மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு!

மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு!

திமுக வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேனல் விசன் எனும் யூடியூப் சேனலில் தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான வீடியோ வெளியிட்டதாக மதன் ரவிச்சந்திரன் மீது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நிலத்தகராறில் நடைப்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் இரண்டு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் இதனை மையமாக வைத்து,அண்மையில் சேனல் விசன் எனும் யூடியூப் சேனலில் ‘கள்ளத்துப்பாக்கி கடந்த வந்த பாதை’ எனும் தலைப்பில் மதன் … Read more

பள்ளிகளில் மாணவர்களுக்கான புதிய சேர்க்கை கிடையாது – பள்ளிகல்வித்துறை அமைச்சர் கேஏசெங்கோட்டையன்.

பள்ளிகளில் மாணவர்களுக்கான புதிய சேர்க்கை கிடையாது - பள்ளிகல்வித்துறை அமைச்சர் கேஏசெங்கோட்டையன்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான புதிய சேர்க்கைகள் எதுவும் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.   ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணையில் 2 கோடி மதிப்பிலான பராமரிப்பு திட்டங்கள், அடிப்படை வசதிகள், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான மேம்பாட்டுப் பணிகளை இன்று அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.   அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புதிதாக எந்த ஒரு … Read more

சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

கொரோனா லாக் டவுனில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது கட்டுப்பாட்டு தளர்த்தப்பட்ட நிலையில் சீரியலுக்காக சூட்டிங் ஆரம்பித்துள்ளது. வெளிமாநிலங்களில் மாட்டிக்கொண்ட நடிகை, நடிகர்கள், சென்னை திரும்ப முடியாத நிலையில் அவர்களுடைய ரோலில் வேறு நபர்களை வைத்து சூட்டிங் எடுக்க, சின்னத்திரை முடிவு செய்துவிட்டது. இதனால் பல பிரபல சீரியல்களின் கதாநாயகிகள் மாற்றப்பட்டனர். அந்த வரிசையில் ஜீ தொலைக்காட்சியின் “இரட்டை ரோஜா” தொடரில் ஷிவானிக்கு பதிலாக, சாந்தினி ஒப்பந்தமாகியிருக்கிறார்.   இது குறித்து சாந்தினி கூறியதாவது:    … Read more

சுற்றுச்சூழலை காக்க வெகுண்டெழுந்த அண்ணனும் தம்பியும்! – கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் EIA-விற்கு எதிர்ப்பு.

சுற்றுச்சூழலை காக்க வெகுண்டெழுந்த அண்ணனும் தம்பியும்! - கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் EIA-விற்கு எதிர்ப்பு.

நடிகர் கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.   “காக்க… காக்க… சுற்றுச்சூழலை காக்க, நம் மௌனம் கலைப்போம்” என இஐஏ-விற்கு எதிராக ட்விட்டரில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.   சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் வெகுண்டெழுந்துள்ள நிலையில், தற்போது சூர்யாவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.   “என்விரொண்மெண்டல் இம்பாக்ட் அஸ்ஸஸ்மெண்ட்” விதிகள் என்னும் வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவ்வரைவானது … Read more

தல அஜித்தின் “வலிமை” படம் ஹிந்தியில் ரீமேக்!

தல அஜித்தின் “வலிமை” படம் ஹிந்தியில் ரீமேக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே திரட்டியுள்ளார். இதன் மூலம் அவருடைய படங்கள் அனைத்தும் மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. “நேர்கொண்ட பார்வை” படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குனர் ஹெச் வினோத்கூட்டணியில் வெளியானது. இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த  வெற்றியினால் அடுத்த படத்தையும் போனி கபூர், அஜித்தைக்கொண்டே உருவாக்கும் முயற்சியில் “வலிமை” என்ற படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்திலும் வினோத் தான் இயக்குனர். கொரோனா பொது முடக்கினால், இப்படத்தின் … Read more

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள் வாணியம்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர், ‌ஒருவர் புதுமையாக மெழுகை கொண்டு ஓவியம் வரைகிறார். அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). இவர் நகைக் கடை ஒன்று நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். குறிப்பாக, மெழுகினால் விஜயகுமார் வரையும் ஓவியங்கள் காண்போரை … Read more

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த திட்டம்!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த திட்டம்!

இளங்கலை பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும்,அரசின் அனுமதி கிடைத்ததும் முழு தகவல்களையும் வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் … Read more

பேருந்துகள் இயக்கப்படுமா? போக்குவரத்துத் துறை அளித்த முக்கிய தகவல் இதோ!

பேருந்துகள் இயக்கப்படுமா? போக்குவரத்துத் துறை அளித்த முக்கிய தகவல் இதோ!

  கொரோனா பரவி வந்த நிலையில் அனைத்து போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் தளர்வு அளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து மண்டலங்களுக்குள் விடப்பட்டது. ஆனால் மூன்று வாரங்களில் தொற்று அதிகரித்ததால் சேவை நிறுத்தப்பட்டது. பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள … Read more

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள்: விடைத்தாள் திருத்தும் பணி ஒரே நாளில் நிறைவு.

Re-Exam results for 12th class students: Answer sheet valuations work completed in one day.

மறுதேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் 2 முதல் 24 வரை நடத்தப்பட்டன. அதில் கடைசி நாளில் இறுதித் தேர்வில் கொரோனாவின் அச்சத்தால் 34,482 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மட்டும் ஜூலை 27 அன்று தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த மறுதேர்விலும் 876 பேர் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் … Read more