பழனிச்சாமியை தவிர்க்கும் செங்கோட்டையன்!. கொங்கு மண்டலம் கையை விட்டு போகுமா?..

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் ஆட துவங்கிவிட்டது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். இந்நிலையில்தான் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்க துவங்கியிருக்கிறார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். அடுத்து அதிமுக அமைச்சர் … Read more

உங்க சினிமாவை ஹிந்தியில் டப் பண்ணாதிங்க!. கோலிவுட்டை சீண்டும் பவன் கல்யாண்!..

pawan kalyan

தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே ஹிந்தி எதிர்ப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. மும்மொழிக்கொள்கை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஹிந்தியை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது. ஆனால், அதை ஏற்க முடியாது என தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. அறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கையையே நாங்கள் பின்பற்றுவோம் என உறுதியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை கொண்டு வராவிட்டால் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசுக்கு கொடுக்க மாட்டோம் என முரண்டு பிடித்துகொண்டிருக்கிறது. இது தமிழகத்தில் … Read more

1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? – அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? - அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தின் மீது எழுப்பிய ஆயிரம் கோடி முறைகேடு குறித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பெயர்களில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகள் மத்திய அரசிற்கு விருப்பமில்லாததால், அமலாக்கத்துறையை பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளது என்று கூறினார். … Read more

ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்: தங்கம் தென்னரசு ஆவேசம்!

ரூ. 2,000 கோடி நிதியை இழந்தாலும் இருமொழி கொள்கையை விட்டுதர மாட்டோம்: தங்கம் தென்னரசு ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், மாநில அரசு ரூ.2,000 கோடி நிதியை இழந்தாலும், இருமொழிக் கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதில், மாணவர்களின் அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்யும் “எண்ணும் எழுத்தும்” திட்டம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் … Read more

தமிழக பட்ஜெட் 2025 -26 : முக்கிய அம்சங்கள் என்னென்ன?.. வாங்க பார்ப்போம்!..

thennarasu

2025 – 26 நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல முக்கிய அறிவுப்புகளை அறிவித்தார். அவை என்னவென்று பார்ப்போம். 350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம்.. 50 கோடி மதிப்பீட்டில் கடல்சார் வள அறக்கட்டளை.. 70 கோடியில் 700 டீசல் பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும். ஒரு கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி … Read more

ஓசூரில் உருவாகும் டைடல் பார்க்!.. 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!..

tiddel park

2025 – 26 நிதியாண்டின் தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். கோவை சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் இயந்திர தொழில் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் 310 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படும் எனவும் அறிவித்தார். இதனால் 7 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் கூறினார். மேலும், ஒசூரில் … Read more

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கையை விமர்சித்து, ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூபாய் குறியீட்டான ₹ அடையாளம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “ரூ” குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை திமுக அரசு ஒரு பெரிய மாற்றம் என விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். இதனை மறைக்கவும், மக்கள் கவனத்தை திருப்பவும், திமுக … Read more

12 தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு!! சிபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய முடிவு!!

Another chance for students who could not appear for 12th exam!! CBSE released the main result!!

நாளை ( மார்ச் 15 ) இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி தேர்வு நடைபெற இருப்பதால் ஹோலி பண்டிகையின் காரணமாக இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சிபிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த முக்கிய முடிவு குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறியிருப்பதாவது :- இந்தியாவில் பல பகுதிகளில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படக்கூடிய சூழலில், ஒரு சில இடங்களில் … Read more

மீண்டும் அமலுக்கு வரும் MDR கட்டணம்!!UPI மற்றும் RuPay பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்!!

MDR charges to be re-imposed!! Problems with UPI and RuPay transactions!!

MDR பரிவர்த்தனை கட்டணங்களை 2022 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் அதனை புழக்கத்திற்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியான தகவல்களின்படி யுபிஐ மற்றும் ரூபே பேமென்ட் களுக்கான சேவை கட்டணங்கள் 2022 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த முன்மொழிவை தொழில்துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருப்பதாகவும் மத்திய … Read more

டாஸ்மாக் ஊழலில் சிக்கப்போகும் அதி முக்கிய புள்ளிகள்: அமலாக்கதுறையின் அறிக்கை – தமிழக அரசியலில் உச்ச பீதி!

டாஸ்மாக் ஊழலில் சிக்கப்போகும் அதி முக்கிய புள்ளிகள்: அமலாக்கதுறையின் அறிக்கை - தமிழக அரசியலில் உச்ச பீதி!

டாஸ்மாக் தலைமையகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பல தனியார் நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பல தனியார் மதுபான நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை மாற்றியும் அரசுக்கு மோசடி செய்துள்ளன. திட்டமிட்ட முறையில் நடைபெற்ற மோசடி அமலாக்கத்துறை அறிக்கையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய … Read more