஜு (வி.சி), யு சசிதேவ், என் சதுர்வேத், ஆர் விவேக் (சி)
ஆல்-ரவுண்டர்கள் – எம் அஸ்வின், ஆர் அஸ்வின்
பந்து வீச்சாளர்கள் – எஸ் பட், அருண்குமார், எம் முகமது

வல்லுநர் அறிவுரை:
உங்கள் Dreams 11 பேண்டஸி அணியில் என் ஜெகதீசன் மற்றும் ஆர் விவேக் அவசியம், ஏனெனில் அவர்கள் கடந்த பருவத்தில் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டனர். 10.5 வரவுகளில் வரும் கௌசிக் காந்தியை நீங்கள் தேர்வுசெய்தால், நீங்கள் வேறு சில தியாகங்களைச் செய்ய வேண்டும்.
சாத்தியமான வெற்றியாளர்கள்: திண்டிகல் டிராகன்கள் கடந்த கால செயல்பாடுகளின் படி மிகவும் வலுவாக இருப்பதால் அவர்கள் போட்டியில் வெல்லக்கூடும்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாநகராட்சி! அரசாணை வெளியீடு!

0

தமிழகத்தில் மக்கள்தொகை, வருவாய், வளர்ச்சி பொறுத்து மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். இதுபோன்ற 15 மாநகராட்சிகள் உள்ளன. ஆவடி மாநகராட்சி நிறுவனங்களாக ஜூன் 19, 2019 அன்று மேம்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மொத்தம் 14 நகராட்சிகள் இருந்தன. கடைசியாக 2014 லில் தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. பின்பு 2019 லில் இந்த வருடம் நாகர்கோவில், ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு செய்தது. அதை தொடர்ந்து ஆவடி நகராட்சியாக உயர்த்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து அமைச்சர் வேலுமணி முன்னதாக அறிவித்தது போல இன்று சட்டசபை கூடியதும் அமைச்சர் வேலுமணி ஆவடி நகராட்சியாக உயர்த்த்படும் சட்ட மசோதாவை சட்ட சபையில் தாக்கல் செய்தார்.இதை பரிசீலித்த தமிழக அரசு ஆவடியை உடனடி மாநகராட்சி அறிவித்து அரசாணை வெளியீடு செய்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆவடி மிகவும் சிறிய பரப்பை கொண்டிருந்தாலும் அதன் அடர்த்தி மக்கள் நெருக்கடி மக்களின் முன்னேற்றம்,அரசின் வருவாய் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆவடி நகராட்சி அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தது போல ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

நாகர்கோவில் மற்றும் ஓசூர் தொடர்ந்து இன்று ஆவடி 15வது மாநகராட்சி அந்தஸ்தை பெற்றது.அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்து தமிழக அரசுபரிசீலித்து உடனே மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டது.

குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? 1.30 மணி வரை ஆளுநர் கெடு!

0

கர்நாடகாவில் தொடர்ந்து சில நாட்களாகவே அரசியலில் குழப்பம் நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆளும் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? நீடிக்கதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். 16 MLA கல் தங்களின் பதவியை ராஜினாமா செய்தது மூலம் ஆளும் ஆட்சியில் பெருமான்மை இல்லா நிலைமை ஏற்பட்டுள்ளது.பெருமான்மையை நிரூபிக்க நேற்று சட்டசபை கூடியது. ஆனால் நேற்று காங்கிரஸ் MLA கல் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று அவை கூடுகிறது. கர்நாடகத்தில் ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அரசு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் திரும்ப பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.


இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்று என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள பாஜக சேர்ந்த 105 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்திருந்தனர்.அதே நேரத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 20 பேர் சட்டசபைக்கு வரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்றே நடத்த வேண்டும் என்று பாஜக முயன்றும் ஆனால் முடியாமல் போனது.

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கும், சபாநாயகர் காலதாமதம் செய்யக்கூடாது என்று கூறியும், கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து பாஜகவினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று மாலை 6 மணிக்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமிக்கு, கவர்னர் கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமிக்கு, கவர்னர் கெடு விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்
இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் கவர்னர் எழுதியுள்ள கடிதத்தில் கூட்டணி கட்சிகளோடு ஆட்சியில் இருந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
அவர்கள் ராஜினாமா செய்திருப்பதற்கான கடிதங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்து இருப்பதுபோல, என்னிடமும் கொடுத்துள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்திருப்பதை திரும்ப பெற்றுள்ளனர்.


அதுதொடர்பான கடிதங்களையும் என்னிடம் கொடுத்துள்ளனர். இந்த தருணத்தில் பெரும்பான்மையை நிரூபித்த காட்ட வேண்டியது உங்களது கடமையாகும் என கூறினார்.

அதனால் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்

60 மாவட்டங்களா! தமிழகத்தில்! அன்புமணி ராமதாஸ் MP கூறுவது என்ன?

0

நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. அதை அடுத்து சட்டப்பேரவையில் பல விவாதங்கள் பல கோரிக்கைகள் முன்வைக்க பட்டன. அதன் பிறகு சட்டப்பேரவையில் தமிழக முதமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் ஆட்சி நலன் கருதி மேலும் இரண்டு மாவட்டங்கள் உதய மாகிறது என்று அறிவித்தார்.

முதலமைச்சர் பேசியதாவது விதி எண் 110 விதி படி இரண்டு மாவட்டங்கள் உதய மாகிறது என அறிவித்தார். அவை நெல்லையிலிருந்து தென்காசி தனி மாவட்டமாகயும் காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகயும் உருவாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த செய்தியை படிக்க : தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள் உதயமாகிறது! எந்த மாவட்டம் தெரியுமா?

இதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தற்போதைய ராஜ சபா MP யும் ஆன திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சட்டப்பேரவையில் இரண்டு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்றார்.

மேலும் அவர் பேசியதாவது மக்களின் எண்ணிக்கையும் அதன் பரப்பளவும் அதன் வளர்ச்சியும் பொறுத்து அப்பகுதியை முன்னேற்ற இது போல தனி மாவட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். தற்போது அந்த வகையில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டமாக உதயமாக உள்ளது.இப்படி தனி தனியாக பிரிபதர்க்கு பதிலாக மக்கள் தொகை அடர்த்தி கணக்கில் கொண்டு அவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உடனடியாக 60 மாவட்டங்களாக பிரிக்கப் படவேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தில் பெரிய மாவட்டங்களைப் பிரித்து மொத்தம் 60 மாவட்டங்களாக உருவாக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் உதயமாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. பெரிய மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கரூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்துமே பரப்பளவிலும் மக்கள்தொகையிலும் பெரியவையாகவே உள்ளன.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி

0

பேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி

நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதற்கு முன்னதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட விதத்திலும் பார்த்தால் தொடர்ந்து அக்கட்சியின் செயல்பாடு இறங்கு முகமாகவே உள்ளது. சட்டமன்ற கூட்ட தொடரில் முக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறி விவாதம் செய்யாமல் எதாவது ஒரு காரணத்தை கூறி பெரும்பாலும் வெளிநடப்பு செய்வதையே வழக்கமாக கொண்டிருந்ததது.

அப்படியே கூட்டத்தொடரில் கலந்து கொண்டாலும் அதில் பேசும் போது கடந்த காலங்களில் தங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சியின் சாதனைகளை தங்களுடைய சாதனையாக கூறுவது என தொடர்ந்து காப்பியடிக்கும் அரசியலே செய்து வந்தது. இது மட்டுமல்லாமல் திமுகவின் பொது நிகழ்சிகளில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முக்கியமாக உளறாமல் பேசியதில்லை.ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை கூட சரியாக சொல்லாமல் உளறியது தான் அவரது செயல்படா தன்மையை மக்களுக்கு வெளிபடுத்தி காட்டியது.

இது மக்கள் மத்தியில் மட்டுமின்றி அக்கட்சியின் தொண்டர்களிடையேயும் விமர்சனத்தை உண்டாக்கியது. இவ்வாறு முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் செயல்படாமல் இருந்த காலத்திலிருந்து தொடர்ந்து கட்சியின் வளர்ச்சி இறங்குமுகமாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக செய்ய முடியாததை எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்து வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மாற்று கட்சியினர் இது குறித்து கேட்டால் ஆட்சிக்கு வராமல் எப்படி செய்ய முடியும் என்று தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து திமுக பின் வாங்கியது.

இவ்வாறு கொடுத்த வாக்குறுதிகளில் தான் பின் வாங்குகிறது என்று விட்டால் தற்போது வெற்றி பெற்ற எம்பிக்களின் செயல்பாடுகளும் பேசுவதொன்று செயல்படுவதொன்று என இருக்கிறது.சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி ராசா மத்திய அரசு  செயல்படுத்த முயற்சிக்கும் NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.தேச பாதுகாப்பிற்காக செயல்படுத்தபடும் இந்த திட்டதிற்கு எதிராக ராசா கேள்வியெழுப்பியது கடும் விமர்சனத்தை உண்டாக்கியது.

மேலும் இது குறித்த செய்தியை படிக்க: தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுத்தால் திமுக ஏன் பதறுகிறது? திமுக எம்.பி ராசாவுக்கு அமித்ஷா கொடுத்த பதிலடி

திமுக தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமாரிடம் ட்விட்டரில் கேள்வி கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு பதிலளித்த திமுக எம்பி தாங்கள் அந்த திட்டத்தை எதிர்க்கவில்லை என்றும் மாறாக அதை வரவேற்பதாகவும்,ஆதரித்து வாக்களித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் கொண்டு வரும் சட்ட திருத்ததிற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். சட்டத்தை எதிர்த்து பேசுவது போல் பேசிவிட்டு பிறகு அதே சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.

DMK MPs Double Role Activities-News4 Tamil Online Tamil News Channel Today News
DMK MPs Double Role Activities-News4 Tamil Online Tamil News Channel Today News

இதே போல சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா அத்திவரதரை தரிசித்ததும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. பொது மக்கள் மத்தியில் கடவுள் மறுப்பு மற்றும் மூட பழக்கவழக்கங்களை எதிர்த்த பெரியாரின் கொள்கையை பேசும் திமுக தலைவர் தனது குடும்பத்தினர் கோவிலுக்கு செல்வதில் ஏன் இந்த கொள்கையை பின்பற்றவில்லை. கொள்கையெல்லாம் தொண்டர்களுக்கு மட்டும் தானா என பல விதங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : திமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி!

இவ்வாறு தேர்தல் வாக்குறுதிகள்,கட்சியின் கொள்கை,கடந்த கால செயல்பாடுகள் மற்றும் தற்போதைய செயல்பாடு என அனைத்திலும் திமுக இரட்டை வேடம் போடுவது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்!

காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்!

காசநோய் மிகப்பெரிய உயிர் கொல்லி நோய் ஆகும். இது ஒரு பாக்டீரியா நோய் ஆகும். உலக மக்களில் பெரும்பாலானோர் இந்நோயால் பாதிக்க பட்டுள்ளன.

இதனால் இந்திய அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது 2025 குள் காசநோய் இல்லா நாடாக உருவாக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இதனால் 2025 க்குள் #EndTB காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய உத்திகளில் ஒன்று ‘மல்டிசெக்டரல் ஆக்சன்’ மேம்பட்ட ஒத்துழைப்புக்காக சுகாதார அமைச்சகம் மூன்று அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியான இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசநோய்க்கு வழிவகுக்கும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புதிய நபர் ஒவ்வொரு நொடியும் பாக்டீரியாவால் பாதிக்கப்படுகிறார். 5% முதல் 10% வரை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்படுவார்கள் அல்லது அவர்களின் வாழ்நாளில் தொற்றுநோயாகி விடுவார்கள்.

உலக சுகாதார அமைப்பு (WHO) புள்ளிவிவரங்களுடன் 2011 ஆம் ஆண்டிற்கான அதிக காசநோய் சுமை கொண்ட நாடு இந்தியா ஆகும், இது உலகளவில் 9.6 மில்லியன் வழக்குகளில் இந்தியாவுக்கு 2.2 மில்லியன் காசநோய் வழக்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை கனடாவுடன் ஒப்பிடுங்கள், அங்கு காசநோய் ஆண்டு சுமார் 1,600 புதிய வழக்குகள் உள்ளன.

இதனால் காசநோய் இல்லா நாட்டை உருவாக்குவோம். பான், புகையிலை, குட்கா, கஞ்சா, சிகரெட் போன்ற தீயபழக்கதிலிருந்து விடுபடுவோம்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

நேர்கொண்ட பார்வை வெற்றி அடைய புதிய வியூகம் அமைக்கும் தயாரிப்பாளர் தரப்பு!

0

நேர்கொண்ட பார்வை வெற்றி அடைய புதிய வியூகம் அமைக்கும் தயாரிப்பாளர் தரப்பு!

தமிழ் திரையுலகின் வசூல் மன்னர்கள் என்றால் அது ரஜினி, அஜித், விஜய், ஆகும். அவர்களின் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் வசூல் சாதனைகள் படைக்கும். படம் வெளிவரும் நாள் திருவிழா போல காணப்படும்.

அப்படி அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் அதிக வசூல் பெற்று ரூ 100 கோடி கிடப்பில் இணைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் அஜித்தின் நடிப்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது, நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து பரபரப்பான வெற்றியைப் பெற்ற பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. இதில் அஜித் கருப்பு கோட் அணிந்து வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தமிழில் ரீமேக் படமாக உருவாகி உள்ளது.சதுரங்கவேட்டை’, ‘தீரன்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில், ஷ்ரத்தா ஶ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், அஜித்தின் முந்தைய படமான `விஸ்வாசம்’ நல்ல வசூலைக் குவித்ததால், இந்தத் திரைப்படத்தை நல்ல விலைக்கு விநியோகஸ்தர்களிடம் விற்கலாம் எனத் திட்டமிட்டது படக்குழு.

ஆனால், தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்த விலைக்கு விநியோகஸ்தர்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டவே, தயாரிப்பு நிறுவனமே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. தமிழகம் முழுக்க ஒருவருக்கே படத்தை விற்காமல், ஏரியா வாரியாகப் பிரித்து விற்கலாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அப்படி விற்பனை செய்யும் பட்சத்தில் `விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தைவிட, நல்ல விலைக்குப் படம் விற்பனையாகும் எனத் திட்டமிட்டுள்ளனர். அமிதாப் ரோலில் அஜித் நடிக்கும் இப்படத்துக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் ரசிகர்களுடன் சேர்ந்து படக்குழுவும் காத்திருக்கிறது.

விஸ்வாசம் போல் நேர்கொண்ட பார்வையும் 100 கோடி கிடப்பில் இணைய வாழ்த்துவோம்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, தோல்நோய் போன்றவற்றிக்கு எளிதில் கிடைக்கும் இந்த பழம் அருமருந்தாகும்!

0

அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பழம் வாழை பழம். எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. செவ்வாழை, கற்பூரவள்ளி வாழைப்பழம், நேந்திரம் வாழைப்பழம், ஏலக்கி வாழை பழம், இது போல் எண்ணற்ற வகை உண்டு. அவற்றில் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. செவ்வாழை பழம் தவிர மற்ற அனைத்து வகை வாழை பழங்களும் அனைவரும் உண்ணுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல நோய்களை தீர்க்கவள்ளது. பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

இன்று அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது வாழை பழம் குறிப்பாக செவ்வாழை அமெரிக்க, கியூபா, செவ்வாழையின் தாயகம் எனக் கூறப்படுகிறது.

  1. பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும்.
  2. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.
  3. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
  4. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
  5. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.
  6. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய்:

இன்றைய காலங்களில் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவிற்கு பின்னர் தொடர்ந்து ஒரு மாதம் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும்:

இன்றைய நாகரீக உலகில் உபயோகிக்கும் பல் துலக்கும் பேஸ்டுகளில் உப்பு இருக்க என்று தான் விளம்பரம் செய்கின்றனர். அப்படி இருக்க கால்சியம், புளோரைடு குறைபாட்டினால் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து ஒரு மாதம் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்:

உடலில் தோல் வறட்சி வியர்வை படிவதால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும் இதற்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்:

சத்தற்ற உணவை சாப்பிட நரம்பு தளர்ச்சி ஏற்படும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.ஆண்மை பெறுகும்.

குழந்தை இன்மை:


திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ சந்திப்பார். அவர்களுக்கு செவ்வாழை மருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் படிக்க : இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

தொற்றுநோய் தடுக்கப்படும்:

நவீன உலகில் பலறும் பணத்தை தேடி அங்கும் இங்கும் அழைக்கின்றனர்.இதனால் பல இடங்களில் தொற்று நோய் கிருமிகள் தாக்குகின்றனர். தொற்று கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

மேலும் படிக்க : கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

இவ்வாறு பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட செவ்வாழை பழத்தை தவறாது சாப்பிட்டு பயனடைய வேண்டும்.

மேலும் படிக்க : பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

திமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி!

0

திமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி!

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் திமுக பிரமுகர் மூலம் அனுமதி சீட்டு இல்லாமல் சிறப்பு தரிசனத்தில் , அத்திவரதரை தரிசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து நம் அனைவராலும் அறியப்பட்ட விசயம் அத்திவரதர் திருக்கோயில். ஆம் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு எனும் இடத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அத்திவரதர் கோவில் உள்ளது.

இந்த அத்திவரதரை காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதாவது 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் காண இயலும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் அத்திவரதர் 40 வருடங்கள் அந்த கோவிலில் உள்ள குளத்தில் முழுவதுமாக மூழ்கிய நிலையில் இருக்கும். 40 வருடம் முடிந்த பிறகு 48 நாட்களுக்கு குளத்தை விட்டு எடுத்து மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த 48 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்டமே திருவிழா போல் காணப்படும். இதற்காக லட்சம் கணக்கில் மக்கள் கூட்டம் அத்திவரதரை காண அலைமோதும்

ஜூலை 1 ,2019 அன்று அத்திவரதறை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அத்திவரதரை காண பெரும் மக்கள் கூட்டங்களுடன் அலைமோதுகிறது. தரிசனம் செய்ய குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

இவ்வளவு சிறப்பு மிக்க அத்திவரதரை நமது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பெரும்பாலோனோர் தரிசித்தனர். இவற்றில் குறிப்பாக மூட நம்பிக்கைகளை எதிர்த்த பெரியார் கொள்கையை பின் பற்றுவதாக கூறி அரசியல் செய்யும் திமுக தலைவரின் ஸ்டாலினின் மனைவி துர்கா,பாஜக தலைவர் H. ராஜா,பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் தரிசனம் செய்தார்கள். இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு இது பொல் அத்திவரதர் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது அறிந்ததே. மீண்டு 2059 லில் தான் தரிசிக்க முடியும் என்பதை அறிந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அத்திவரதரை தரிசிக்க மக்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கும் இந்நிலையில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு தரிசன டிக்கெட் இல்லாமல் எப்படி தரிசித்தார் என்பது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்திவரதரை காண வந்த பக்தர்கள் பெரும் கோபமடைந்தனர்.

இதை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது. வரிச்சியூர் செல்வத்திற்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது எப்படி?,அவரை யார் கூட்டிக்கொண்டு வந்தது என்பதை சிசிடிவி கேமராவில் கண்டோம். மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் திமுக பிரமுகர் ஒருவருடன் விஐபி தரிசனம் செய்தார் என்பது இதில் தெரிய வந்துள்ளது.

இதை பற்றி மேலும் விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மக்கள் கூட்டத்தில் கஷ்ட பட்டு தரிசிக்கும் பொழுது பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விஐபி தரிசனம் செய்தது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு திமுக அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவரே உதவி செய்ததால் மக்கள் உச்ச கட்ட கோபத்தில் உள்ளனர்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள் உதயமாகிறது! எந்த மாவட்டம் தெரியுமா?

0

தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள்,

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட நிலையில் தற்போது மேலும் இரண்டு மாவட்டங்கள் அறிவிக்க படும் என அறிவித்தார்.

அதாவது செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் புதிய மாவட்டங்கள் ஆகும். என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி நெல்லையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், இரண்டு புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்கள் உதயமாகியுள்ளன.

மக்களின் எண்ணிக்கையும் அதன் பரப்பளவும் அதன் வளர்ச்சியும் பொறுத்து அப்பகுதியை முன்னேற்ற இது போல தனி மாவட்டங்கள் உருவாக்க படும். தற்போது அந்த வகையில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டமாக உதயமாக உள்ளது.

எனில் பிரிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி சேர்த்து 35 மாவட்டங்கள் இருக்கப்பெரும். இதனால் செங்கல்பட்டு, தென்காசி சேர்ந்த மக்களுக்கு ரொம்ப நாள் கனவு நிறைவேறும்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.