தமிழகத்தில் மேலும் 5996 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் மேலும் 5996 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,996 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,09,238 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 102 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,050 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,752 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

#Breaking News: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்!!

#Breaking News: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்!!

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி வசந்த குமாருக்கு கடந்த 10-ம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் மூலம் தீீீவிர சிகிச்சை அளிக்கப்பபட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7 மணி அளவில் காலமானார்.

இனி புகார் அளிக்க காவல்நிலையம் செல்லத் தேவையில்லை:!

இனி புகார் அளிக்க காவல்நிலையம் செல்லத் தேவையில்லை:!

12 துணை காவல் ஆணையர்களின் தொலைபேசி எண்களை வெளியிட்ட மாவட்ட காவல் ஆணையர்! சென்னை மாவட்ட காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் கடந்த ஜூலை மாதத்தில், கொரோனா காலத்தின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு,பொதுமக்கள் தங்களின் புகார்களை வாட்ஸ்அப் வீடியோகாலின் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.இவரின் அணுகுமுறை மக்களுக்கு பெரிதும் பயன் பெறுவதாக இருந்ததினால் சென்னை பொதுமக்கள்,இந்த திட்டத்தினை விரிவுபடுத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று,தமிழக அரசு மற்றும் சென்னை மாவட்ட காவல் … Read more

அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவிப்பது கேலிக்கூத்தானது!! துணைவேந்தரின் கடுமையான எதிர்ப்பு

அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவிப்பது கேலிக்கூத்தானது!! துணைவேந்தரின் கடுமையான எதிர்ப்பு

ஆரியர் மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அறிவித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த முதல்வர் எடப்பாடியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடுமையாக சாடியுள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வினைத் தவிர மற்ற படங்களில் அரியர் வைத்தவர்கள், கட்டணம் செலுத்தி தேர்வு எழுதுவதற்காக காத்திருப்பவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் 10 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுத பணம் செலுத்தி இருக்கும் நிலையில், அவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. … Read more

கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்!

கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்!

கொடைவள்ளல் விருதை பெற்ற திருச்சி ஆயுதப்படை காவலர்! திருச்சியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் அரவிந்த் என்பவருக்கு ரத்ததான கொடை வள்ளல் என்ற விருதை வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. நவல்பட்டு காவல் பயிற்சி நிலையத்தை முதன்மை காவலராக பணியாற்றி வந்துள்ளார் அரவிந்த். இவர் தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வந்துள்ளார். இவர் தனது 18 வயதில் இருந்து வருடத்திற்கு நான்கு முறை என மொத்தம் 56 முறை இரத்த தானம் செய்துள்ளார். மேலும் ரத்த தானம் செய்ய தன்னார்வலர்களை … Read more

கட்டப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

கட்டப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

கட்டப்பட்ட கோயிலை இடிக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்! தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ஜாகிர் உசேன் தெருவுக்கு செல்லும் வழியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.இதனால் ஜாகிர் உசேன் பகுதி இஸ்லாமிய மக்களுக்கும் அருகிலுள்ள கனேசபுரத்தைச் சேர்ந்த இந்து மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.இது மட்டுமன்றி ஜாகிர் உசேன் பகுதியைச் சேர்ந்த ஷேக் முஹம்மத் என்பவருக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து அங்கும் கோயிலின் ஒரு பீடம் கட்டப்பட்டுள்ளது.இதனால் … Read more

வெங்காயம் வரத்து குறைந்ததால் இருமடங்கு உயர்ந்த வெங்காய விலை

வெங்காயம் வரத்து குறைந்ததால் இருமடங்கு உயர்ந்த வெங்காய விலை

சேலம் மாவட்டம் தலைவாசல் காய்கறி சந்தைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. வெங்காயம் உற்பத்தி அதிகமாக நடைபெறும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதாலும், ஊரடங்கு காரணமாக வெங்காயத்தின் சாகுபடி மற்றும் அதன் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டதனால், வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கிலோ வெங்காயம் விலை இரு மடங்கு உயர்ந்து விற்கப்படுகிறது. கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் இன்று கிலோ ரூபாய் … Read more

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து ஜெயக்குமார் விளக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து ஜெயக்குமார் விளக்கம்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி அதிமுக கூட்டணி அமைந்ததோ அதுபோலவே வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணியில் யார் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார் … Read more

அதிரடி சரிவில் தங்கம்! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

அதிரடி சரிவில் தங்கம்! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

அதிரடி சரிவில் தங்கம்! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை குறைந்துள்ளது.தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து ஒரு கிராம் 4,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கிராமிற்கு 40 ரூபாய் … Read more

தமிழக அரசு அறிவித்த அதிரடி தளர்வு!

தமிழக அரசு அறிவித்த அதிரடி தளர்வு!

தமிழக அரசு அறிவித்த அதிரடி தளர்வு! தமிழகத்தில் தொழில் துறை சார்ந்த பணிகள் மேம்படுவதற்கான ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த அடுத்த நிமிடமே எந்த ஊருக்கு வேணாலும் போகலாம் என்று இ- பாஸ் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் போக்குவரத்திற்காக தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இ – பாஸ் விதிகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிற மாநிலங்களில் இருந்து தொழில் சம்பந்தமாக … Read more