பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

0
59

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.

குடியிருப்பு பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழகம் கொலை மாநிலமாகவும்,போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினையும்,திமுக அரசையும் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார் சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும், சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும், போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதனை சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி,சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த விடியா அரசை வலியுறுத்துவதோடு,உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ,வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்.