1000 கோடி எல்லாம் இல்ல! இது அதுக்கும் மேல! அமலாக்கத்துறை வட்டாரத்தில் கசிந்த தகவல்!

தமிழ்நாட்டில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான ஊழல் பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை (ED) நடத்திய விசாரணையில், தமிழக அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் (TASMAC) மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம், மதுபான உற்பத்தியாளர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை வழங்கிய எஸ்.என்.ஜே., கால்ஸ் போன்ற … Read more

டாஸ்மாக்கில் ரூ1000 கோடி ஊழல் என்றால் ஆதாரம் எங்கே? பொங்கி எழுந்தார் அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படும் டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில், அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட மொத்தம் 25 இடங்களில் நடைபெற்றன. இந்தச் சூழலில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக அரசியல் மற்றும் சமூக … Read more

டாஸ்மாக் தொடர்ந்து மின்சார வாரியத்திலுமா? ரூ.6920 கோடி இழப்பு – அம்பலப்படுத்துகிறார் அன்புமணி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு 51% ஆக இருந்தும், மின்வாரியத்தின் வருவாய் 96% உயர்ந்திருந்தும், ரூ.6,920 கோடி இழப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது ஆட்சியில் ஊழல் நிகழ்வதற்கான ஒரு முக்கிய சான்றாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 2022, 2023 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, மின்வாரியத்தின் வருவாய் ரூ.97,757 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட லாபம் ஏற்படாமல், மின்வாரியம் தொடர்ந்து இழப்பை சந்தித்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் … Read more

1000 கோடி டாஸ்மாக் ஊழல் ED சொன்னது உண்மையா? – அவசர அவசரமாக செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தின் மீது எழுப்பிய ஆயிரம் கோடி முறைகேடு குறித்த புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பெயர்களில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கைகள் மத்திய அரசிற்கு விருப்பமில்லாததால், அமலாக்கத்துறையை பயன்படுத்தி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியுள்ளது என்று கூறினார். … Read more

டாஸ்மாக் ஊழலில் சிக்கப்போகும் அதி முக்கிய புள்ளிகள்: அமலாக்கதுறையின் அறிக்கை – தமிழக அரசியலில் உச்ச பீதி!

டாஸ்மாக் தலைமையகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பல தனியார் நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பல தனியார் மதுபான நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை மாற்றியும் அரசுக்கு மோசடி செய்துள்ளன. திட்டமிட்ட முறையில் நடைபெற்ற மோசடி அமலாக்கத்துறை அறிக்கையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய … Read more

அடுத்தடுத்து சிக்கப்போகும் பெரிய அரசியல் புள்ளிகள்: அமலாக்கத்துறை ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

தமிழக அரசின் சார்பில் செயல்படும் ‘டாஸ்மாக்’ நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள 4,830 சில்லறை மதுக்கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இந்த மதுக்கடைகளுக்கு ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யும் முறையில் பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதன்மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடக்கிறது என்றும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை சோதனை புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பெருமளவில் மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் மீது … Read more

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் மக்கள்.. காரணம் என்ன..??

People are threatening to boycott the election.. What is the reason..??

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் மக்கள்.. காரணம் என்ன..?? தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.இந்நிலையில் சில பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி வருகிறார்கள்.  அந்த வகையில் ஏற்கனவே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய விடாமல் அதிகாரிகளை திருப்பி அனுப்பியதோடு,தேர்தலை புறக்கணிக்கப் … Read more

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!!

Tasmac shops in Tamil Nadu will now operate only from 12-10 pm. Minister's order...!!!

டாஸ்மாக் திறந்திருக்கும் நேரம் மற்றும் புதிய விதிமுறைகள்!! அமைச்சர் உத்தரவு!! தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள் மற்றும் துணை ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் ஒன்றை அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தினார். அந்த கூட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் பற்றிய சில விதிமுறைகள் பற்றி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப் படவேண்டும். இந்த கால நேரத்தில் எந்த விதமான … Read more

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!!

Tasmak sells alcohol for extra money!! Minister alert!!

கூடுதல் பணம் பெற்று மது விற்பனை செய்யும் டாஸ்மாக்!! அமைச்சர் எச்சரிக்கை!! கோடை காலத்தில், மக்களின்  மின் தேவை அதிகரித்து தான் இருக்கும். இந்த மின் தேவையை சாமாளிக்க, மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது. விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை அளிப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும் … Read more

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!!

functions-of-liquor-vending-machine-the-definition-released-by-tasmac

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!! சென்னையில் 4 மால்களில் உள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்வதாக புகார்கள் வந்ததை … Read more