கால் நரம்பு இழுத்தல் மருத்து போதல் பாத வலி ஒரே வாரத்தில் சரியாக இதை செய்யுங்கள்!!

0
49

கால் நரம்பு இழுத்தல் மருத்து போதல் பாத வலி ஒரே வாரத்தில் சரியாக இதை செய்யுங்கள்!!

சியாடிகா என்று சொல்லக்கூடிய கால் நரம்பு இழுத்தல், பாதம் மறுத்து போதல், பாத வலி, பாத மத மதப்பு, கால் வலி என்று சொல்லக்கூடிய அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வான ஒரு அற்புதமான மருத்துவ குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம்.

சியாடிகா என்பது நம் உடம்பில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய நீளமான நரம்பு ஆகும். இது நம் உடலின் முதுகு புறத்தில் ஆரம்பித்து பின்னங்கால் வரை முடிவடைகிறது. இந்த சியாட்டிக்கா நரம்பு வலுவிழக்கும் போது காலில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனாலேயே கால் வலி கால் நரம்பு வலி பாத வலி, போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே இதை சரி செய்யக்கூடிய ஒரு இயற்கையான மருத்துவ குறிப்பு இங்கு பார்ப்போம்.

இதை செய்வதற்கு தேவையான பொருள் சதை குப்பை ஆகும். பார்ப்பதற்கு சின்ன சீரகம் போல காட்சியளிக்கும் சதை குப்பையானது சியாடிகா நரம்பிற்கு நல்ல ஒரு வலுவை சேர்த்து, கால்களில் ரத்த ஓட்டத்தை நன்கு அதிகரித்து, வயிற்றையும் ரத்தத்தையும் நன்கு சுத்திகரிக்கும். வயிற்றில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும் முக்கியமாக வாயு தொந்தரவை நீக்கும்.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பாத வலி பாத எரிச்சல் போன்றவற்றை இது எளிதில் குணமாக்குகிறது.

செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரை ஸ்பூன் அளவு சதைக்குப்பையை சேர்த்து அதனுடன் முன்னுரிம்மல் தண்ணீரை ஊற்றி நிறம் மாறும் வரை நன்றாக கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

வேண்டுமென்றால் இதில் சுவைக்காக நாட்டுச் சர்க்கரை வெல்லம் கருப்பட்டி பனங்கற்கண்டு போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதேபோல் இதைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் குடிக்க ஆரம்பித்து ஏழு நாட்களிலேயே நம் உடம்பில் பாத வலி பாத எரிச்சல் கால் வலி நரம்பு இழுத்தல் ஆகியவற்றில் ஒரு பெரிய மாற்றம் நமக்கு தெரிய ஆரம்பிக்கும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வருவதனால் உடம்பில் ரத்த ஓட்டத்தை நன்கு சீர் செய்து சயாட்டிக்கா நரம்பிற்கு நல்ல ஒரு வலுவை கொடுத்து கால் வலி ஏற்படுவதில் இருந்து முற்றிலுமாக தடுக்கிறது.

இது மட்டுமல்லாமல் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு, நரம்பு அடைப்பு, ரத்தத்திற்கு நன்கு ஒரு வலுவை கொடுத்து கால் வலி ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.

 

 

author avatar
CineDesk