இளநரை பிரச்சனையை எவ்வாறு சரி செய்வதென்று தெரியவில்லையா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

0
34
#image_title

இளநரை பிரச்சனையை எவ்வாறு சரி செய்வதென்று தெரியவில்லையா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்தி பலன் பெறுங்கள்!!

முன்பெல்லாம் 45 வயதை கடந்தால் தான் வெள்ளை நரை தென்பட ஆரமிக்கும். ஆனால் இன்றைய வாழக்கை முறையில் சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டது.

இளநரை உருவாகக் காரணம்:-

*ஆரோக்கியமற்ற உணவுமுறை

*ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

*இரசாயன பொருட்களை முடிகளுக்கு பயன்படுத்துதல்

*முடி உதிர்வு

*அலர்ஜி

*சத்து குறைபாடு

இளநரை பாதிப்பை சரி செய்ய எளிய வழி:-

தேவையான பொருட்கள்:-

*பாதாம் ஆயில் – 6 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை..

முதலில் ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும். பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து 6 தேக்கரண்டி பாதம் எண்ணெயை எடுத்து அதில் சேர்த்து கலக்கி கொள்ளவும். இதை தலை முடிகளின் வேர்காள் பகுதிகளில் ஊற்றி நன்கு மஜாஜ் செய்யவும். பிறகு 30 நிமிடங்கள் அதை தலையில் இருக்கும் படி ஊற விடவும்.

பிறகு சுத்தமான தண்ணீரில் முடியை அலசிக் கொள்ளவும். இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். சீகைக்காய், பூந்தி கொட்டை தூள் போன்ற இயற்கையான பொருட்களை கொண்டு கூந்தலை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே இளநரை பாதிப்பு நீங்கி பாதிப்பு நீங்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.