National
National News in Tamil
அன்புமணி மீது அவதூறு செய்தி வெளியிட்டது இதை மறைக்க தானா? பிரபல செய்தி நிறுவனத்தின் மெகா மோசடி
அன்புமணி மீது அவதூறு செய்தி வெளியிட்டது இதை மறைக்க தானா? பிரபல செய்தி நிறுவனத்தின் மெகா மோசடி சமீபத்தில் பாமகவை சர்ச்சைக்கு உள்ளாக்கிய விவகாரமான மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணி ராமதாஸ் அவர்கள் வருகைப் பதிவு குறைவாக உள்ளதாகவும், மேலும் அவர் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களும், திமுக ஆதரவு பெற்ற ஊடகங்களும் வேகமாக பரப்பி … Read more
முதலிடத்தில் தமிழகம் !!!
தேசிய நல்லாட்சி தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை மிகச்சிறந்த நிர்வாகத்திறன் உள்ள மாநிலங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மூன்று வகைகளாகப் பிரித்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. மஹாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும் கேரளா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் ஜார்ஜண்ட் ஆகிய மாநிலங்கள் நிர்வாகத்திறன் மிகவும் குறைவாக உள்ள மாநிலங்களாகப் … Read more
சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன?
சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன. இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் வருகிற அதிகாலை 3 மணி முதல் நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை திறந்து இருந்தது. தொடர்ந்து பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு. 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடைபெற்றதாக தெரிவிக்கபட்டது. ஐயப்பனுக்கு தங்க அங்கி … Read more
இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை! சிங்கள இனவெறியின் உச்சம் என இராமதாஸ் கண்டனம்
இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை! சிங்கள இனவெறியின் உச்சம் என இராமதாஸ் கண்டனம் இலங்கையில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் அந்த நாட்டின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிரானது ஆகும். ‘‘ஸ்ரீலங்காத் தாயே’’ என்று தொடங்கும் இலங்கை தேசிய … Read more
“அவரது பேச்சைவிட, அவரது அமைதி சக்தி வாய்ந்தது” – வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி புகழாரம் !!!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக் பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார். வாஜ்பாயின் … Read more
அயோத்திக்கு ஆபத்து – உளவுத்துறை எச்சரிக்கை.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நில வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 9-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அங்கு சா்ச்சைக்குள்ளாகியிருந்த 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்ட அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், இதற்காக 3 மாதங்களுக்குள் ஓா் அறக்கட்டளையை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், முஸ்லிம் தரப்பினா் புதிதாக மசூதி கட்டிக்கொள்வதற்கு அயோத்தி நகரிலேயே 5 ஏக்கா் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் … Read more
நித்தியானந்தா பற்றிய அடுத்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ?
பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார். மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன … Read more
டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க தோற்கும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ஆருடம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது ஜே.எம்.எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜே.எம்.எம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் முன்னணி பெற்றது. இதைத் தொடர்ந்து 47 தொகுதிகளில் ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜே.எம்.எம் கட்சியின் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதிவியேற்கவுள்ளார். இந்த ஒரு … Read more
நாடு முழுவதும் வாஜ்பாயின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது!
முன்னாள் பிரதமரும் மூத்த தலைவராக இருந்த மறைந்த அட்டல் பிகாரிவாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் நினைவிடம் அமைந்திருக்கும் டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்நிலையில், அட்டல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர்களான அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவரும் அவரது நண்பருமான அத்வானி உள்ளிட்ட … Read more