அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்த கணவர்!! வேதனையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய கமல்ஹாசன் பட நடிகை!! 

0
35

அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்த கணவர்!! வேதனையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய கமல்ஹாசன் பட நடிகை!! 

தனது கணவர் தன்னை அடித்ததோடு மட்டுமில்லாமல் சிகரெட்டால் சூடு வைத்ததால் நள்ளிரவில் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கமல் பட நடிகை வேதனையுடன் தெரிவித்தார்.

பாபி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டிம்பிள் கபாடியா. அந்தப் படத்தில் தனது அப்பாவி தோற்றம், பிகினி உடை மற்றும் பெரிய பழுப்பு நிற கண்களால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

அதைத்தொடர்ந்து காஷ், திருஷ்டி, ரூடாலி, உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் விக்ரம் திரைப்படத்தில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டிம்பிள்.

டிம்பிள் கபாடியா தனது 16ஆம் வயதில் 1973 ஆம் ஆண்டு ராஜ்கபூரால் பாபி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். படம் வெற்றி பெற்ற போதும் அதே ஆண்டில் பிரபல நடிகர் ராஜேஷ் கண்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆன ராஜேஷ் கண்ணாவின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு பிரச்சனைகள் நிறைந்தது. 1973 ஆம் ஆண்டில் இருந்து ராஜேஷ் கண்ணாவின் பல படங்கள் தோல்வியை தழுவியதால் அவரது நட்சத்திர அந்தஸ்து சரிந்தது. இதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தனது தொழில் அழிந்து போவதை கண்டு ராஜேஷ் கண்ணா மது மற்றும் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானார்.

டிம்பிள் கபடியாவால் தனது கணவரை இந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை. பலமுறை அவரை சமாதானப்படுத்த நினைத்தபோதும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. டிம்பிள் ராஜேஷ் கண்ணா இடையே ஆன உறவு மோசமடைந்து வந்தது. தனது மனைவியை ராஜேஷ் கண்ணா அடித்து உதைத்துள்ளார். இதனால் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு டிம்பிள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் மாடலும் நடிகையுமான அஞ்சு மகேந்திராவை ராஜேஷ் கண்ணா காதலித்து இருவரும் ஏழு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். அஞ்சுவை திருமணம் செய்ய ராஜேஷ் விரும்பிய போது அஞ்சு மறுத்துவிட்டார். அவர் தனது தொழிலில் கவனம் செலுத்த விரும்பியதால் திருமணத்தை தவிர்த்தார். இதனால் நொந்து போன ராஜேஷ் கண்ணா பின்னாளில் டிம்பிளை சந்தித்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

டிம்பிள் தனது மகள்கள் டிவிங்கள் கண்ணா, ரிங்கி கண்ணா ஆகியோரை வளர்ப்பதற்காக தன்னுடைய நடிப்பு தொழிலை விட்டு 12 ஆண்டுகள் விலகி இருந்தார். பின்னர் 1982 ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டு 1984 ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு கமல்ஹாசன் ரிஷி கபூர் ஆகியோருடன்  நடித்த சாகர் படம் அவரை மீண்டும் பிஸியாக்கியது.

அந்தப் படத்தில் சில சீன்களில் மேலாடை அற்ற நிலையில் காட்சியில் தோன்றியிருப்பார். அது பெரும் சர்ச்சையை கிளப்பிய போதும் இந்த படத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்திக் கொள்ளவும் அந்த படமே காரணமாக அமைந்தது. தற்போது 66 வயதாகும் டிம்பிள் டிவி தொடர்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.