பிரகாஷ் ராஜ் விஜய் தேவரகொண்டா ராணா டக்குபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ED வழக்கு!!

ED case against 29 celebrities including Prakash Raj Vijay Devarakonda Rana Daggupathi!!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், விஜய் தேவராகொண்டா, ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், ஸ்ரீமுகி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது. ஹைதராபாத் போலீசாரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியாக தெலங்கானாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதன்மை குற்றப் பதிவேடு (FIR) அமைந்துள்ளது. சைபராபாத் காவல்துறை சார்பில் இது … Read more

“அரசியல் டைம்பாஸ் செய்யாதீங்க; முழுமையாக இறங்குங்கள்!” – விஜய்யை தாக்கும்  நடிகை ரோஜா 

Actress Roja

திரையுலகத்தில் வெற்றி பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதும், அதை முழுமையான பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், தற்போதைய நடிகர்கள் போல் “டைம்பாஸ்” அரசியல் செய்யக்கூடாது என்றும் நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா, நடிகர் விஜய்க்கு நேரடியாக அறிவுரை கூறியுள்ளார். இந்த கருத்துக்கள், நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” எனும் பெயரில் அரசியலுக்கு களமிறங்கியிருக்கும் நேரத்தில் அவரை நேரிடையாக தாக்கும் வகையில் வெளியாகி, அரசியல் … Read more

குஜராத்தில் பாலம் இடிந்து பெரும் விபத்து: 9 பேர் உயிரிழப்பு, வாகனங்கள் ஆற்றில் மூழ்கிய சோகம்!

Major accident as bridge collapses in Gujarat: 9 dead, vehicles sink into river, tragedy!

குஜராத்தின் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில், பல வாகனங்கள் மஹிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன. இதில் 9 பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது நடந்தது? விபத்து இன்று காலை 7:30 மணியளவில் வதோதராவின் பத்ரா தாலுகா பகுதியில் நடைபெற்றது. பாலம் இடிந்ததும், அதனை கடக்க முயன்ற 5 வாகனங்கள் – இதில் 2 லாரிகள், 1 எஸ்யூவி, 1 பிக்-அப் வேன் ஆகியவை – … Read more

நாளை நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம்! அரசு ஊழியர்கள் பங்கு பெற்றால் என்ன நடக்கும்? தலைமை செயலாளர் எச்சரிக்கை!

Nationwide strike tomorrow! What will happen if government employees participate? Chief Secretary warns!

நாளை (8.7.2025) இந்தியா முழுவதும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 4 சட்ட மசோதாக்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்கிற மொத்தம் 17 கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடப்போகிறார்கள். வங்கிகள் கூட இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து ஊழியர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு … Read more

தள்ளாடும் வயதிலும் தீரா கா… 60 வயதில் 3 வது மனைவியை அறிமுகப்படுத்திய சூப்பர் ஹீரோ!!

The superhero who introduced his 3rd wife at the age of 60!!

Cinema: சினிமா துறையில் இந்த காலகட்டத்தில் தான் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் தங்களது திருமணத்தை ஓர் திருவிழாவாக முன்கூட்டியே அறிவித்து அதனை ஒரு சோசியல் மீடியா பிளாட் பார்மிக்கு விற்றும் விடுகின்றனர். ஆனால் 80 மற்றும் 90களில் தங்களுக்கு திருமணம் ஆவதையே வெளியே சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் திருமணமானவர்கள் எனக் கூறினால் அவர்களின் சினிமா வாய்ப்பு பறிபோகும் என நினைத்தனர். அப்படி தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் ஒருவர் தான் தனக்கு திருமணமானதையே கிட்டதட்ட இரண்டு … Read more

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி கைது – தமிழக காவல்துறையின் பெரும் வெற்றி!

Terrorists Abubakar Siddiqui and Mohammed Ali arrested for 30 years - Tamil Nadu Police's big win!

1995 முதல் வெடிகுண்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த பல பயங்கரவாத செயல்களுக்கு தொடர்புடையவர்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறையின் உள் தகவல்களுடன் இணைந்து, அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளியான முகமது அலியை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். … Read more

வளைவு இல்லாமல் 90 டிகிரி கோணத்தில் பாலம்! 7 இன்ஜினீயர்கள் பணியிடை நீக்கம்

வளைவு இல்லாமல் 90 டிகிரி கோணத்தில் பாலம்! 7 இன்ஜினீயர்கள் பணியிடை நீக்கம்

90 டிகிரி கோணத்தில் வளைவு இல்லாமல் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம்: 7 இன்ஜினீயர்கள் பணியிடை நீக்கம், ஒப்பந்த நிறுவனம் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு! போபால், மத்திய பிரதேசம்: போபாலில் ரூ.18 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் தற்போது கடும் விமர்சனங்களும், நடவடிக்கைகளும் சந்தித்து வருகிறது. ஆயிஷ்பாஹ் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம், மகமாய் கா பாஹ் மற்றும் புஷ்பா நகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து புள்ளியாக இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், … Read more

தெலுங்கானா பாஜகவுக்கு அதிர்ச்சி – எம்எல்ஏ ராஜா சிங் ராஜினாமா

MLA T Raja Singh resigns

தெலுங்கானா பாஜகவில் நேற்று (திங்கட்கிழமை) கோஷாமஹால் தொகுதி எம்எல்ஏ டி. ராஜா சிங் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மாநில பாஜக தலைவராக ராம் சந்தர் ராவ் நியமிக்கப்படவுள்ள தகவல்களால் ஏற்படும் ஏமாற்றத்தையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது தெலுங்கானா பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா சிங் தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். அதில், பாஜகவுக்கு பல ஆண்டுகள் உறுதுணையாக இருந்த லட்சக்கணக்கான … Read more

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு தனியான நம்பர் பிளேட் சிஸ்டம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களுக்கு தனியான நம்பர் பிளேட் சிஸ்டம் – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கு தனி வகையான பதிவு எண்  (நம்பர் பிளேட்) வடிவமைப்பு ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவு மூன்று வகை வாகனங்களுக்கும் பொருந்தும்: வணிக வாகனங்கள் தனிப்பட்ட (பிரைவேட்) வாகனங்கள் வாடகை வாகனங்கள் (ரென்டல் காப்கள்) வணிக ஹைட்ரஜன் வாகனங்களுக்கு: நம்பர் பிளேட்டின் மேல் பகுதி பச்சை, கீழ் பகுதி நீலம் உள்ளிட்ட நிறங்கள் கொண்டதாக இருக்கும். … Read more

ரேஷன் அட்டையில் இந்த எழுத்து இருக்கா; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!

ரேஷன் அட்டையில் இந்த எழுத்து இருக்கா; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!

ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே அரசு தரக்கூடிய நலத்திட்ட உதவிகளை பெற முடியும், மேலும் அரசு சார்பாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும். மலிவு விலையில் பொருட்கள் பெற முடியும். அதனால் ஒவ்வொரு நபரும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மகளிர்களுக்கு ரேஷன் அட்டையின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு மக்களுக்கு அதிர்ச்சி தரும் அளவிற்கு செய்தி … Read more