Tuesday, September 17, 2024
Home Blog Page 4964

அன்புமணி ராமதாசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் அவலநிலை

0

அன்புமணி ராமதாசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் அவலநிலை

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்த பொது கொண்டு வரப்பட்ட செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை மூடுவதா? என்றும் இதை அரசே நடத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.


இந்தியாவின் தடுப்பூசிகள் தேவையை பூர்த்தி செய்வதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் முயற்சியால் செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை மூட முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கின்றன. தடுப்பூசி வளாகத்தை மூட மத்திய அரசு தீர்மானித்திருப்பது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது சென்னையை அடுத்த செங்கல்பட்டில் தடுப்பூசி பூங்காவும், மருத்துவப் பூங்காவும் கொண்ட மிகப்பெரிய வளாகத்தை அமைப்பது ஆகும். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி கணிசமாக குறைந்து விட்ட நிலையில், தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உருவானது. அதை தடுத்து இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது தான் இதன் நோக்கமாகும். மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எச்.எல்.எல் லைஃப் கேர் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மருத்துவர் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ரூ.594 கோடியில் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இத்திட்டத்தின் மதிப்பு 2017&ஆம் ஆண்டில் ரூ.710 கோடியாகவும், 2019&ஆம் ஆண்டில் ரூ. 904 கோடியாகவும் அதிகரித்தது. முதற்கட்ட மதிப்பீட்டின்படி ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு தடுப்பூசி பூங்கா அமைக்கப்பட்டு, அதில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பதற்கான உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி கூடுதலான வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்தால் செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து வளாகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனடியாக தொடங்கி விட முடியும்.

Dr Ramadoss Condemned on Integrated Vaccines Complex Closing Issue-News4 Tamil Online News Channel

ஆனால், உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றும், அவ்வளவு முதலீட்டில் தடுப்பூசி பூங்காவை அமைத்தால், அதை லாபத்தில் இயக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறி விட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து தடுப்பூசிபூங்காவில் பணியாற்றி வரும் 174 பணியாளர்களை அழைத்த நிர்வாகம், அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க முடியாது என்றும், மாற்று வேலையை பார்த்துக் கொள்ளும்படியும் கூறியிருக்கிறது. அதனால், கனவுத்திட்டமான தடுப்பூசி உற்பத்தி பூங்கா அதன் மருந்து உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பாகவே மூடப்படும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

தடுப்பூசி உற்பத்திப் பூங்காவை அதன் உயர்த்தப்பட்ட மதிப்பீட்டில் திறந்தால், அதை லாபத்தில் இயக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். தடுப்பூசி உற்பத்தி பூங்காவை ஆய்வு செய்த உலக நலவாழ்வு நிறுவனத்தின் வல்லுனர் குழுவினர் அது உலகத்தரத்தில் அமைக்கப் பட்டிருப்பதாக சான்றளித்துள்ளனர். தடுப்பூசி பூங்கா திறக்கப்பட்டால், அதில் பென்டாவேலண்ட் தடுப்பூசி, ஹெபடைடிஸ்&பி, ரேபிஸ், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 7 வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். இந்த வகை தடுப்பூசிகள் இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுவதால், பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் இம்மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டால் மத்திய அரசுக்கு பெருமளவில் செலவு மிச்சமாகும்.

அதுமட்டுமின்றி, செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் உற்பத்தி செய்யப்படவுள்ள மருந்துகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை என்பதால், அவற்றில் இந்தியாவின் தேவைக்குப் போக மீதமுள்ள தடுப்பூசி மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அவற்றை வாங்கிக் கொள்ள உலக நாடுகள் தயாராக உள்ளன. அதனால், செங்கல்பட்டு தடுப்பூசி பூங்கா தொடங்கப்பட்ட நாளில் இருந்தே லாபத்தில் இயங்கும். இது மத்திய அரசின் எந்த பொதுத்துறை நிறுவனத்திற்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாகும்.

தடுப்பூசி பூங்காவை அமைக்கும் எச்.எல்.எல் பயோடெக்கின் தாய் நிறுவனமான எச்.எல்.எல் லைஃப் கேரை பங்குவிற்பனை மூலம் தனியாருக்கு தாரை வார்க்க இருப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். உண்மையில் இது பிரச்சினையே இல்லை. ஏனெனில் எச்.எல்.எல் லைஃப் கேர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி நடத்த கேரள மாநில அரசு முன்வந்துள்ளது. அத்தகைய சூழலில் எச்.எல்.எல் பயோடெக்கை தனி பொதுத்துறை நிறுவனமாக மாற்றி மத்திய அரசே நடத்தலாம். அதன்மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 174 பேரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். ஒருவேளை இது மத்திய அரசால் சாத்தியமாகாத நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5% பங்குகளை வாங்கியது போன்று, அதிக லாபம் ஈட்டக்கூடிய தடுப்பூசி பூங்காவையும் தமிழக அரசு வாங்கி நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக

0

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக

முன்னாள் திமுக தலைவரும்,முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். திமுக தலைவராக பதவியேற்பதற்கு முன்பு திமுகவின் செயல் தலைவராகவும் அதற்கு முன்னதாக இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அந்த பதவிக்கு வந்த அவரது வாரிசான மு.க.ஸ்டாலின் தனக்கு பிறகு தன்னுடைய வாரிசான உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் நுழைக்க தீவிரமாக செயல்பட்டு வந்தார்.அதுவும் ஆரம்பத்தில் தான் வகித்த இளைஞர் அணியில் பதவியை வழங்க திட்டமிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவினால் ஏற்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் விட்டது, அவரது தொகுதியான ஆர்.கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்து படு தோல்வியடைந்து மற்றும் ஸ்டாலினின் கடந்த கால உளறல் பேச்சுக்களையெல்லாம் பார்க்கும் போது ஸ்டாலின் திமுகவை சரியாக வழி நடத்துவாரா? ஸ்டாலினால் திமுகவை தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியுமா? மக்கள் ஸ்டாலின் தலைமையை ஏற்பார்களா என பல கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தன.

இவ்வளவு கேள்விகளுக்கும் மத்தியில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றது. இத்துடன் நடத்தபட்ட தமிழக மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்று ஆட்சியை கவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவு இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியே தொடர்கிறது. இவ்வாறான நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் மத்தியில் ஸ்டாலின் திமுக தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். 

இந்நிலையில் ஏற்கனவே எதிர்பார்த்தது போல தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியை ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலினிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுகவில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பதாக பேசப்படும் நிலையில் கட்சிக்கு உதயநிதி ஸ்டாலினை விட அதிகமாக உழைத்தவர்களையெல்லாம் விட்டு அரசியலில் நுழைந்து ஒரு வருடம் கூட ஆகாத உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த பதவியை வழங்கியது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

இதையடுத்து உதயநிதி திமுகவின் இளைஞரணி செயலாளரானதை விரும்பாதவர்களும், மாற்று கட்சியினரும் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

அவ்வாறு அவர்கள் பதிவிட்டவைகளில் சில பதிவுகளை கீழே காணலாம்.

#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக #உதயநிதிக்குமண்டியிட்டதிமுக

டி.ஆர்.பாலு உதயநிதி ஸ்டாலினுக்கு மாமாவா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்

0

டி.ஆர்.பாலு உதயநிதி ஸ்டாலினுக்கு மாமாவா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று திமுக தலைவர் கூறி உள்ளார். ஆனால் நடைபெற்று வரும் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவார் என நினைக்கிறேன்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் மற்றும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களித்த மதுரவாயல் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னை,போரூரில் நடைபெற்றது.

இதில் முரசொலி மேலாண்மை இயக்குனரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது,”டி.ஆர்.பாலுவை மாமா என்று தான் கூறுவேன். நான் வராமல் நீ கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்று கேட்டு கொண்டதால் தான் இந்த தேதி மாற்றப்பட்டது.

தமிழக அரசியலில் வெற்றிடம் என்று சில நடிகர்கள் வந்தார்கள். ஆனால் நடந்து முடிந்த தேர்தல் முடிவை பார்த்து விட்டு எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை, திமுக இருக்கும் இடமே வெற்றியின் இடம், இங்கு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்றும் பேசினார்.

நடந்து முடிந்த தேர்தலுக்காக 28 நாட்கள் 38 தொகுதியில் பிரச்சாரம் செய்தேன். கைராசியில் நம்பிக்கை இல்லை, இந்த வெற்றிக்கு தமிழக வாக்காளர்கள் கைராசி என்றும் சொல்லலாம். நான் அரசியலில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன். மக்கள் குறை குறித்து தமிழக எம்.பிக்கள் மனு கொடுக்கின்றனர்.

ஆனால் திட்டங்கள் வேறு இடங்களுக்கு போகிறது. ஓட்டு போடவில்லை என்றால் தண்டிப்போம் என நேரடியாக சொல்கிறார்கள். திமுக எம்எல்ஏக்கள் சொந்த செலவில் 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வலியுறுத்தப்படாது என்று திமுக தலைவர் கூறி உள்ளார். ஆனால் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விரைவில் கொண்டு வருவார் என நினைக்கிறேன்” என்றும் அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியலுக்கு வந்து காணாமல் போனவர் என்று கூறியது கமலஹாசனை தான் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் டி.ஆர்.பாலுவை எந்த அடிப்படையில் மாமா என்று குறிப்பிட்டார் என்று வாசகர்கள் கற்பனைக்கே விட்டு விடலாம்.

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்த திட்டத்தை வைத்து விளம்பரம் தேடுவதா? திமுக எம்.பி.செந்தில்குமாரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

0

அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்த திட்டத்தை வைத்து விளம்பரம் தேடுவதா? திமுக எம்.பி.செந்தில்குமாரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது தமிழ் நாட்டில் உள்ள மற்ற தொகுதிகளை விட பாமகவின் மருத்துவர் அன்புமணி ராமதாசின் தொகுதியான தருமபுரி தான் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பிரச்சாரத்தின் போது மட்டுமல்லாமல் வாக்கு என்ணிக்கையின் போதும் கடைசி வரை பரபரப்பாகவே வைத்திருந்தது.

இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை ஆனால் எக்காரணம் கொண்டும் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்று விட கூடாது என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிரமாக திட்டமிட்டு செயல்பட்டு வந்தார். அதற்கு காரணம் கடந்த காலங்களில் அன்புமணி ராமதாஸ் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்ததை விட திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்தது தான் அதிகம், இத்துடன் விட்டு விடாமல் தமிழக நலன் குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெற்று பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானித்தது.குறிப்பாக திமுக ஆட்சியை இழந்ததற்கு பாமகவே முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். கடந்த தேர்தலில் தனித்து நின்று தொல்லை கொடுத்த பாமக இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் திமுகவிற்கு எதிரான அணியை பலமடைய செய்தது.

இதைக்கண்டு விரக்தியான திமுக தலைவர் ஸ்டாலின் பாமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைய வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட்டார்.குறிப்பாக தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் எக்காரணம் கொண்டும் வெற்றி பெற கூடாது என கூறியிருக்கிறார். இதற்காக திமுகவினரும் திமுக ஆதரவு பெற்ற ஊடகங்களும் பாஜக அதிமுகவை விட பாமகவையும் அன்புமணி ராமதாஸையும் அதிகமாக விமர்சிக்க ஆரம்பித்தன.

இதையெல்லாம் ஆதரிக்கும் விதமாக தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் செந்தில்குமார் பல்வேறு விமர்சனங்களை தனது பிரச்சாரத்தின் போது முன்வைத்தார். அதில் அன்புமணி ராமதாஸ் சொந்த ஊர் திண்டிவனம் என்றும் அங்கு போட்டியிடாமல் தருமபுரியில் போட்டியிட்டு அந்த தொகுதி மக்களை ஏமாற்றுவதாகவும்,அவர் பதவியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளும் தொகுதி பக்கமே வரவில்லை என்றும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.

இது மட்டுமல்லாமல் பாமக சாதி அரசியல் செய்கிறது என்று விமர்சனம் செய்த செந்தில்குமார் நானும் அன்புமணி ராமதாஸின் சமுதாயத்தை சேர்ந்தவன் தான் என சாதி ரீதியாக பேசி வாக்குகளை கவர சாதி அரசியல் செய்ய ஆரம்பித்தார்.மேலும் ஊடகங்களும் நடாளமன்றத்தில் அன்புமணி ராமதாஸின் வருகை பதிவேடு குறைவு என்பதை தொடர்ந்து பதிவு செய்தனர். இது போன்ற திமுகவின் திட்டமிட்ட பிரச்சாரங்களால் தருமபுரியில் திமுகவின் செந்தில்குமார் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுகவின் எம்.பி.செந்தில்குமாரிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்ன செய்ய போகிறீர்கள்? என்றும் இதுவே அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சராகி நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வந்திருப்பார் என்றும் இணையதளவாசிகள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த எம்.பி.செந்தில்குமார் இப்போதும் அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா சீட்டின் மூலமாக அமைச்சர் ஆகி திட்டங்களை கொண்டு வரலாம் என பதிலளித்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அன்புமணி ராமதாஸ் எதுவும் செய்ய மாட்டார் என்று விமர்சனம் செய்தவர் தற்போது அன்புமணி ராமதாஸ் அமைச்சராகி தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வரலாம் என்று கூறியது மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளானது.அன்புமணி ராமதாஸ் தனது தொகுதியில் சிறப்பாக செயல்பட்டார் என்பதை அவரை எதிர்த்து வெற்றி பெற்றவரே ஏற்று கொண்டார் என்பதை வைத்து திமுகவின் பொய் பிரச்சாரத்தை விமர்சனம் செய்தனர்.

மேலும் இது குறித்த செய்தியை படிக்க: தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

இந்நிலையில் இதையெல்லாம் மீண்டும் உறுதி செய்யும் விதமாக தருமபுரி எம்.பி.செந்தில்குமாரின் செயல்பாடு அமைந்துள்ளது. அன்புமணி ராமதாஸ் பதவி வகித்த போது அவரால் கொண்டு வரப்பட்ட மொரப்பூர்-தருமபுரி இடையிலான தொடர்வண்டி பாதை திட்டத்தை செயல்படுத்துமாறு தொடர்வண்டி துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து தருமபுரி எம்.பி.செந்தில்குமார் பேசியுள்ளார்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தொகுதி பக்கமே வரவில்லை என்று பிரச்சாரம் செய்த திமுகவின் செந்தில்குமார் அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரை சந்தித்தது நகைச்சுவையாக உள்ளது என்றும், மேலும் அன்புமணி ராமதாஸை வைத்து விளம்பரம் தேடி கொள்ளாமல் சொந்தமாக எதாவது திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே : பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார்

ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியை மாற்ற இது தான் காரணமா?

0

ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியை மாற்ற இது தான் காரணமா?

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி  எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென்று அவர் ஏன் மாற்றப்பட்டார் என்ற காரணம் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. இந்நிலையில் அவர் மாற்றபட்டதிற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக பதவியேற்ற ரோகினி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த பணிகளை எல்லாம் சிறப்பாக செய்து வந்தார். ஆனால் மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடந்த நேரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக அவர் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் பிரசாரத்துக்காக அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலம் மாவட்டம் வந்த போது கோட்டை மைதானத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் வரைக்கும் சாலையின் இரு புறமும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அது தேர்தல் விதிமுறையை மீறியது என்று சொல்லி அதை அகற்ற மாவட்ட ஆட்சியர் ரோகினி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போதும் மாவட்ட ஆட்சியர் ரோகினி விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட இரண்டடுக்கு பாலம் துவக்க விழாவில் எதிர்க்கட்சியான திமுகவின் சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனை முறைப்படி அழைக்க வேண்டும் என்பதிலும் மாவட்ட ஆட்சியராக ரோகினி உறுதியாக இருந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

முதல்வரின் சொந்த ஊரான சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி இப்படி தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு புகார் கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் ஆட்சியர் ரோகினி அதிரடியாக மாற்றப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. இதனையடுத்து மாற்றத்திற்கு பிறகு தற்போது  ரோஹினி தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மதச் சண்டையை உருவாக்க முயன்ற குஷ்புவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்

0

மதச் சண்டையை உருவாக்க முயன்ற குஷ்புவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்

சமீபத்தில் பதவியேற்ற பாஜக அரசை தொடர்ந்து மதத்தின் பெயரால் விமர்சித்து வரும் காங்கிரஸ் சம்பந்தமில்லாத பிரச்னைகளுக்கெல்லாம் மதத்தை இழுத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜக அரசும் தொடர்ந்து மதம் சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது ஆனால் மத சண்டையை தூண்டும் வகையில் செயல்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு பிரச்சனை குறித்து குஷ்புவும்,காயத்ரி ராகுராமும் கொள்கை ரீதியாக ட்விட்டரில் மோதி கொண்டனர்.

இந்த விவகாரத்தில் ‘என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிய முயற்சிக்க வேண்டாம். உங்கள் மத துவேஷத்தை மன்னிக்கவே முடியாது’ என்று பாஜகவை சேர்ந்தவரும், நடிகையும், பிரபல டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியின் குஷ்புவை ட்விட்டரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இதுகுறித்து நடிகை குஷ்புவும் ஆவேசமாக தனது ட்விட்டரில், இதுதான் புதிய இந்தியாவா? ஜெய் ஸ்ரீ ராம் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தி ஒரு இளைஞரை ஒரு கும்பல் கொன்றே விட்டது என்று ஆதங்கத்துடன் பதில் அளித்திருந்தார்.ஆனால் அவர் குறிப்பிட்ட அந்த இளைஞர் ஒரு திருடர் என்பது குறித்தும் அவர் திருடியது குறித்தும் குஷ்பு அங்கு எதையும் பதிவும் செய்யவில்லை. இதிலிருந்தே அவர் இந்த சம்பவத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார் என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காயத்ரி ரகுராம், ‘இந்துக்கள் என்றாலே கொலைகாரர்கள் என்ற ரீதியில் சொல்வது தற்போது டிரெண்ட் ஆகிவிட்டது. மற்ற மதத்தினர் இதே தவறை செய்யும்போது குஷ்பு ஏன் வாயைத் திறப்பதில்லை? என்றும் பதிவிட்டிருந்தார். 

அதற்கு குஷ்பு,காயத்ரி ரகுராம் கேட்கும் கேள்விகளை சமாளிக்க முடியாமல் ‘உங்களை போன்றவர்களிடம் நான் விவாதம் செய்ய தயாராக இல்லை. மறைந்த உங்கள் தந்தை, தாயார் மற்றும் உங்கள் உறவினர்கள் அனைவர் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எனவே ஷட்டப், வாயை பொத்தி கொண்டு இருக்கவும்’ என்று மழுப்பலாக பதில் அளித்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த காயத்ரி, ‘நீங்கள் என் குடும்பத்தினர் மீது அன்பு வைத்துள்ளீர்கள் என்பதற்காக என் மதத்தை இழிவு செய்தால் நான் சும்மா இருக்க முடியாது. என் உலகம் பரந்து விரிந்த உலகம். மரியாதையாகப் பேச கற்று கொள்ளவும்’ என்று காட்டமாக பதிலளித்ததுடன், மேலும் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது என் குடும்பத்தினர் மீது அன்பு வைத்திருப்பதாகக் கூறி நழுவ வேண்டாம்.

https://twitter.com/gayathriraguram/status/1143890737836089350?s=19

மேலும் நான் உங்களுக்கு எதிரான கட்சியில் இருக்கின்றேன். ஓடி ஒளிய முயற்சிக்காமல் நான் கேட்கும் கேள்விக்குப் பதிலளியுங்கள். உங்கள் மீது தனிப்பட்ட வகையில் எனக்கு எந்த பகையும் இல்லை. நான் எனது உரிமைக்காக வாதிடுகிறேன்’ என்றும் பதிலளித்துள்ளார். இவ்வாறு தேவையில்லாத சம்பவங்களில் எல்லாம் மதத்தை இழுத்து அரசியல் செய்யும் காங்கிரசை சேர்ந்த குஷ்பும் அதையே செய்ய தக்க சமயத்தில் பாஜகவை சார்ந்த காயத்ரி ரகுராம் அவரை வெளுத்து வாங்கியுள்ளார்.

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.? மத்திய அரசுடன் போராடும் எடப்பாடி பழனிசாமி

0

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.? மத்திய அரசுடன் போராடும் எடப்பாடி பழனிசாமி

அடுத்து தமிழகத்திற்கு புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்பதில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு உருவாகி வரும் நிலையில், ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது டி.கே.ராஜேந்திரன் தமிழக டிஜிபியாக பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் எப்போதோ முடிவடைந்துவிட்டது. பதவிக்காலம் முடிந்தாலும் பணி நீட்டிப்பு பெற்று தொடர்ந்து டிஜிபியாக ராஜேந்திரன் நீடித்து வருகிறார். இவரது பணிக்காலம் முடிவடையும் சமயத்தில் புதிய டிஜிபி யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பிடிவாதமாக ராஜேந்திரன் பதவிக்காலத்தை நீட்டிக்கச் செய்து அவரையே டிஜிபியாக தொடர வைத்தது. அந்த சமயத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இறுதியில் எடப்பாடி தனது டெல்லி தொடர்புகள் மூலமாக ராஜேந்திரனை டிஜிபி பதவியில் தொடர வைத்தார்.

ஆனால், இந்த முறை அப்படி ஏதும் செய்ய முடியாது. மேலும் குட்கா உள்ளிட்ட சில விவகாரங்களில் ராஜேந்திரன் பெயர் அடிபட்டு வருகிறது. இதற்காக அவரது வீட்டிலேயே சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனவே தேவையில்லாத சர்ச்சையை தவிர்க்க அடுத்து புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாதம் 30-ம் தேதியுடன் ராஜேந்திரன் பதவிக் காலம் நிறைவடைகிறது. 

எனவே அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய டிஜிபியை எடப்பாடி பழனிசாமி அரசு நியமிக்க வேண்டும். அதன்படி தற்போது அடுத்த டிஜிபியாகும தகுதியுடன் ஜாபர் சேட் மற்றும் ஜே.கே. திரிபாதி உள்ளிட்ட 10 பெயர்கள் தான் முன்னிலையில் உள்ளன. இவர்களில் ஜாபர் சேட்டுக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவும், ஜே.கே. திரிபாதிக்கு மத்திய அரசு ஆதரவு உள்ளது. ஏற்கனவே பல்வேறு புகார்களுக்கு ஆளான ஜாபர் சேட்டை டிஜிபியாக நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஜே.கே.திரிபாதி தான் தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக வேண்டும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக மத்திய அரசின் ஆதரவு உள்ள ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிபாதி சென்னை காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் ஏற்கனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர் மன்றம்! கண்டுக்காமல் கெத்து காட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ்

0

கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர் மன்றம்! கண்டுக்காமல் கெத்து காட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ்

சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின்  தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழக படைப்பாளிகள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ராமதாஸ், தனக்கு நடந்த ஒரு அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார். அதில் டெலகிராப் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பத்திரிக்கையுடைய நிருபர் இங்கு இருக்கிறான். அவன் என்னிடம் ‘சார், மரத்தை வெட்டிவிட்டீர்களாமே’ என்று கேட்கிறான். 

அப்போது  தம்பி இந்த கேள்விக்கு ஏற்கனவே நான் 100 தடவை பதில் சொல்லிவிட்டேன். திரும்பவும் நீ கேட்கிறாய் என்றால், ராமதாஸ் என்பவன் மரத்தை வெட்டுபவன் என்று மக்களுக்குப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறாய். 

இனிமேல் ஏதாவது போராட்டம் என்றால் மரத்தையெல்லாம் வெட்ட மாட்டோம். இதேபோல கேள்வி கேட்கும் ஆளை வெட்டிக்கொன்று விட்டு போராட்டம் செய்கிறோம் அப்போது மரத்தை வெட்டுபவன் என்பதற்கு பதில் மனிதனை வெட்டுவதை பற்றி கேளுங்கள் என்று பதில் அளித்தாக கடும் கோபத்துடன் கூறினார்.

மேலும் தொடர்ந்து பத்திரிகையாளர்களைத் கடும் சொற்களை கொண்டு விமர்சித்தவர், ஏண்டா நாய்களா, கம்னாட்டி பசங்களா, நான் வைத்த மரத்தை வந்து பாருங்கள் என்கிறேன். ஒரு வருஷமாக இது வரை எந்த நாயும் பார்க்கவில்லை என்றார்.மரத்தை வெட்டியதை பற்றி மட்டும் பேசும் நீங்கள் நான் மரம் வைத்ததை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

நான் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன்,தமிழக மக்கள் அனைவருக்காகவும் தான் இந்த ராமதாஸ் 40 ஆண்டுகளாக போராடி வருகிறான் என்றும் ஊடகங்களின் அரசியல் சார்புடைய செயல்களையும்,நடுநிலை தவறி செயல்படுவதையும் சுட்டி காட்டி பேசினார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது நடுநிலை தவறி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் பத்திரிக்கையாளர்களை குறிப்பிட்டு தான் என்பதை மறைத்து அவருக்கு எதிராக பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக கண்டம் பதிவு செய்யப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பத்திரிக்கையாளர்களை கண்டித்து மருத்துவர் ராமதாஸ் பேசியது தவறு என பின்வாங்குவார் என்று பெரும்பாலான ஊடகங்கள் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் அடுத்து நடந்த வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை நடத்திய நிகழ்ச்சியில் தான் பேசியது சரி தான் என்று எப்போதும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிப்படுத்தினார்.

பத்திரிக்கையாளர்கள் தெரிவித்த கண்டனத்தையடுத்து மருத்துவர் ராமதாஸ் அவர் பேசியதிலிருந்து பின்வாங்குவார் என்று எதிர்பார்த்திருந்த ஊடகங்களுக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. கடந்த கால அரசியலில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சி என்று கூட பார்க்காமல் தவறு என்றால் உடனே சுட்டி காட்டுவதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அதே போல தான் தற்போது ஊடக அறம் தவறிய ஊடகங்களுக்கு எதிரான தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

யார் கண்டனம் தெரிவித்தால் எனக்கென்ன என பாமக நிறுவனர் ராமதாஸ் கெத்தாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது ஊடகங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இடையிலான மோதலுக்கான உண்மையான காரணம் என்ன?

0

டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இடையிலான மோதலுக்கான உண்மையான காரணம் என்ன?

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இடையிலான மோதல் அமமுக நிர்வாகிகளை அதிர வைத்துள்ளது.ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில் இருக்கும் தொண்டர்களுக்கு இது மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இப்படியே சென்றால் கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் புலம்பி வருகிறார்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்ட அமமுக படுதோல்வி அடைந்த பிறகு தினகரன் மீதான மரியாதை தங்கதமிழ்செல்வனுக்கு மட்டும் அல்ல பாதிக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கும் போய்விட்டது. இதனால் பெரிய அளவில் அமமுகவில் ஈடுபாடு இல்லாமல் தான் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் உள்ளனர். 

இதனால் முக்கிய நிர்வாகிகள் சிலரை தினகரனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சின்னம்மா வந்த பிறகு நிலைமை மாறிவிடும் அமைதியாக இருங்கள், பொறுமையாக இருங்கள் என்று ஆறுதல் கூறி வந்துள்ளார். இதற்கிடையே தங்க தமிழ்செல்வனுக்கு மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து தூது வந்துள்ளது. இதனால் அவரும் அதிமுகவில் மீண்டும் இணையும் முடிவுடனே பேச ஆரம்பித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் அதிமுகவிற்கு அழைத்துச் செல்லவும் தங்கதமிழ்செல்வன் திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் தங்க தமிழ்ச்செல்வன் மீது ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே தங்கதமிழ்செல்வனின் சொந்த ஊரான தேனியில் அமமுக தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட தினகரன் ஏற்பாடு செய்தார். ஆனால் இந்த கூட்டம் குறித்து தங்கதமிழ்செல்வனிடம் தினகரன் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.

தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைய பேசி வரும் நிலையில் தனது ஊரில் கூட்டம் போட்டு தினகரன் தனதுசெல்வாக்கை காட்டினால் அது தனது பேரத்தை பாதிக்கும் என்று தங்கதமிழ்செல்வன் கோபமடைந்துள்ளார். இதனால் தான் டிடிவி தினகரன் உதவியாளரை செல்போனில் தொடர்பு கொண்டு தங்கதமிழ்செல்வன் அவரை வெளுத்து வாங்கியுள்ளார். தினகரனின் உதவியாளர் அதனை செல்போனில் பதிவு செய்து தினகரனிடம் காட்டியுள்ளார்.

அதனை பார்த்து கோபமடைந்த தினகரன் உடனடியாக அந்த செல்போன் உரையாடலை ஊடகங்களுக்கு கிடைக்க செய்ய கேட்டுள்ளார். இதன் பிறகே அந்த ஆடியோ வைரல் ஆனது. இதனிடையே இப்படி தங்க தமிழ்ச்செல்வனுக்கு தெரியாமல்  கூட்டம் நடத்துவது தினகரன் மற்றும் தங்கதமிழ்செல்வன் இடையிலான பிரச்சனைக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும் தங்கதமிழ்செல்வன் உடனடியாக அதிமுகவில் சேர துடித்ததற்கு வேறு ஒரு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.

தென்மாவட்ட தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை தினகரன் தரப்பு தங்கதமிழ்செல்வன் தரப்பிடம் கொடுத்ததாகவும் அதற்கான கணக்கை தற்போது கேட்டது தான் பிரச்சனையின் துவக்கம் என்று சொல்கிறார்கள். இதே போல் பணத்தை யார் யாரிடம் எல்லாம் கொடுத்தாரோ அவர்களிடம் எல்லாம் தினகரன் கணக்கு கேட்க உள்ளதாக கூறப்படுவதால் அமமுக நிர்வாகிகள் பலர் பீதியில் உள்ளனர்.

எந்த பணத்தை வைத்து டிடிவி தினகரன் அரசியல் செய்யலாம் என்று நினைத்தாரோ அதே பணமே தற்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியேற காரணமாகி வருவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசை எதிர்பார்க்காமல் பொதுமக்களே சிட்லப்பாக்கம் ஏரியை தூர்வாரியதற்கு நல்லகண்ணு நேரில் வாழ்த்து!

0

அரசை எதிர்பார்க்காமல் பொதுமக்களே சிட்லப்பாக்கம் ஏரியை தூர்வாரியதற்கு நல்லகண்ணு நேரில் சென்று வாழ்த்து!

சென்னை அருகே உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை அரசின் உதவியை எதிர்பார்க்காமல் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மட்டுமே இணைந்து நேற்று தூர் வாரினார்கள். இதனையறிந்த இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,குரோம்பேட்டையை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் சுமார் 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி அமைந்துள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரியில் தேங்கும் நீர், சுற்றுப் பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. இவ்வாறு நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்தது நாளடைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரியை முறையாக பராமரிக்காததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பை இந்த ஏரியில் கொட்டப்பட்டு நீர் தொடர்ந்து மாசடைந்து வந்தது.

Chennai Water Issue-News4 Tamil Online Tamil News Channel
Chennai Water Issue-News4 Tamil Online Tamil News Channel

மேலும், ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து, தூர்ந்தும் காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் போதிய நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதை பயன்படுத்தி பலர் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள், கடைகளை கட்டியுள்ளதால் 60 ஏக்கர் பரப்பளவில் ஏரி குறுகியுள்ளது. 

தற்போது, கோடை காலம் என்பதால் ஏரி வறண்டு காணப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைக்காலத்திற்குள் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், சிட்லப்பாக்கம் பகுதி மக்கள் 500 பேர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் இணைந்து ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணியை தாங்களாகவே தொடங்கினர். முதற்கட்டமாக, நீர்பிடிப்பு பகுதியில் உள்ள குப்பையை அகற்றி, பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”மிகப்பெரிய பரப்பளவில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை பராமரிக்க அதிகாரிகள் பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தூர்ந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் போதிய நீரை சேமிக்க முடியவில்லை. 

இதனால், நிலத்தடி நீர் குறைந்து, வீடுகளின் கிணறுகளில் தண்ணீர் வறண்டுள்ளது. எனவே, இந்த வருடமாவது ஏரியை தூர்வாரும்படி கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் தூர்வாரும் பணிகளை நாங்களே செய்து கொள்கிறோம் என்று அவர்களிடம் அனுமதி கேட்டோம். அதற்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். இதனையடுத்து இப்பகுதி பொதுமக்களை ஒன்றிணைத்து நாங்கள் முதல் கட்டமாக ஏரியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். வரும் வாரங்களில் ஏரியை தூர்வாரும் பணிகளை துரிதமாக செய்ய உள்ளோம். எங்களுக்கு உதவ சில தனியார் தொண்டு நிறுவனங்களும் முன் வந்துள்ளன. பொதுமக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி பணிகளை தொடங்கியுள்ளோம். சிலர் ஏரியை தூர்வார பொக்லைன் இயந்திரத்தை இலவசமாக வழங்கியுள்ளனர். விரைவில் இந்த ஏரியை முழுமையாக தூர்வாரி சீரமைப்போம்” என்றனர்.

பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.