அரசிற்கு எதிராக திரும்பிய விவசாயிகள்! ஸ்தம்பிக்கபோகும் தமிழகம்!

மத்திய அரசு அலுவலகங்கள் முன் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்திருக்கின்றார். இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும், அழிக்கும் வகையில், மத்திய அரசு வேளாண் துறைக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையிலான, மூன்று 3 வேளாண்சட்டங்களை எதிர்க்கும் விதமாக நாடு முழுவதிலும் விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக, மத்திய அரசு கொண்டு … Read more

காவிரி நீர் கிடைப்பதில் புதிய சிக்கல் :! தண்ணீர் கிடைக்குமா என்ன எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் ??

கர்நாடக மாநிலத்தில் நடப்பாண்டில் அதிக அளவு கரும்பு சாகுபடி செய்துள்ளதால் , தமிழகத்துக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டெல்டா பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றன. கர்நாடக அரசு காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி தண்ணீரை மாதம் வாரியாக கணக்கிட்டு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.34 , ஆகஸ்ட் 46, செப். 36.76, ஆக். … Read more

75 ரூபாய் நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் FAO எனும் உணவு மற்றும் வேளாண் சம்பந்தப்பட்ட அமைப்பின் 75 ஆவது ஆண்டுவிழாவில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார். 75 ரூபாய் புதிய நாணயத்தை இந்த நிகழ்ச்சியில் நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நாட்டில் உள்ள மக்களின் பொருளாதார சிக்கல்களை சரி செய்வதிலும் மேலும் மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை அகற்றவும் மற்றும் வேளாண் துறையை ஊக்குவிப்பதிலும் முன்னுரிமை செலுத்தி வருவதை காட்டும் விதத்தில் இந்நிகழ்ச்சி அமைய … Read more

இந்திய விவசாயிகளுக்கு மரண தண்டனை வழங்கிய மத்திய அரசு :! ராகுல் காந்தி டுவிட் !!

கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் , நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.அதில் விவசாயிகளுக்காக வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தனர். இதற்கு பஞ்சாப், ஹரியானா ,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்தவர்கள் ,இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த்ததோடு , விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதனால் … Read more

விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு : டிராக்டர் மூலம் அமைதிப் பேரணி நடத்திய விவசாயிகள்

விவசாய சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்த்து பஞ்சாபில் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு ,தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா ,விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதமளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மத்தியமைச்சரவையில் கூறினர். ஆனால்,இந்த மூன்று மசோதா நிறைவேற்ற த்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அவையில் பரபரப்பு நிலவியதன் காரணமாக … Read more

நான் ஒரு விவசாயி : மு க ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது : முதல்வர் பேச்சு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாவட்டங்கள் தோறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் .பின்னர், செய்தியாளர்களிடம் சந்தித்த முதல்வர் பழனிசாமி,நான் ஒரு விவசாயி என்றும் மு.க.ஸ்டாலினுக்கு தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில்,நான் ஒரு விவசாயி என்பதால் ஏழை விவசாய … Read more

எதிர்ப்புகளை மீறி நிறைவேறிய விவசாய மசோதா திட்டங்கள் – ஆவேசத்தில் எதிர்க்கட்சிகள்!

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விவசாயிகளின் உற்பத்தி வணிகமும் மற்றும் வர்த்தக மசோதா ( மேம்பாடும், வசதியும் ) 2020, அத்தியாவசிய பொருட்களின் மசோதா (  திருத்தம் ) 2020, விலை உறுதி செய்தல் மற்றும் பண்ணை மசோதா (  அதிகாரம் அளித்தலும், பாதுகாப்பும் ) 2020  ஆகிய மூன்று மசோதாக்களும் இன்று மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதனால் இன்று  இந்த மசோதாக்களை எதிர்த்து கடும் அமளி ஏற்பட்டது. ஆனால் மக்களவையில் பாஜக தனது … Read more

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் !!

2020-ஆம் ஆண்டு சுமார் 50,000 இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படுமென தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸல் மக்கள், தன் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், விவசாயம் மட்டும் எந்தவகையான பாதிப்பும் இல்லாமல் இருப்பதனால் ,சொந்த ஊருக்குச் சென்று விவசாயம் செய்ய தொடங்கிவிட்டனர். இந்நிலையில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், நடப்பாண்டிலிருந்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க என … Read more

நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள் !!

தர்மபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். தர்மபுரி மாவட்ட விவசாயிகள் சிறு தானிய மற்றும் பணப் பயிர்களான பருத்தி மற்றும் துவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளனர். தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகளின் கிணறு மற்றும் ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனையடுத்து நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருவதால் விவசாயிகள் தற்போது, நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு … Read more

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் மோசடி : தமிழக வேளாண் துறை செயலர் கூறும் தகவல் !!

இந்திய விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டுவரும் பிரதமரின் கிசான் திட்டத்தில் அதிக அளவில் மோசடி நடந்திருப்பதாக தமிழக வேளாண் துறை செயலர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தில் சுமார் 110 கோடிக்கும் அதிகமான முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது .இந்த விவகாரம் தொடர்பாக 37 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் , மற்றும் 80 அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி … Read more