காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

0
66

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை குறைந்தது 4 மணி நேரமாவது தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

இல்லையென்றால் இரவு தூங்குவதற்கு முன் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் இதை சாப்பிட்டு வரலாம். இவ்வாறு ஊறிய உலர் திராட்சையில் விதை இருந்தால் அதை தனியே எடுத்து விடவும் விதை இல்லை என்றால் அதை தாராளமாக பயன்படுத்தலாம்.

இவ்வாறு ஊறிய இந்த உலர் திராட்சைகளை அதன் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளவும். இதை நாம் தினமும் எடுத்து வர நம் உடலில் ஒரு சிறிய சோர்வு கூட இல்லாமல் ஆரோக்கியமாக இருப்போம். உடல் பலவீனம் எலும்பு பலவீனத்தால் சிரமப்படுபவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம்.

இதில் அயன், கால்சியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது. உலர் திராட்சை நம் உடலை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும். மூளைக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தி தலைவலி தலைசிறந்த பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய சக்தி உலர் திராட்சைக்கு உள்ளது. அனிமியா ரத்த சோகை போன்ற நோய்கள் இருப்பவர்கள் இந்த பானத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

author avatar
CineDesk