பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!!  

0
65

பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்?இனிமேல் இதையும் செய்யக்கூடாது!!

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வப்போது கல்வித்துறை இயக்கம் வெளியிடப்படுவதுண்டு. அவ்வகையில் சமூக பாதுகாப்பு துறை மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து வேறு சில பள்ளிகளுக்கும் இவ்வகையான அறிவிப்பை அனுப்பப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது.

இந்த உத்தரவில் பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் பழக்க வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 கும் மேற்பட்ட விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அனைவரும் கைகளில் பிரேஸ்லெட் போன்ற எந்த வகையான பொருட்களையும் போடக்கூடாது. முக்கியமாக மாணவர்கள் அனைவரும் கைகளில் கயிறு கட்டக்கூடாது.

மேலும் மாணவர்கள் தலைக்கு எண்ணெய் வைத்து நன்றாக தலையை சீவிக் கொண்டு வர வேண்டும். கையில் பச்சை குத்துவது மற்றும் ஸ்டிக்கர் போன்ற டேட்டோக்களை ஒட்டுவது கூடாது. காதில் கம்மல் மற்றும் செயின் போடக்கூடாது. பிறந்தநாள் அன்று கலர் துணியை உடுத்தாமல் பள்ளி சீருடையில் வரவேண்டும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை இயக்கம் தெரிவித்துள்ளது.

 

 

author avatar
Parthipan K