2020 – 21ம் கல்வியாண்டு ரத்தா..? மத்திய கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

2020 - 21ம் கல்வியாண்டு ரத்தா..? மத்திய கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!

நடப்பு கல்வியாண்டு ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்‌ அளித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டு (2020 – 21) தொடங்கிய நிலையிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால், கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து எந்த ஒரு நிலையான முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால், 2020 – … Read more

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி !!

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பேடிஎம் செயலி !!

கூகுள் நிறுவனமானது ஆன்லைன் சூதாட்ட விதிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்த ஒரு கட்டுப்பாடு கட்டுப்பாடற்ற சூதாட்டங்களை பயன்பாடுகளை ஆதரிக்க மாட்டோம் என்று கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனமானது ,எந்த ஒரு சூதாட்ட பயன்பாட்டிற்கும் ஒப்புதல் அளிக்காது என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.ஆனால், பேடிஎம் எந்த ஒரு விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை கூகுள் நிறுவனம் முன்வைத்துள்ளது. கூகுள் நிறுவனமானது, இன்று இந்தியாவில் விளையாட்டு சூதாட்ட … Read more

மீண்டும் ரயில் கட்டணம் உயர தொடங்கும் :! ரயில்வே வாரிய தலைமை அதிகாரி அறிவிப்பு !!

மீண்டும் ரயில் கட்டணம் உயர தொடங்கும் :! ரயில்வே வாரிய தலைமை அதிகாரி அறிவிப்பு !!

கடந்த சில நாட்களாக ரயில் நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இருந்த வரும் நிலையில், சரக்கு ரயில் கட்டணங்களை கொண்டு சமாளிக்கலாம் என்று ரயில்வே வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரித்தால் மட்டுமே ரயில்வே வாரியம் சமநிலை அடையும் என்பதை கருத்தில் கொண்டு , ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய போது  கட்டண உயர்வு குறித்து தெரிவித்துள்ளார்.மேலும் ,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ரயில்வே … Read more

கிசான் திட்டத்தை தொடர்ந்து ஆவாஸ் யோஜனா திட்டத்திலும் மோசடி !!

கிசான் திட்டத்தை தொடர்ந்து ஆவாஸ் யோஜனா திட்டத்திலும் மோசடி !!

தமிழகத்தில் கிசான் திட்டத்தில் மோசடி நடந்துள்ளதை தொடர்ந்து, தற்பொழுது ஆவாஸ் யோஜனா திட்டத்திலும் மோசடி நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கூரை வீட்டில் இருந்த காங்கிரட் வீட்டுக்கு மாற்றப்பட்டதாக கோவிந்தன் என்பவருக்கு வந்த கடிதத்தை கண்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் ,2017-19 ஆம் ஆண்டு பிரதமரின் கான்கிரீட் வீடு திட்டம் செயலுக்கு வந்த நிலையில், 2016-ம் ஆண்டே கோவிந்தன் என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இல்லாத ஒருவர் எப்படி வீடு கட்டி இருக்க … Read more

தாக்கல் செய்யப்பட்ட 3 விவசாய மசோதாக்கள்! விவசாயிகளுக்கு பயன் அளிக்குமா?

தாக்கல் செய்யப்பட்ட 3 விவசாய மசோதாக்கள்! விவசாயிகளுக்கு பயன் அளிக்குமா?

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் 3 விவசாயம் மசோதாக்களை தாக்கல்  செய்துள்ளார். விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகியவை அந்த மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாட்டில் 86% மக்கள் 2 ஏக்கர் நிலத்தை விட குறைவான நிலத்தை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு ஆதார விலையால் எந்த ஒரு பயனில்லை எனவே, விவசாயி தனது விளைபொருளுக்கு விலையை … Read more

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளுக்கு நாய்க்குட்டி பரிசு !!

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளுக்கு நாய்க்குட்டி பரிசு !!

நேற்று பிரதமரின் பிறந்தநாளையொட்டி மோப்பநாய் பிரிவை செர்ந்த சிப்பிபாறை இன நாய்க்குட்டியை பாஜக மாநில தலைவரிடம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவில் கொண்டாடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நுழைவுவாயிலில், வழக்கறிஞர்கள் பிரிவின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நடந்த விழாவில், மாநில தலைவர் முருகன் மற்றும் நிர்வாகி பங்கேற்றுள்ளனர். மேலும், பிறந்தநாளுக்கு கேக் வெட்டியும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. தற்பொழுது பரவி வரும் கொரோனாவை காக்க அக்கட்சி … Read more

இந்தியாவின் பண்டைய கால ஆராய்ச்சி குறித்து மத்திய அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

இந்தியாவின் பண்டைய கால ஆராய்ச்சி குறித்து மத்திய அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

இந்தியாவின் கலாச்சாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து தற்போது ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.   அந்தக்குழுவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்குவங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் சார்பாக பிரதிநிதிகளைச் சேர்க்காமல் முழுவதுமாக புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிக்கையில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.   அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளதாவது, “இது திட்டமிட்டு நடைபெற்ற மிகப்பெரு்ம சதி என்பதில் … Read more

இந்தியாவில் புதிதாக 96,423 பேருக்கு கொரோனா; 1,174 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் புதிதாக 96,423 பேருக்கு கொரோனா; 1,174 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 96,423 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,14,677 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,174 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 84,372 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 87,472 … Read more

வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலம்: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி!

வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலம்: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி!

பீஹாரில் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளார். பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே 1.9கி.மி நீளத்திற்கு பிரமாண்டமாக ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு 2003 – 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து 516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த கோசி ரயில் … Read more

மசோதாவை நிறைவேற்றிவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார்: துணை முதல்வர் ஆவேசம்

மசோதாவை நிறைவேற்றிவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார்: துணை முதல்வர் ஆவேசம்

விவசாய துறை சார்ந்த மூன்று மசோதாக்களை நிறைவேற்றினால், ஹர்சிம்ரத் கவுர் பாதல், அவரது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் எம்.பியுமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நடைபெற்ற அத்யாவசிய பொருட்கள் தொடர்பான மசோதா, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விலைவாசி தொடர்பான விலை நிர்ணயம் போன்ற மசோதாக்கள் உள்ளிட்டவை வாக்கெடுப்புக்கு வந்துள்ளன.   நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த … Read more