ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் மானியம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

TN Assembly-News4 Tamil Online Tamil News1

ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் மானியம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும்,சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் மானியமாக வழங்க தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023 என்கிற புதிய கொள்கையை … Read more

நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன! ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன! ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள்!

சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் இன்றைய தினம் மறுபடியும் திறக்கப்பட்டு இருக்கின்றன. இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற காரணத்தால் ,நேற்று பள்ளிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு தினங்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலே கொரோனா பாதிப்பு காரணமாக சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பள்ளிகள், போன்ற கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு … Read more

இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதியில் புகுந்த பாம்பு!

இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதியில் புகுந்த பாம்பு!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் நிகழ்ந்த வியப்பான சம்பவம். அங்கு வசித்து வரும் அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தை நேரில் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். பிமல் குமார் என்பவர் புவனேஸ்வர் பகுதியில் வாழ்ந்து வருகிறார். அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது அந்த வாகனத்தின் என்ஜின் பகுதிக்குள் பாம்பு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகு பாம்புகள் ஆர்வலர்களுக்கு இத்தகவலை தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த அவர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி மிகவும் லாவகமாக … Read more

குஜராத்தில் நேர்ந்த கோர சம்பவம் – 13 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் நேர்ந்த கோர சம்பவம் - 13 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில், ஏடாகூடமாக ஓடிய லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மனிதர்கள் மீது மிகவும் வேகமாக பாய்ந்துவிட்டது. இந்த கோர சம்பவத்தில் 13 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நபர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி சம்பவ நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர … Read more

கூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக! நிதானமான பாஜக!

கூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக! நிதானமான பாஜக!

தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 150 தொகுதிகளில் தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக முடிவெடுத்திருப்பதாக தெரிகின்றது. மீதம் இருக்கின்ற 84 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்க அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிகிறது. அதோடு பாரதிய ஜனதாவிற்கு 38 தொகுதிகளை ஒதுக்கி தர ஆளும் தரப்பு அதிமுக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பாஜக இந்த விஷயத்தில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை பாஜகவிற்கு 38 சீட்டுகளை … Read more

ரத்தாகும் விவசாய கடன்? எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்!

ரத்தாகும் விவசாய கடன்? எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 18ஆம் தேதி நேற்றைய தினம் டெல்லிக்குச் சென்றார் சென்னையில் இருந்து விமானம் மூலமாக டெல்லி போனவருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அங்கே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, போன்ற முக்கிய தலைவர்களை முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல தமிழக அரசின் சார்பாக ஒரு சில கோரிக்கைகளும் மத்திய அரசிடம் வழங்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல அதிமுக ,மற்றும் பாஜக, கூட்டணி குறித்து … Read more

கமலைக் கலாய்த்த முன்னாள் அமைச்சர்! எதற்காக தெரியுமா?

கமலைக் கலாய்த்த முன்னாள் அமைச்சர்! எதற்காக தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுக்கள் கூட எதிர்வரும் தேர்தலில் கமலஹாசனுக்கு கிடைக்கப்போவதில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் உடைய பிறந்தநாள் விழாவில் பேசிய வைகைச்செல்வன் வாடகை கேட்ட காரணத்தால் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக என்னிடம் வாடகை எதுவும் கேட்காதீர்கள் நான் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்தார். அதேபோல டிடிவி தினகரன் இதுவரையில் உலக அரசியல் வரலாற்றில் வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே … Read more

ஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா? அம்பலமானது ரகசியம்!

ஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா? அம்பலமானது ரகசியம்!

ரஜினியின் மக்கள் மன்றத்தின் உடைய 4 மாவட்ட செயலாளர்கள் சென்ற 17ஆம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் .அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், திமுகவில் இணைவது தொடர்பாக ரஜினிகாந்திடம் அவருடைய கருத்தை கேட்டோம், அவரும் உங்களுக்கு விருப்பம் என்றால் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைத்துக்கொண்டு உங்கள் பணியை தொடருங்கள் அதற்கு நான் எந்தவிதத்திலும் … Read more

சசிகலாவின் கருணையால் முதல்வரான எடப்பாடி! ஸ்டாலின் விளாசல்!

சசிகலாவின் கருணையால் முதல்வரான எடப்பாடி! ஸ்டாலின் விளாசல்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட குரும்பம்பட்டி ஊராட்சியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.. அந்த சமயத்தில் அவர் பேசியதாவது, இங்கே வந்திருக்கும் மக்களாகிய நீங்கள் ஏதோ உங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதைப்போல வந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறீர்கள். அதனால் எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிய தயாராகி விட்டதாக நினைக்கிறேன் என்று தெரிவித்தார். அதோடு இதுவரையில், முதல்வராக இருந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கும் சரி இந்த எடப்பாடி தொகுதிக்கும் சரி என்ன … Read more

அதிமுகவில் சசிகலாவிற்கு பொதுச்செயலாளர் பதவியா? துணை முதல்வர் போட்ட திடீர் குண்டு!

அதிமுகவில் சசிகலாவிற்கு பொதுச்செயலாளர் பதவியா? துணை முதல்வர் போட்ட திடீர் குண்டு!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைய 73 ஆவது பிறந்த பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடலாம் என்று அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் ஆர். பி உதயகுமார் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் பங்கு பெற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது, வருடா வருடம் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பது அம்மா … Read more