Breaking News

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்!

Pachaiyappan college professor sacked! Conversation with students about caste!

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்!

சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மாணவர்களிடம் உரையாற்றினர். அப்போது அவர் நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பது தெரியாது என கூறினார். பிறகு அவரே நீ எந்த சமூகத்தை சேர்ந்தவர் என கேட்டுள்ளார்.

மேலும் அவர் ஓவ்வொருவரின் மூஞ்சிலயும் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று எழுதி வைத்திருக்கிறது என கூறினார். நீ அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியையிடம் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும் எனவும் அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பேராசிரியை அனுராதாவை இரண்டு மாதங்களுக்கு பணியிடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளது.மேலும் அந்த விசாரணையில் சாதி பற்றி பேசியது உறுதியானதால் கல்லூரி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Comment