ஆக்சிஜன் விவகாரம்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்!

ஆக்சிஜன் விவகாரம்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டிருக்கும் சமூக வலைதள பதிவில் தமிழகத்தில் இருக்கின்ற சில பிரபலமான தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை என்பதை எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதாகவும், இது தொடரக்கூடாது என்று நம்புவதும் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்கு மத்திய  அரசு அறிவித்துள்ள தினசரி ஒதுக்கீடான 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இப்போதிலிருந்தே பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்திக்கான சாத்தியக் … Read more

ஆக்ஸிஜன் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

ஆக்ஸிஜன் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு, புதுவை போன்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்திருக்கின்ற தேசிய நிபுணர் குழு பரிந்துரைகள் தொடங்கும்வரை நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவேண்டும், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதன் காரணமாக, டி.ஆர்.டி.ஓ மூலமாக ஆக்சிஜனை உற்பத்தி வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.. அதோடு இங்க நோய்த்தொற்றின் … Read more

சட்டசபை உறுப்பினர் கூட்டத்தில் ஒ.பி.எஸ் செய்த செயல்! அதிருப்தியில் இ.பி.எஸ்!

சட்டசபை உறுப்பினர் கூட்டத்தில் ஒ.பி.எஸ் செய்த செயல்! அதிருப்தியில் இ.பி.எஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்கான அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் சென்ற வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது .அந்த கூட்டத்தில், ஏற்ப்பட்ட சட்டசபை உறுப்பினர்களுக்கு இடையேயான கருத்து கூச்சல் குழப்பம் காரணமாக, அன்றைய முடிவும் எடுக்கப்படவில்லை.ஆகவே இன்றைய தினம் நடைபெறும் என ஒத்தி வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று காலை நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. ஆனால் தொடர்ச்சியாக பூ பன்னீர்செல்வம் … Read more

சட்டசபை கட்சித்தலைவர் பதவி! சீனியர்களை ஓரம் கட்டிய எல்.முருகன்!

சட்டசபை கட்சித்தலைவர் பதவி! சீனியர்களை ஓரம் கட்டிய எல்.முருகன்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு சுமார் நான்கு சட்டசபை உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழக சட்டசபையில் இடம் கிடைத்திருக்கிறது என்று பெருமையுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன்.இவ்வாறான சூழ்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை கட்சியின் தலைவராக திருநெல்வேலி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மே மாதம் ஒன்பதாம் தேதி … Read more

#BREAKINGஎதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி!

#BREAKINGஎதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவையில் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் 66 இடங்களை தனித்து பிடித்த அதிமுக, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில், அதிமுகவில் … Read more

முழு ஊரடங்கு! சூடுபிடித்த மது விற்பனை!

முழு ஊரடங்கு! சூடுபிடித்த மது விற்பனை!

நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.இந்த ஊரடங்கு காலத்தின் போது அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து வேறு எந்த கடைகளுக்கோ அல்லது பெரிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், செயல்படுவதற்கான அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.அதேபோல இந்த 14 நாட்களிலும் டாஸ்மாக் கடைகளும் முழுமையாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து வாரம்தோறும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு வந்தது. ஆனால் … Read more

#BREAKING கொரோனா நிவாரண நிதி திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

#BREAKING கொரோனா நிவாரண நிதி திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதன்படி கடந்த 7ஆம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவை சார்ந்த 33 மந்திரிகளும் தங்களுடைய பதவியை ஏற்றுக் … Read more

16வது சட்டசபை தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு!

16வது சட்டசபை தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு!

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையில், அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.இதற்கிடையில் தமிழகத்தின் பதினாறாவது சட்டசபை கூட்டத்தொடர் மே மாதம் 11ஆம் தேதி அதாவது நாளை நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்தக் கூட்டம் நாளை காலை பத்துமணியளவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சட்டசபை கூட்டத்திற்கு … Read more

முதல்வரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மதுரை சிறுவன்!

முதல்வரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மதுரை சிறுவன்!

கொரோனா தொற்றின் முதல் அலையின் பொழுது அமெரிக்கா எந்த அளவிற்கு பாதிப்படைந்தது தற்போது அதே நிலையில் இந்தியா இருந்து வருகிறது.இந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை என்று சொல்லப்படுகிறது இவ்வாறான சூழ்நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலையை பார்த்து உலக நாடுகள் அதீத கொடை உள்ளத்தோடு இந்தியாவிற்கு பலவகையிலும் உதவிகளை புரிந்து வருகிறார்கள். அதில் … Read more

திடீரென்று அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்!

திடீரென்று அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு அதைத் தொடர்ந்து அவருடன் சேர்ந்து 34 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், அதிமுக சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து … Read more