காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தை நேரத்தில் 7 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் கிலூரா பகுதியில் பாதுகாப்புப் படையுடன் நடந்த மோதலில் நேற்று அடையாளம் தெரியாத 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேபோல் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை புல்வாமா மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மூன்று பயங்கரவாதிகளை காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை வட்டாரங்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் … Read more

கேரளா ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டச்சத்திரம் சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

கேரளா ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஒட்டச்சத்திரம் சந்தையில் ரூபாய் 3 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாப்படுவதையோட்டி ஒட்டன்சத்திரம் சந்தையில் சுமார் மூன்று கோடிக்கும் அதிக மதிப்பிலான காய்கறிகளை வியாபாரிகள் கேரளாவுக்கு வாங்கி சென்றதாக தகவல் வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளில் 60% கேரளாவுக்கும், மீதமுள்ளவை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கேரள வியாபாரிகள் , ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வந்து ஏராளமான … Read more

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76472 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76472 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,87,500 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,021 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 62,550 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 65,050 … Read more

ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!! மகிழ்ச்சியில் பக்தர்கள்..!!

ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!! மகிழ்ச்சியில் பக்தர்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவாக கோவில் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அர்ச்சகர் ஒருவர் நோய்த் தொற்றால் உயிரிழந்தார் … Read more

சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வரையில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த மனுவினை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால் அரசியல் கட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு அளித்துள்ளது. கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்த பொதுநல வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் இந்த கொரோனா தொற்று சமயத்தில் சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவினை நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில் … Read more

மத்திய அமைச்சர் முன்னிலையில் ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு. !

மத்திய அமைச்சர் முன்னிலையில் ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு. !

ரஃபேல் ஜெட் விமானங்கள் முறையாக இந்திய விமானப்படையில் வரும் செப்டம்பர் மாதம் 10 – ஆம் தேதி சேர்க்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.59,000 கோடி மதிப்பில் பிரான்சிடமிருந்து 36 ரபேல் ஜெட் விமானங்கள் வாங்க முடிவு செய்தது. இதனையடுத்து 5 விமானங்கள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஆம்பாலா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ராணுவ அணிவகுப்பில் ரபேல் விமானங்கள் … Read more

கல்லூரி இறுதியாண்டு தேர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!

கல்லூரி இறுதியாண்டு தேர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!

கல்லூரி இறுதியாண்டு தேர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு! கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.ஆனால் யுஜிசி அமைப்பானது,கல்லூரி … Read more

காங். 50 ஆண்டுகளுக்கும் எதிர்க்கட்சிதான்!! உள்கட்சி பூசல் குறித்து குலாம் நபி ஆசாத் ஆவேசம்

காங். 50 ஆண்டுகளுக்கும் எதிர்க்கட்சிதான்!! உள்கட்சி பூசல் குறித்து குலாம் நபி ஆசாத் ஆவேசம்

உள்கட்சி பூசல்களால் கட்சியின் தேர்தல் நடக்காவிட்டால், காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கும் எதிர்க்கட்சி இருக்கையில் அமர வேண்டும் குலாம் நபி ஆசாத் ஆவேசமாக பேசியுள்ளார்.  நடந்த முடிந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின் தீர்மாணம் மூலம் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடர்வார் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முடிவு கட்சியில் உள்ள சிலருக்கு முழுநேர தலைவராக இருக்க வேண்டும் என கோரியிருந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கு அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எழுதியிருந்த அதிருப்தி … Read more

இனி ஆதார் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் கட்டணம்!! யுஐடிஏஐ அறிவிப்பு!!

இனி ஆதார் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் கட்டணம்!! யுஐடிஏஐ அறிவிப்பு!!

ஆதார் அட்டையில் தகவல்களை மாற்ற கட்டணம் செலுத்தும் முறையை தற்போது யுஐடிஏஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் வங்கி கணக்கு தொடங்குவது தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதார் கார்டு அவசியமாகி உள்ளது. இந்நிலையில் ஆதார் விவரங்களில் தவறுகள் நேர்ந்தால் உரிய ஆவணங்களை கொண்டு ஆதார் பதிவு மையம் (ஆதார் சேவா கேந்திரா) மூலமாகவோமோ, ஆன்லைன் மூலமாகவோ இலவசமாக சரிசெய்து கொள்ளும் நடைமுறை இதுவரை இருந்தது. இந்நிலையில், தற்போது ஆதார் இணைப்பை நிர்வகிக்கும் யுஐடிஏஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் … Read more

இந்தியாவில் புதிய உச்சத்தை அடைந்துள்ள கொரோனா தொற்று!!

இந்தியாவில் புதிய உச்சத்தை அடைந்துள்ள கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 77,266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,87,500 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,057 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 61,529 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 60,177 பேர் … Read more