சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா!

சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா! 

நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது டெஸ்ட் போட்டியில் 177 ரன்களில் ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பார்டர் கவாஸ்கர்  கோப்பைக்கான டெஸ்ட் மேட்ச் முதலில் நடத்தப்படுகிறது இதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் அந்த வேகத்திலேயே வெளியேறினர் கவஜா சிராஜ் பந்து வீச்சில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். வார்னர் ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்.

தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை அடுத்து வந்த  ஸ்மித்தும் லபுஷேனும் சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் ஸ்மித் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்கள். மாட் ரென்ஷாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சிறிது நிலைத்து விளையாடி 36 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார்.  அடுத்து வந்தபேட் கம்மின்ஸ் ஆறு இடங்களில் வெளியேறினார். மறுமுனையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நிலைத்து விளையாடினார். அவரும் அடுத்து 31 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 127 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. அசத்தலாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 56 ரன்கள்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.

பெட்டி பாம்பாக அடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்… 100 ரன்களுக்குள் ஆல் அவுட்

பெட்டி பாம்பாக அடங்கிய தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்… 100 ரன்களுக்குள் ஆல் அவுட் இந்தியா மற்றும் தென் ஆப்பிர்க்கா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் முடிந்தது. இதையடுத்து இன்று இந்தியாவுடனான ஒருநாள் போட்டித் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த ஒரு நாள் தொடரில் இந்திய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷிகார் தவான் தலைமையேற்றுள்ளார். டி 20 உலகக்கோப்பைக்காக சீனியர் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்ட நிலையில் ஷிகார் … Read more