கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு! தமிழிசைக்கு கோர்ட் புதிய ஆணை

சென்னை: கனிமொழி எம்பியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கனிமொழி. அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பாஜகவின் தமிழிசை சவுந்திர ராஜன். தற்போது, அவர் தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கிறார். அந்த பதவிக்கு முன்பாக, கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன, எனவே அந்த … Read more

இமயமலையில் ரஜினியுடன் ‘கிளிக்’கிய ரசிகர்கள்! வைரலாகும் போட்டோக்கள்!

டெல்லி: இமயலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 2010ம் ஆண்டு வரை ஒவ்வொரு படம் நடித்து முடித்தவுடன் இமயமலை சென்று விடுவார். ஆனால் இடையில் சில காலம் இமயமலை செல்லாமல் தவிர்த்து வந்தார். அதற்கு உடல்நிலை தான் காரணம் என்று அறியப்பட்டது. கடந்த ஆண்டில் காலா, எந்திரன் … Read more

ராஜிவ்காந்தி கொலை விவகாரத்தில் பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை! கெத்து காட்டும் சீமான்

Seeman-News4 Tamil Online Tamil News

ராஜிவ்காந்தி கொலை விவகாரத்தில் பேச்சை திரும்பப் பெறப்போவதில்லை! கெத்து காட்டும் சீமான் தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டுமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறிவந்தார்கள். ஆனால் … Read more

பிகில் படத்துக்கு தடை வருமா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பிகில் படத்துக்கு தடை வருமா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி சென்னை: நடிகர் விஜயின் பிகில் பட வெளியீட்டுக்கு ஆளும் அதிமுக அரசு தடை போடுகிறதா என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில் அடுத்து வெளியாக இருக்கும் படம் பிகில். விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. அதற்கான வேலைகளிலும் தயாரிப்பு நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தை … Read more

டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ்

டிரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி! 3 கோடி பாலோயர்ஸ் டெல்லி: டிரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராமில் முதலிடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அற்புதமாக வலம் வருபவர் பிரதமர் மோடி. தாம் செல்லும் இடங்கள், சந்திக்கும் நபர்கள் என பல விஷயங்களை அவர் அதில் பகிர்ந்து வருகிறார். அதனால் அதில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகம். தற்போது உலக அளவில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறார். மோடியை பின் தொடர்பவர்களின் … Read more

பிசிசிஐ புதிய தலைவராகிறார் தாதா!

பிசிசிஐ புதிய தலைவராகிறார் தாதா! பரபரப்பான திருப்பத்துடன், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா புதிய செயலாளராகவும், அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் புதிய பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான மனு தாக்கல் கடைசி நாளான திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. பின்னர் அக். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் இவர்கள் அனைவரும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட … Read more

2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்! ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல்

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம், ரிசர்வ் வங்கி கொடுத்த அதிர்ச்சி தகவல். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரபல பத்திரிக்கை நிறுவனம் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இந்த பதிலை தெரிவித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பது, கருப்புப் பணம் பதுக்கலைத் தடுப்பது, கள்ளப் பணம் … Read more

தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- மருத்துவர் ராமதாஸ்

தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும்- மருத்துவர் ராமதாஸ் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற முறையில் தமிழக அரசுடன் இணைந்து மத்திய அமைக்கவுள்ள 6 மருத்துவ கல்லூரிகள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தமிழக அரசுடன் இணைந்து 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு … Read more

அமைதிக்கான நூறாவது நோபல் பரிசு பெற்ற அகமது!

எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிரதமர் அபியா அகமது, “அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக” 2019 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரு அகமது தலைமையின் குழு கடந்த ஆண்டு ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது எரித்திரியாவுடனான இராணுவப் போரை முடிவுக்கு கொண்டுவர உதவியது, கிட்டதட்ட 1998 முதல் 2000 வரை எல்லை தகராறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஒஸ்லோவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் 9 மில்லியன் க்ரோனர் (சுமார் 54 மில்லியன் … Read more

ஜப்பானை ஆட்டிப்படைத்த டைபூன் புயல்

ஜப்பானை ஆட்டிப்படைத்த டைபூன் புயல் ஜப்பானில் மிக சக்திவாய்ந்த புயலான டைபூன் ஹகிபிஸ், 30 உயிர்களை பறித்தது மற்றும் 15 பேரைக் காணவில்லை. சனிக்கிழமையன்று டோக்கியோவுக்கு தெற்கே நிலச்சரிவை ஏற்படுத்திய சூறாவளி டைபூன், இன்று கடலுக்குச் செல்வதற்கு முன்பு ஜப்பானின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளைத் தாண்டியது. சுமார் 425,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன, அதே நேரத்தில் சுமார் 8 மீ மக்களுக்கு வெளியேற்ற ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை … Read more