ஒரு கிலோ தக்காளி ரூ.80! அதிர்ச்சியடைந்த மக்கள்

ஒரு கிலோ தக்காளி ரூ.80! அதிர்ச்சியடைந்த மக்கள்

டெல்லி: டெல்லியில்  தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கிலோ 80 ரூபாய் வரை விற்கிறது. மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு தக்காளி விளைகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி குறைந்தது. அதன்காரணமாக, டெல்லியில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். டெல்லியில் 2 வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.45க்கு விற்கப்பட்டது. ரகம், தரத்துக்கு ஏற்ப தற்போது … Read more

காங்கிரசின் தேசபக்தி எது என்பது எங்களுக்கு தெரியும்! தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு

Modi Says India Will Not Allow Water to Flow to Pakistan-News4 Tamil Latest Online Tamil News Today

ஜல்னா: காந்தி என்கிற ஒரு குடும்பத்தை போற்றுவது தான் காங்கிரசின் தேசப்பக்தி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார். மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. இரு கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். அங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். ஜல்னா, அகோலா மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தேசத்துக்கு வழிகாட்டிய துணிச்சல் மிக்கவர்களை கொண்ட மாநிலம் … Read more

இறுதிக்கட்டத்தை எட்டிய அயோத்தி விவகாரம்! தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு

இறுதிக்கட்டத்தை எட்டிய அயோத்தி விவகாரம்! தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு

டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் அயோத்தியில், 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்றும், எனவே ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் கோரி வருகின்றன. மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக, 28 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. அது தொடர்பான வழக்கில், முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு … Read more

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தன்னை சிறையிலேயே அடைத்து வைத்து சிபிஐ அவமானப்படுத்த விரும்புகிறது என்று ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் … Read more

இந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல் தடுப்போம் என பிரதமர் மோடி உறுதி

Modi Says India Will Not Allow Water to Flow to Pakistan-News4 Tamil Latest Online Tamil News Today

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம், மேலும் இதற்காக விவசாயிகளுகளுடன் இணைந்து போராடுவோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். வரும் 21 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரும் 24 ஆம் தேதி இதற்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்நிலையை இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி என்ற … Read more

டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ்

டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ்

டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ் டெல்லி: டிரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராமில் முதலிடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அற்புதமாக வலம் வருபவர் பிரதமர் மோடி. தாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என பல விஷயங்களை அவர் அதில் பகிர்ந்து வருகிறார். அதனால் அதில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகம். தற்போது உலக அளவில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறார். மோடியை பின் தொடர்பவர்களின் … Read more

2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்! ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல்

2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்! ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல்

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம், ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை தெரிவித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம் பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி மற்றும் தமிழில் மொழிகளில் சினிமா பிரபலங்களை வைத்து நடத்தப்படுகிறது, இதில் ஆபாசம் கள்ளக்காதல் போன்ற நிகழ்வுகள் தூண்டுகோலாய் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது, நிகழ்ச்சியை தடை வேண்டும் … Read more

பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடமே கொள்ளை! விரைந்து செயல்பட்ட காவல்துறை

பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடமே கொள்ளை! விரைந்து செயல்பட்ட காவல்துறை

பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடமே கொள்ளை! விரைந்து செயல்பட்ட காவல்துறை பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த கொள்ளையன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, திருடிய பொருள்கள் அனைத்தும் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.  பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பெண் மோடி. அவர், டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் தமயந்தி பெண் மோடி வைத்திருந்த ஹேண்ட் பேக்கை … Read more

மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தான் விரும்பினார்! விஜய் கோகலே

மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தான் விரும்பினார்! விஜய் கோகலே

மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தான் விரும்பினார்! விஜய் கோகலே பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனையின் போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இரு நாட்டு தலைவர்கள் இடையே இன்று 90 நிமிடங்கள் ஆலோசனை நடந்தது. தொடர்ந்து பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் மோடி, ஜின்பிங்கிற்கு விருந்தளித்தார். மொத்தமாக இரு நாட்டு தலைவர்களும் 6 … Read more