திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றா ? அச்சத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் !

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து பெங்களூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தினேஷ் குண்டுராவ் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அடுத்த 10 நாட்களுக்கு நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் … Read more

மத்திய அரசின் கடன் நிலுவை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது..!! ஷாக் ரிப்போர்ட்!

இந்திய வரலாற்றில் முதன் முறையாக மத்திய அரசின் கடன் நிலுவை தொகை ரூ.100 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் கடன் நிலுவை தொகை படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கொரோனா சூழலினால் அதிக அளவு மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது. அதன் காரணமாகவே மொத்த கடன் அளவு 100 லட்சம் … Read more

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாரடைப்பால் காலமானார்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள அந்தனப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர் ஷாகுல்ஹமீது. நடந்து முடிந்து இடைத்தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சாகுல் ஹமீது அறிவிக்கப்பட்டிருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து … Read more

தமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா; மேலும் 79 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,334 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

மேலும் ஒரு முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!!

கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு (வயது 47) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று உறுதியாகியுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாததால் … Read more

தமிழகத்தில் மேலும் 5928 பேருக்கு கொரோனா தொற்று.. இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 96 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,031 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று!

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கொரோனாவால் பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பலரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி … Read more

இந்தியாவில் 64 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,39,712 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 943 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 63,657 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 64,982 பேர் … Read more

கொரோனா நோயாளிகள் புகார்: கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவறை மிக மோசமாக இருக்கிறது என்று நோயாளிகள் புகார் தெரிவித்ததை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் தாமாக முன்வந்து கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு உள்ளது. இங்குள்ள சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லடி கிருஷ்ண ராவ், சென்றிருந்தார். அப்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று … Read more

ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!! மகிழ்ச்சியில் பக்தர்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவாக கோவில் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அர்ச்சகர் ஒருவர் நோய்த் தொற்றால் உயிரிழந்தார் … Read more