ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு!! உச்சநீதிமன்றத்தில் வெளியான புதிய உத்தரவு!!

0
50
Rahul Gandhi Appeal Case!! A new order issued by the Supreme Court!!
Rahul Gandhi Appeal Case!! A new order issued by the Supreme Court!!

ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு!! உச்சநீதிமன்றத்தில் வெளியான புதிய உத்தரவு!!

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக பேசினார்.

அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று கூறி இருந்தார். இவருடைய இந்த பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி இவர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், இவருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 யின் கீழ் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனவே இந்த வழக்கை குஜராத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதற்கான வழக்கு விசாராணையில், “சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது. அது சரியானது தான் என்றும் இதற்கு எந்த வகையிலும் தடை கோர முடியாது என்றும் கூறி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இவருக்காக வாதாடிய வழக்கறிஞர்,

ராகுலுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், அவரால் நூறு நாட்களுக்கும் மேலாக தொகுதி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை மேலும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

இதனையடுத்து இந்த வழக்கிற்கு குஜராத் உயர்நீதிமன்றம் இரண்டு வாரத்தில் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி அன்று விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
CineDesk