இனி இந்த இலையை பார்த்தால் விடவே மாட்டீர்கள்!! அத்தனை மருத்துவ பயன்களை கொண்டது!!

0
70

இனி இந்த இலையை பார்த்தால் விடவே மாட்டீர்கள்!! அத்தனை மருத்துவ பயன்களை கொண்டது!!

இன்றைக்கு ஒரு முக்கியமான இலையின் பயன்களை பார்க்க இருக்கிறோம். அதாவது விழா காலங்களில் விசேஷ நாட்களில் வீட்டின் வாசலில் கட்டக்கூடிய ஒரு இலை தான் மாவிலை. எந்த ஒரு இலையாக இருந்தாலும் மரத்தை விட்டு அந்த இலையை எடுத்து விட்டால் அது ஆக்ஸிஜனை தராது.

ஆனால் மாவிலையானது அதற்கு எதிர்மறையாக மரத்திலிருந்து எடுத்து வந்து வீட்டில் கட்டும்போதும் அது ஆக்ஸிஜனை தருகிறது. இதனாலேயே விசேஷ நாட்களில் மாவிலைகளை பயன்படுத்துகிறார்கள்.

இதனால் நமக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைத்து மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. மாவிலையில் அதிகப்படியான விட்டமின் ஏ பி சி ஈ போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

இந்த மாவிலையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் அதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

செய்முறை 1
ஐந்திலிருந்து பத்து மாவிலைகளை நன்கு சுத்தம் செய்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போட்டுக் கொள்ளவும்.இதனுடன் ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

பயன்கள்:
இவ்வாறு கொதிக்க வைத்த இதை வடிகட்டி மிதமான சூட்டிலும் குடித்து வரலாம். அல்லது இரவு இதை செய்துவிட்டு காலை எழுந்தவுடன் வடிகட்டி குடித்து வந்தாலும் மிகவும் நல்லது. இதை காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது மாலை நேரத்திலோ குடித்து வரலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் இதில் சுவைக்காக உப்பு அல்லது தேனை சேர்த்து குடித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு இதை தொடர்ந்து குடித்து வரும்போது ரத்தக்குழாய்களின் அடைப்புகளால் உருவாகும் வெரிகோஸ் வெயின் எனப்படும் நரம்பு சுருட்டல் வியாதியை இது சரி செய்கிறது. ரத்த அழுத்த குறைபாடுகளை சரி செய்யக்கூடியது.

மேலும் ரத்த அணுக்களை வலுவூட்டி ரத்த ஓட்டத்தை சீராக்க கூடிய வல்லமை கொண்டது இந்த தேநீர்.உடலில் இருக்கக்கூடிய நச்சு கழிவுகளை உடனடியாக கரைத்து வெளியேற்றக்கூடிய சக்தி இந்த மாவிலை தேநீருக்கு உள்ளது.

செய்முறை 2
கொழுந்தாக இருக்கக்கூடிய மாவிலை இலைகளை நான்கு அல்லது ஐந்து பறித்து அதை சிறிதளவு வதக்கி பிறகு தண்ணீரில் தேன் கலந்து வதக்கி இலைகளை இரவு முழுவதும் ஊற வைத்து விடவும்.பிறகு காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த இதை குடித்து வர வேண்டும்.

பயன்கள்:
இவ்வாறு செய்வதால் சுவாச பாதிப்புகளில் ஏற்படக்கூடிய தொண்டை கட்டுகளை நீக்கும். நுரையீரலில் தங்கி இருக்கக்கூடிய சளியை முழுமையாக கரைத்து வெளியேற்றும். மேலும் ஆஸ்துமா பிரச்சனையையும் இது சரி செய்து விடும்.

இரவு முழுவதும் கொழுந்து இலைகளை ஊற வைத்து காலையில் அதை வெறும் வயிற்றில் குடித்து வர இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு கொடிய நோயான சர்க்கரை வியாதியை இது குணப்படுத்துகிறது.

செய்முறை 3
மாவிலை இலைகள் கிடைக்கவில்லை எனில் நாட்டு மருந்து கடைகளில் இருக்கக்கூடிய மாவிலை பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம். இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு மாவிலை பொடியை கலந்து விட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். மறுநாள் காலையில் இதை வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

பயன்கள்:
இவ்வாறு குடித்து வர சிறுநீரக கற்கள் பிரச்சனை உடனடியாக குணமாகும். மற்றும் பற்களுக்கு நல்ல ஒரு உறுதியை அளிக்கும். இந்த தண்ணீரை தினமும் குடித்து வர வாயில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் வாய்ப்புண் ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற பல்வேறு வகையான வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

செய்முறை 4
மாவிலை இலைகளை அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ளவும். அதேபோல் பொன்னாங்கண்ணி கீரை சாறையும் எடுத்துக் கொள்ளவும். இந்த இரண்டு சாரையும் தேங்காய் எண்ணெயில் கலந்து சிறிதளவு கொதிக்க வைத்து ஆற வைத்து தலையில் தடவி வர வேண்டும்.

பயன்கள்:
இவ்வாறு தடவி வருவதால் தலைமுடி பிரச்சனை முடி கொட்டுதல் முடி இளநரையாக இருத்தல் என அனைத்து விதமான தலைமுடி பிரச்சனைகளையும் சரி செய்யும்.

மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும். அதாவது வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய கண் பிரச்சனை சில பேருக்கு இருக்கக்கூடிய கிட்ட பார்வை தூரப்பார்வை என அனைத்து பிரச்சினைகளையும் இந்த மாவிலை சரி செய்யும்.