இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!

0
133
#image_title

இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!

உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் தண்ணீரால் தான் உயிருக்கு ஆபத்தான கொடிய நோய்கள் படையெடுக்கிறது.

கழிவுகள், நோய் கிருமிகள் கலந்து குடிக்கும் நீர் சுகாதாரமற்ற நீராக மாறிவிடுகிறது. உடல் இயக்கத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ள தண்ணீரை சுத்தப்படுத்த ஆயிரக்கணக்கில்விலை கொடுத்து பில்டர் வாங்கி பயன்படுத்துவதை விட நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பதிமுகம் பட்டையை வாங்கி பயன்படுத்தலாம்.

இந்த பதிமுகம் பட்டை தண்ணீரில் உள்ள அழுக்கு, கிருமிகளை அழித்து குடிக்க ஏதுவாக மாற்றுகிறது. பதிமுகம் என்ற மரத்தில் இருந்து கிடைக்க கூடிய இந்த பட்டை கேரளாவில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நீர், பில்டர் நீர்.. ஆகியவற்றை தவிர்த்து விட்டு பதிமுக பட்டை நீரை குடிக்கத் தொடங்குங்கள்.

*பதிமுகம் பட்டை

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய இந்த பதிமுக பட்டையின் விலை மிகவும் குறைவாகத் தான் இருக்கும்.

இந்த பட்டையில் 4 அல்லது 5 எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரம் முழுவதும் நிரப்பிய தண்ணீரில் போட்டு காய்ச்சவும்.

இவ்வாறு செய்வதால் நீரின் நிறம் மாறத் தொடங்கும். பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு குடிக்கவும். கர்ப்பிணி பெண்கள் மட்டும் இந்த நீர் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

பதிமுகம் பட்டை நீரின் பயன்கள்…

*உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
*சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
*எலும்பு வலிமை அடையும்.
*உடல் ஆரோக்கியம் மேம்படும்.