திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

Photo of author

By Jayachandiran

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

Jayachandiran

திருவாதிரைக்கு முன்பு திமுக எம்.பி நடத்தும் கல்லூரியில் வெடித்த 4 வது சம்பவம்! கதவை திறந்து பார்த்தால் மீண்டும்…?

சென்னை பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கல்லூரி பெரம்பலூர் தொகுதி எம்.பியான பச்சமுத்து அவர்களுக்கு சொந்தமான கல்லூரியாகும்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆஷாராணா என்ற மாணவி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக் 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். வழக்கமாக சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு கிளம்பவிடும் ஆஷாராணா இன்று காலை வெகு நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் அறையின் கதவை உடைக்க முயற்சி செய்தனர்.

சில நிமிடங்களில் கதவு உடைத்தவுடன் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இரவு தங்கியிருந்த அறையில் மாணவி ஆஷாராணா துப்பட்டாவால் தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி இறந்ததற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

படிப்பினால் ஏற்பட்ட மன உளைச்சலா.? காதல் சம்பந்தபட்ட பிரச்சினையா..? குடும்பத்தில் ஏதாவது சிக்கலா..? அல்லது கல்லூரியில் ஆசிரியர்களாலோ, சக மாணவர்களாலோ ஏதேனும் பிரச்சினையா என்று பல்வேறு வகையில் விசாரணை உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதே கல்லூரியில் சென்ற வருடம் மூன்று மாணவ மாணவிகள் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.